பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசன் சூளாமணிச் சோழன்

152

அரசாங்க அமைப்பு


அரசன் சூளாமணிச் சோழன் திருச்சிராமலையைத் தரிசித்து நீங்கும்போது ஒரு கோழி பறந்து வந்து தடுக்க, அவ்விடம் பெருமையுடையது என்று அங்குக் கோழி என்னும் பட்டணம் அமைத்தான். அதனால் கோழிவேந்தன் என்னும் பெயர் பெற்றான் (செவ்வந்தி புராணம்).

அரசாங்க அமைப்பு: ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிருவாகப் பகுதி, சட்டமியற்றும் பகுதி, நீதிப் பகுதி ஆகிய மூன்று பகுதிகளும் உண்டு. இந்தப் பகுதிகளும், அவற்றின் அமைப்பும், அதிகாரங்களும், ஒன்றற்கொன்று உள்ள தொடர்பும், இங்கிலாந்தைத் தவிர ஏனைய நாடுகளிலெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்திலும் அரசாங்கத்தின் சில அமிசங்கள் சட்ட வாயிலாக அமைக்கப் பட்டிருக்கின்றன. நிருவாகப்பகுதி என்பது நிரந்தர நிருவாக ஆட்சி, பார்லிமென்டுப் பொறுப்பாட்சி என்று இரண்டு வகைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது நிரந்தர நிருவாக ஆட்சி; இங்கிலாந்தில் பழக்கத்திலிருப்பது பார்லிமென்டுப் பொறுப்பாட்சி. ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாடுகளில் பெரும்பாலானவை பார்லிமென்டுப் பொறுப்பாட்சி முறையையே மேற்கொண்டுள்ளன. இந்திய அரசியற் சட்டம் இம்முறையையே ஏற்றுக்கொண்டுள்ளது.

இம்மூன்று பகுதிகளைத் தவிர, இராச்சிய அலுவல்களை நிருவகிக்கும் அதிகாரப்பகுதி என்பதொன்று உண்டு. முற்காலங்களில் இவ்வதிகாரப் பகுதியை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. நிரந்தர அதிகாரப்பகுதியினரே அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களைப் பார்ப்பவர்களாகையாலும், அரசாங்க அலுவல்கள் இக்காலத்தில் மிகவும் வளர்ந்துவிட்டமையாலும், அதிகாரப் பகுதி அரசாங்கத்தின் நான்காம் பகுதி என்று இப்போது கருதப்படுகிறது.

அமெரிக்க நிருவாகப் பகுதியின் தலைவரான ஜனாதிபதியே உலகத்தில் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் மிகுந்தவர்; இவர் பெரும்பான்மைக் கட்சித் தலைவர். துரோகக் குற்றச் சாட்டின்றி, வேறுவிதமாக இவரைப் பதவியினின்றும் நீக்க முடியாது. தரைப்படை, கடற்படை விமானப்படைகளுக்கெல்லாம் இவரே தலைமைச் சேனாதிபதி. இவருக்குச் சட்டசபையில் இடமில்லை. இவர் சட்டசபைக்குப் பொறுப்பாளி இல்லை. இங்கிலாந்திலுள்ள அரசாங்கம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட முடியாட்சி : மன்னரே அரசாங்கத்தின் தலைவர். ஆயினும், அவருடைய அதிகாரம் மந்திரிசபையின் மூலமே செலுத்தப்படுகிறது. அவருக்குத் தனியுரிமைகளும் சலுகைகளும் பல உளவாயினும், சம்பிரதாயங்களால் அவரது அதிகாரத்திற்குப் பல கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வால்ட்டர் பேஜாட் (Walter Bagehot) என்னும் ஆங்கில ஆசிரியர் இங்கிலாந்து மன்னருக்கு மூன்று தனி உரிமைகள் உண்டு என்று கூறுகின்றார். அவை முக்கியமான விஷயங்களில் 1. மந்திரிகள் மன்னரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்; 2. மந்திரிகளுடைய நிருவாக அலுவலில் தேவை யிருப்பின், அவர்களுக்கு மன்னர் ஊக்கமளித்து ஈடுபாடு உண்டாக்கவேண்டும்; 3. அவர்கள் தவறான முறையில் நடந்துகொண்டால், அவர்களை எச்சரிக்கவேண்டும் என்பவையே. பார்லிமென்டில் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை ஒரு மந்திரிசபை அமைக்கும்படி கேட்பது. மன்னருடைய உரிமை, அக்கட்சித் தலைவரே பிரதம மந்திரி. அரசியல் அதிகாரம் அவருக்கே மிகுதியாக உண்டு.

