பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
57



அங்குத் தன்னோடு போரிட வரும்படியும், அவ்வாறு வராதவர் போரில் புறமுதுகு இட்டவராகவும், புரட்ட ராகவும் கருதிப் பழிக்கப்படுவர் என்றும், வீரராசேந்திரனுக்கு ஒலை போக்கினான். ஒலைவரப் பெற்ற சோழர் குலப் பெருவீரன், உள்ள மகிழ்ச்சியால், உருண்டு திரண்ட தோள்கள் இரண்டும் பருத்துக்காட்ட விரைந்து களம் அடைந்து, ஆகவமல்லன் வரவுக்காகக் காத்துக் கிட ந்தான்.

ஆனால் ஒலைபோக்கிய ஆகவமல்லனால் கூடல் சங்கமக் களத்திற்கு வர இயலவில்லை. அவன் உடல்நலம் திடுமெனக்குன்றிவிட்டது; வாடாவெப்புநோய் அவனைப் பற்றி வாட்டிற்று, மருத்துவர் பலமுயன்றும் தணிக்க மாட்டா அக்கொடு நோயால், தாங்கலாகாத துன்பம் அடைந்த ஆகவமல்லன், துங்கபத்திரை ஆற்றில் வீழ்ந்து உயிர் துறந்து போனான்; ஆகவமல்லனுக்கு நேர்ந்த இக் கதியை வீரராசேந்திரன் அறியான்; அதனால் ஒரு திங்கள் வரையும் ஆங்குக் காத்துக்கிடந்த அவன் ஆகவமல்லன் ஆட்சிக்கு அடங்கிய அவன் சிற்றரசர் பலரை வென்று துரத்தினான்; அவர் நாடுகளை எரியூட்டினான்; துங்க பத்திரைய்ாற்றின் கரையில் வெற்றித்துண் ஒன்றை நாட்டினான். ஆகவமல்லனைப் போன்ற சிலை ஒன்று செய்து, அவனும், அவன் மக்களும் தன் பால் ஐந்துமுறை தோற்ற செய்தி பொறிக்கப் பெற்ற ஒரு பலகையை அதன் மார்பில் மாட்டி மானபங்கம் செய்தான்.

வீரராசேந்திரன், இவ்வாறு கூடல்சங்கமக் களத்தில் வெற்றிக் களியாட்டங்களில் மூழ்கியிருந்த அதேநேரத்தில், ஆகவமல்லனுடைய இரண்டாம் மக னாகிய விக்கிரமாதித்தன் கீழைச் சாளுக்கியரை வென்று வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்: அஃதறிந்த விர ராசேந்திரன், கூடல் சங்கமத்திலிருந்தே வேங்கிநாடு நோக்கிப் புறப்பட்டான்; இடையில் ஆங்காங்கே வந்தெதிர்த்த மேலைச்சாளுக்கியப் படைகள் அனைத்தையும்