பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46



இராசாதிராசன் இளவரசனாய் இருக்கும் காலத்தில், ஆகதமல்லசோமேசுவர்ன் என்பான், சாளுக்கிய நாட்டில் அரசு கட்டில் ஏறினான். அரியணையில் அமர்ந்ததும், தன் ஆற்றலை நாட்டவர்க்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் அவனைப் பற்றிக்கொண்டது; சேணெடும் நாட்டினராகிய சோழர் தன் அண்டை நாட்டில் ஆணை செலுத்துவது தன் ஆண்மைக்கு இழுக்காம்; தன் ஆற்றலைப் பழிப்பது போலாம் என்று எண்ணினான்; உடனே சோழர் ஆட்சிக் குட்பட்ட ஊர்கள் சிலவற்றைக் கவர்ந்து தன் காவற்கீழ் வைத்துக்கொண்டான்; அது கேட்டான் சோழர்குலப் பேரரசன் இராசேந்திரன். அவ்வளவே, சோழர் பெரும் படையொன்று இராசாதிராசன் தலைமையின் கீழ்த் துங்க பத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டில் புகுந்து விட்டது. பாய்ந்துவரும் சோழர் படையைத் தடுத்து நிறுத்திப் போரிட்டுத் துரத்த, ஆகவமல்லன் மக்கள் இருவரும், படைத் தலைவர் மூவரும் படையோடு விரைந்து வந்தனர். இரு திறம்படையினருக்கும் பெரும் போர் நிகழ்ந்தது; போரில் சாளுக்கியப் படைத் தலைவர் இருவர் களத்திலேயே மாண்டனர்; அஃதறிந்த மன்னன் மக்கள் இருவரும் எஞ்சிய படைத் தலைவனோடு களத்தை விட்டோடி எங்கோ கரந்துகொண்டனர். இராசாதிராசன் சாளுக்கிய படைத் தலைவர் களத்தில் விட்டுச் சென்ற களிறுகளையும், குதிரைகளையும் கணக்கிலாப் பிறபொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினான். திரும்பும் சோழர் படை வாளா திரும்பாது, வழியிடையுள்ள, கொள்ளிப்பாக்கைடோலும் சாளுக்கிய ஊர்களை எரியூட்டி அழித்தவாறே வந்து சேர்ந்தது.

இரண்டாண்டுகள் கழிந்தன; மேலைச்சாளுக்கிய மன்னன், மீண்டும் மண்ணாசைக்கடியனாகிவிட்டான்; சோழர் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் மீண்டும் அடியிட்டான் மேலைச்சாளுக்கியர்களை முற்றிலும் வென்று, அவர்களைத் தமக்கு வழிவழி அடிமையாக வைத்துக்