பொதுவாக அரசியல் அமைப்புக்கள் இருவகைப்படும். எளிதில் மாற்ற முடியா அமைப்புக்கள் என்றும். எளிதில் மாற்றக்கூடிய அமைப்புக்கள் என்றும் அவற்றைப் பாகுபாடு செய்யலாம். அன்றியும் எழுதியிட்ட அமைப்புக்கள் என்றும், எழுதா அமைப்புக்கள் என்றும் அவற்றைப் பிரிக்கலாம். அவற்றுள், எளிதில் மாற்ற முடியாதவை அமெரிக்க, இந்திய அரசியலமைப்புக்களைப் போன்றவை. எளிதில் மாற்றக்கூடிய அமைப்பிற்கு உதாரணம் இங்கிலாந்து அரசியல் அமைப்பு. இதுவே முக்கியமான பாகுபாடு. ஆயினும், எழுதியிட்ட அமைப்புக்கள் என்றும், எழுதா அமைப்புக்கள் என்றும் செய்யப்படும் பாகுபாடு அத்துணை ஒழுங்கான பாகுபாடன்று. ஏனெனில், எழுதா அமைப்பாகிய இங்கிலாந்து அரசியல் அமைப்பிலும் இயற்றிய சட்டங்கள் சில உண்டு. எழுதியிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் சில சம்பிரதாயங்கள் உண்டு. ஆகையால், இப்பாகுபாடு பயன்படுவதன்று. மேலும் ஒற்றையாட்சி அரசாங்கங்கள் என்றும், கூட்டாட்சி அரசாங்கங்கள் என்றும் பாகுபாடு உண்டு. இங்கிலாந்து, ஸ்வீடன், கிரீசு முதலிய முடியாட்சி நாடுகளில் நடைபெறுவது ஒற்றையாட்சி. அமெரிக்கா, கானடா முதலிய நாடுகளின் அரசியல் அமைப்புக்கள் கூட்டாட்சி அமைப்புக்கள். இந்திய அரசியல் சட்டமும் சோவியத் அரசியல் சட்டமும் கூட்டாட்சி முறையைப் பின்பற்றியவை என்று கூறப்படுகின்றன.

பொதுவாக ஜனநாயக ஆட்சிமுறையில் நாம் காணக் கூடிய அமிசங்கள் சில உண்டு. அவை : குடியொப்பம், குடிகளே சட்டமியற்றல், பிரதிநிதித்துவம் நீக்கல் முதலியனவாம். இவற்றில் குடியொப்பம் முதலிய அமிசங்கள் சுவிட்சர்லாந்து அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அரசாங்க அதிகாரப் பிரிவினை எதேச்சாதிகாரத்திற்கு ஒரு முக்கியமான தடை என்றும் கருதப்படுகிறது. இவ்வதிகாரப் பிரிவினை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கிலாந்திலும் இம்முறை நடைபெறுவதாக மான்டெஸ்க்யூ கருதினாராயினும், பார்லிமென்டு அங்கத்தினர்களிற் சிலரே மந்திரிசபையை அமைத்து, அரசாங்க நிருவாகத்தையும் மேற்கொள்ளுவதால் அதிகாரப் பிரிவினை இங்கிலாந்து முழுவதிலும் பழக்கத்திலிருப்பதாகக் கொள்ள முடியாது.

இந்திய அரசியல் சட்டம் போன்றவற்றில் ஜனாதிபதிக்கு ஏராளமான அதிகாரங்கள் இருப்பதாகக் காணப்படினும்,உண்மையில் அவருடைய அதிகாரத்தையெல்லாம் செலுத்துபவர் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான பிரதம மந்திரியே, இந்தியாவிலும், அ. ஐ. நாடுகளிலும் உதவி ஜனாதிபதி மேல்சபை அக்கிராசனராக இருப்பதோடு, ஜனாதிபதி இல்லாத காலத்தில் அவருக்குப் பதிலாகச் சில அலுவல்களைக் கவனிப்பார். இந்திய அரசியல் சட்டம் அமெரிக்க முறையைப் பின்பற்றி எழுதிய சட்டமாயினும், பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆட்சி முறையையும் மேற்கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளிலேயே அரசியல் அமைப்புச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடைபெறுவதாகக் கூறுவது மரபு ; ஏனெனில், இச்சட்டங்களில் எதேச்சாதிகாரத்திற்கு வரம்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது; தனியாள் ஆட்சிக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகையால், பூரண ஆதிக்க ஆட்சி நாடுகளில் நடைபெறும் ஆட்சி அரசியல் அமைப்பாட்சியாகக் கருதப்படுவதில்லை.

குடிகளுக்கு அரசியலில் ஒரு செல்வாக்கு இருப்பதாக அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குரிமை, அவர்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஆட்சி,