பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91



அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சிறிய தந்தை மாண்டபிறகு, வேங்கிநாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தன் மக்கள் பால் ஒப்படைத்திருந்தான். குலோத்துங்கன் மக்களாகிய, இராசராச மும்முடிச் சோழன், வீரசோழன், இராசராச சோழ கங்கன், விக்கிரம சோழன் என்ற இந் நால்வரும், நாற்பத்திரண்டு ஆண்டு காலம், அந் நாட்டு அரியணையில் ஒருவர் பின் ஒருவராய் அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலத்திலேயே, வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்து மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் உள்ளத்தில் கருப் பெற்று வளர்ந்து வந்தது. குலோத்துங்கனுக்குப் பிறகு சோணாடு ஆண்ட விக்கிரமன் ஆங்கிருக்கும் வரை, அவனுக்கு அவ் வாய்ப்புக் கிட்டவில்லை. தனக்கு முதுமை வந்தடைந்து விட்டது, மன்னர் மன்னனாய், இனி நெடுங்காலம் வாழ்வது இயலாது என்ற உணர்வு வரப்பெற்ாதும், குலோத்துங்கன், வேங்கி நாட்டில் வாழும் விக்கிரமனைச் சோணாட்டிற்கு வருவித்து இளவரசுப்பட்டம் சூட்டி உடன் வைத்துக் கொண்டான். வேங்கி நாட்டைக் காக்கும் பணியை, வெல. நாண்டுத் தெலுங்குச் சோழர் வழி வந்தானொருவன்பால் ஒப்படைத்திருந்தான்.வேங்கி நாட்டில் விக்கிரமன் இல்லை என்பதை அறிந்துகொண்ட விக்கிரமாதித்தன், போரிட்டு அதைத் தன்னுடையமையாக்கிக் கொண்டான். சோழர் பேரரசின் வடகிழக்கு எல்லையில், வலுவுள்ளநாட்டாரின் துணை வேண்டும் என அறிந்து, இராசராசன், தன் மகளை மணம் செய்து கொடுத்து உறவுகொண்ட வேங்கி நாட்டை அந்நாட்டின் உரிமை பெற்ற கொற்றவனாகிய குலோத்துங்கனே இழந்து விட்டான்.

கலிங்கம்கொண்டவன், கடாரம் வென்றவன் என்ற பாராட்டிற்குரிய பெருவீரனாகிய குலோத்துங்கன், ஈழத்தையும், கங்கபாடியையும், வேங்கியையும் இழந்தமைக்கு இறங்கினானல்லன்; அவற்றை மீட்கும் உள்ளுரம் அவனுக்கு உண்டாகவில்லை என்பது விந்தை