பக்கம்:கலியன் குரல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$08 கலியன் குரல் பவத்தைப் பெற விரும்புதலும் பேதைமையின் பணியாகும் என்று விளக்குவர் பரகாலர். இன்னொரு பழமொழியைக் காண்போம். தாய் இருக்க மனை நீராட்டுதல்’ என்பது பழமொழி. முழுமுதலாம் முதற் டவுள் திருமால் இருக்கப் பிறதெய்வ வழிபாடு செய்யும் உல கினர் இயல்பை இப்பழமொழியால் விளக்குவர் திருமாங் கையாழ்வார். பேய் இருக்கும் நெடுவெள்ளம் பெருவிருப்பின் மீது ஒடிப் பெருகு காலம் தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றுஇருத்தி உய்யக் கொண்டான் போய் இருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டிர் பெற்ற தாய் இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே' (நெடுவள்ளம்-பிரளயம்; போயிருக்க-வெறுக்கும் படி யாக; மாட்டாத-செய்யமாட்டாத, தகவு-இரக்கம்} என்ற பாசுரத்தில் இவ்விளக்கத்தைக் காணலாம், ஈண்டுத் தாய் என்பது திருமாலுக்கும், t£3 శ}డః என்பது அசேதனப் பொருளுக்கும் உவமைகளாக வந்தன. மகளிர் கருவுயிர்த்தவுடன் தாயையும் சேயையும் நீராட்டுதல் மலை நாட்டு வழக்கமாக முற்காலத்தில் இருந்தது; கருவுயிர்த்தவுடன் தாயை நீராட்டு வது பலவித இடையூறுகட்குக் காரணமாவதால் அத்தாய்க்குப் பதிலாக ஒரு மனைக்கட்டையை நீராட்டுவது இடைக்காலத்து வழக்கமாக இற்றைக்கும் இருந்து வருகின்றது. அதனைத் திருவுள்ளம்பற்றி அருளிச் செய்தது. இது. தேவதாந்தரத்தை .ெ இரு 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/115&oldid=775495" இலிருந்து மீள்விக்கப்பட்டது