பக்கம்:கலியன் குரல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கலியனின் வாழ்வும் வழியும் பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளிசேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆரா இன்னமுதை தென்அழுந்தையில் மண்ணி நின்ற காரார் கருமுகிலைக் கண்டு களித்தேனே, 84 என்று எக்களிப்புடன் பாடுவதைக் காணலாம். எம்பெருமான் ஆசாரியனாக நின்று திருமந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார், * தூவிசேர் அன்னம் துணையொடு புணரும் சூழ்புனல் குடந்தையே தொழுதுஎன் தாவினால் உய்ய நான்கண்டு கொண்டேன் நாராய னாஎன்னும் நாமம், கி என்று பாடுகின்றார். 'ஆராஅமுதப் பெருமனைத் திருக்குடத் தையில் சேவித்தேன்; தீயபொருள்களைப் பேசின வாயாலே திருமந்திரத்தை அநுசந்தித்து ஸ்வரூபம் பெற்றேன்' என்று மகிழ்கின்றார். துளவிசேர் அன்னம் துணையொடு புணரும்’ என்றது பெருமாளும் பிராட்டியாரும் பிரியாது வாழும் சேர்த்தியைச் சொன்னபடியாம். ஈண்டு அன்னம் என்றது பெருமானை, துணை என்றது பிராட்டியை. நம்முடைய குற்றங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பிப்பவனும் பிரியாது வாழும் இடம் குடந்தை என்றபடி, 85. டிெ 1:1; 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/50&oldid=775641" இலிருந்து மீள்விக்கப்பட்டது