பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56



வீரராசேந்திரன் சிந்தையும் செயலும் வடவெல்லைப் போர்களிலேயே சென்றுள்ளன என்பதை உணர்ந்த, சேர பாண்டிய சிற்றரசர் சிலர், அந்நாடுகளில், அவன் ஆட்சியை எதிர்த்துக் குழப்பம் விளைவித்தனர். வட நாட்டுப் பெரும் போர்களில் ஈடுபட்டிருக்கும் அந்நிலையில், தென்னாடு அமைதி இழப்பது, ஆட்சியின் அரண் அழிவது போலாம் என அறிந்த வீரராசேந்திரன், அக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த குறுநிலத் தலைவர்களைக் கொன்றான். அவர்க்குத் துணையாய் நின்று போரிட்ட படைகளையும் கைப்பற்றிக் கொண்டான். உயிர் பிழைத்த ஒரு சிலரும், அவன் ஆணைக்கு அடங்கி வாழ முன்வந்து, அவன் விரும்பும் திறை செலுத்தினார்


தமிழ் நாட்டில் இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஆகவமல்லன் விடுத்த அறைகூவல் வந்து ஒலித்தது. இம்முறை, மேலைச்சாளுக்கியப் பெரும்படைக்கு, கங்கர்களும், நுளம்பர்களும், காடவர்களும், வைதும்பர்களும் துணையாக வந்து நின்றார்கள். ஆனால், அந்தோ! அவர்கள் ஆரவாரமெல்லாம் வீரராசேந்திரன் களம்புகும் வரையே காட்சி அளித்தன. அவன் களம் புகுந்தான்; ஆகவமல்லன் படைகட்குத் தலைமை தாங்கி நின்ற படைத்தலைவர் அறுவரும்.அப்போதேமாண்டனர்:துணை வந்த அந்நான்கு நாட்டவரும் உயிர் இழந்தனர்; பல நாட்டார் துணை செய்யப் பெரும்படையோடு களம் புகுந்தும் வெற்றி பெறமாட்டாது வீடு திரும்பினான் ஆகவமல்லன்.

ஆகவமல்லன் அரண்மிக்க இடம் புகுந்து ஒளிந்து கொண்டான்; அவன் மனமோ, அவமானத்தால் குன்றி விட்டது: வீரராசேந்திரனை வெற்றிக்கொள்ளாது வாழ்வதைக் காட்டிலும், களத்தில் வீழ்ந்து மண்ணாவதே மேல் எனக் கருதிற்று; உடனே, பண்டு போரிட்டுத் தோற்ற கூடல் சங்கமப் போர்க்களத்திற்குத் தான் வருவதாகவும்,