பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35


தான் செய்து வைத்திருந்த தனது பார்க்கும் குழாயினைக் கலீலியோ தனது சொந்த நகரமான வெனிசுக்கு வெற்றி மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றார்.

அந்தக் கருவி அப்பொழுது அவருக்கு ஒரு விளையாட்டுக் கருவியாகவே திகழ்ந்தது. ஆனால், அந்த விளையாட்டுக் கருவியினைக் கண்டு மகிழ்ச்சி பெற்றிட ஒவ்வொருவரும் விருப்பம் கொண்டார்கள்.

மனிதக் கண்ணால் காண முடியாத தொலை பொருட்களை, இந்த ஆச்சரியமான விளையாட்டுக் கருவியின் உதவியால் தெளிவாகப் பார்த்து விடலாம் என்றால், யாருக்குத்தான் அதனைப் பார்க்க ஆசை ஏற்காது.

அதனால், வெனிசிய நகரத்துப் பெருமக்கள் அந்தக் கருவியினைக் கண்டுகளித்தார்கள். ஊர் மக்களே கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து அதைப்பார்த்து விட்டுச் சென்ற வண்ணம் இருந்தார்கள்.

கலீலியோவின் இந்தத் தொலை நோக்கிக் குழாயை வெனிஸ் நகர மக்கள், பார்க்க; மிக உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்றுக்கொண்டார்கள்.

சுமார் இரன்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்ணுக்கு தோன்றக் கூடிய மிக நீண்ட தூரத்தில் இருந்து கடலில் வருகின்ற கப்பல்களை ஒன்றன் பின் ஒன்றாகவே பார்த்தார்கள்.

ஐம்பது மைல் தூரத்தில் கப்பல் இரும்போது, அது பதினைந்து மைல் தொலைவிலேயே தெரிவது போன்ற ஓர் அற்புதக் காட்சியை மக்கள் மகிழ்ச்சியோடு கண்டார்கள்.

வான நூல் உலகில் கலீலியோவின் தொலைநோக்கி ஒரு புதுமைப் புரட்சியை உருவாக்கியது. இன்று நாம்