பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90



என்ற காரணத்தால் பராந்தகன் வென்று கைக்கொண்ட ஈழநாட்டைக் குலோத்துங்கன் இழந்துவிட்டான்: ஈழத்தைக் காத்திருந்த சோழர் படை சோணாடு வந்தடைந்தது. கடல் கடந்த நாட்டிலும் சோழர் ஆணை நடைபெற்றது என்ற புகழ் குலோத்துங்கன் காலத்தில் அழிந்து விட்டது.

கங்கபாடிப்போர்: ஈழ நாட்டை ஆட்சித் தொடக்கத்தில் இழந்துவிட்ட குலோத்துங்கன் கங்கபாடி நாட்டைத் தன் ஆட்சியின் இறுதியில் இழந்துவிட்டான். மைசூர் மாநிலத்தின் தென்பகுதியும், சேலம் மாவட்டத்தின் வட பகுதியும் உள்ளடங்கிய கங்கபாடி, முதல் இராசராசன் காலத்தில், சோழர் தலைமையை ஏற்று, சோணாட்டின் வடமேற்கு எல்லையைக் காத்து வந்தது; தழைக்காட்டைத் தலைநகராகக் கொண்ட அந்நாட்டின் ஆட்சிப் பொறுப் பைத் தகடுர் அதிகமான் மரபில் வந்தாரிடையே ஒப் படைத்திருந்தான் இராச ர்ாசன், அந்நாள் முதல், சோழர்க்குப் படைத்துணை அளிக்கும் அதியமான்களே, இந்நாட்டை ஆண்டு வந்தனர்; அந்நல் வாய்ப்பும் குலோத்துங்கனுக்கு இல்லையாயிற்று. போசள வேந்தன் பிட்டிக விஷ்ணுவர்த்தனன், தன் தண்ட நாயகன் கங்கராசன் துணை கொண்டு அதிகமானைத் தழைக் காட்டிலிருந்து வென்று துரத்திவிட்டான். தமிழர்கள், கங்கபாடியைக் கைவிட்டுச் சோணாடு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் தென்கோடி எல்லையில் தோல்வி கண்ட குலோத்துங்கன், அந்நாட்டின் வடமேற்கிலும் தோல்வி கண்டான்; சோழர் பேரரசின் எல்லை சுருங்கத் தொடங்கி விட்டதுபோலும்!

வேங்கிநாட்டுப் போர் தான் ஏற்றுக்கொண்ட சோழர் பேரரசிற்கு உட்பட்ட நாடுகளாகிய ஈழத்தையும், கங்க பாடியையும் இழந்ததோடு குலோத்துங்கன், தன் தந்தை யிருந்து ஆண்டதும், தனக்கே உரியதுமாகிய வேங்கிநாட்டையும் இழந்துவிட்டான். வேங்கிநாட்டு அரியணையில் தன் சிறியதாதையை அமர்த்திவிட்டுச் சோணாட்டு