பக்கம்:கலியன் குரல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கலியன் குரல் என்பது அவர் காட்டும் சோலை. ஒளிமல்குகின்ற முத்து களையும், அழகிய பவளத்துளிர்களையும் மலர்ந்த தாமரைப் இபாய்கைகளையும் உடைத்தான சோலைகளால் சூழப்பட்டது திருப்புல்லாணி’ என்கின்றார். தாதுமல்கு தடம்சூழ் பொழில் (3) போது நாளும் கமழ் பொழில் சூழ்ந்த, புல்லானி (3), செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி' (9, 4: 6), பூஞ்செருந்தி பொன் சொரியும். புல்லாணி’ (8), போதலரும் புன்னை சூழ் புல்லாணி (9) என்ற அப்பெருமானின் வாக்குகளை எண்ணி மகிழ்கின்றோம். மேலும், கள்ளவி ழும்மலர்க் காவியும் து மடற் கைதையும் புள்ளும் அள்ளந் பழனங்களும் சூழ்ந்த புல்லாணி ' (கள்-மது; அவிழும்-ஒழுகும்; காவி-செங்கழு நீர்ப் பூ; துரமடல் - வெளுத்த மடல்; கைதை - தாழை; அள்ளல் - சேறு; பழனம் - வயல்) என்று அந்தத் திவ்விய தேசத்தின் சூழலை நெய்தல் நிலக் கருப்பொருளைக் கொண்டே வருணித்திருக்கும் எழில் நலம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. ஆயினும், இன்று அச்சூழ் நிலையை நாம் காணமுடிகின்ற தில்லை! புதிய இலக்கிய உத்திகள்: சங்க இலக்கியக் காலத்திற்குப் பிறகு பக்தி இயக்கக் காலத்தில் யாப்புமுறையிலும் விரைப்பான நடைப் போக்கிலும் முற்றிலும் மாறியன. கற்றவர்க்கு உரியன வாகப் பாடப் பெற்ற பாடல்களின் போக்கு மாறி கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிக்களிப்புடன் டாடுவதற்கு ஏற்றவாறு சந்தக் கொழிப்பும் இசை ஏற்றமும் கொண்ட பாசுரங்கள் பெருகின்; 14. பெரி. திரு. 9, 3: 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/105&oldid=775474" இலிருந்து மீள்விக்கப்பட்டது