பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருணியரசன்

422

ஆரேசீ

உள்ள நுண் மயிர்களால் நீந்திச்சென்று, ஏதாகிலும் ஓர் அடித்தளத்தில் ஒட்டிக்கொள்கிறது பின்பு நுண்மயிர்கள் விழுந்து விடுகின்றன ; ஒட்டப்படாத நுனியில் வாய் தோன்றுகிறது. பின்னர் நான்கு பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்நிலையில் இப்பிராணிக்கு வெளித் தோலும் உள் தோலும் சீரணக்குழியுமுண்டு. உள்தோல் சீரணச் சுழற்சி வளையுள் நெடுக்காக நான்கு மேடுகள் உடையதாக இருக்கிறது. இம் மேடுகள் அகட்டு மேடுகள் எனப்படும். இவை ஆரிலியா சாதிக்கு உள்ள சிறப்பியல்பு. அடுத்தபடியாக மற்றப் பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இப்போது லார்வாவுக்கு சைபிஸ்டோமா (Scyphist( ma) என்று பெயர். இந்நிலையில் இப் பிராணிக்கு 10 பற்றுறுப்புக்களுண்டு. பின்பு இப்பிராணி குறுக்காகச் சிறு வளையங்களாக உடைந்து தோன்றுகிறது. அப்போது

ஆரீலியா
வாழ்க்கை வட்டம்

1. பிளானுலா லார்வா: நுண்மயிர்களின் உதவியால் நீந்துவது.
2. இளம் பாலிப்பு நிலை : வாய்மட்டும் உள்ளது.
3. பாலிப்பு: நான்கு பற்றுறுப்புக்கள் உள்ள நிலை.
4. சைபிஸ்டோமா கிண்ண அடுக்கு (ஸ்ட்ரோபிலா) நிலை.
5. எபைரா என்னும் இள மெடுசா நிலை.
6. முழுவதும் வளர்ந்த பாலிப்பு: சைபீஸ்டோமா நிலை.
முழுவதும் வளர்ந்த மேடுசா நிலையை முன் பக்கத்திலுள்ள

படத்தில் காண்க.

இப்பிராணி சற்றுத் தட்டையான பல கோப்பைகளை அடுக்கி வைத்தது போலிருக்கும். ஆகையால் இந்நிலை ஸ்ட்ரோபிலா (Strobila) அல்லது கிண்ண வடுக்கு நிலை என்பார்கள். பின்னர் ஒவ்வொரு கிண்ணத்தின் ஓரமும் பிரிவுபடுகிறது. ஒவ்வொரு கிண்ணம் போன்ற பாகமும் எட்டுப் பாகங்களாலான குடையும், கைப்பிடியும், கைப்பிடியில் சதுரமான வாயுமுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் இப்பிராணிக்கு எபைரா (Ephyra) என்று பெயர். பின்பு ஒவ்வொரு சிறு எபைராவும் தனியாகப் பிரிந்து சென்று, கவிழ்ந்து நீந்தித் தனி வாழ்க்கை நடத்தி வளர்ந்து பெரிய ஆரீலியாவாக மாறுகின்றது. எஸ். ஆ.

ஆருணியரசன் பெருங்கதையில் வரும் பாஞ்சால நாட்டரசன். கோசல நாட்டு அரசனை வென்று, அவன் மகள் வாசவதத்தை முதலியவர்களைப் பிடித்து வந்து தன் உரிமை மகளிர்க்குத் தாதியர்களாக அமைத்தனன். ஆயர்குலத்தினருக்கு வழிவழிப் பகைஞன். அக்குல அரசுக்கு உரியவனான உதயணன் சிறைப்பட்ட போது அவனது கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றி, அதனையே தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவனவன். பின்பு உதயணன் வந்து போர் செய்தபோது போது அதில் அவனால் கொல்லப்பட்டான். அப்படி இறக்கும் போதும் இவனிடம் வீரமே விளங்கிற்று.

ஆருத்திரா தரிசனம் : இவ்விழா மார்கழி மாதத்தல் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும். மற்றச் சைவத்திருப்பதிகளிலும் இது கொண்டாடப்படுகின்றது. ஆருத்திரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது.

நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் அபிஷேகங்களுள் மார்கழி மாதத்தில் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு நடப்பதே மிகச் சிறப்புடையது. அபிஷேகம் மறுநாள் காலை வரையிலும் ஆகும். பிறகு தரிசனம் நிகழும்.

ஆரூடம் என்பது ருஹ் என்னும் சமஸ்கிருத வினைப்பகுதியடியாகப் பிறந்த சொல். அதன் பொருள் ஏறியிருப்பது, அதாவது உதயமாயிருப்பது என்பது. இது பலன் சொல்லும் சோதிட முறைகளுள் ஒன்றாக வழங்கி வருகிறது. திடீரென ஒருவனைப் பற்றி ஒருவர் வினவினால், அவ்வினாக் கேட்கும் வேளையில் உதயமாயிருக்கும் இலக்கினத்துக்குக் கிரகங்களின் நிலைகளைக்கொண்டு, அந்தந்தக் கிரகங்களின் தன்மை வாயிலாகப் பலனைச் சொல்லுவதே இதன் இலக்கணமாம். ஆரூட ராசி முதல் சூரிய ராசிவரை எண்ணி வந்த தொகையை, உதய ராசி முதலாக எண்ணிக் கண்ட ராசிநாதனைக் கொண்டு பலன் சொல்லுவது ஆரூடம் என்று கூறப்பெறும். உதய ராசி என்பது வினாக்கேட்ட ராசி. ஆரூட ராசி என்பது வினவுவோன் சொல்லும் எண் முதலியவற்றின் ராசி. ஆரூடத்தில் வல்லவர்கள் ஜாதகமில்லாதவர்க்கு, மிகவும் நுட்பமான குறிப்புக் களையும் கணக்குக்களையும் கொண்டு முழு ஜாதகத்தையும் கணித்துவிடுவராம். வே. ரா.

ஆரேசீ ஒற்றை விதையிலைக் குடும்பம். சேம்பு, கருணை வசம்பு, ஆகாசத் தாமரை,நாட்டு அதிவிடயம், யானைத் திப்பிலி முதலிய செடிகளும், தோட்டங்களில் இலையின் அழகுக்காக வைத்து வளர்க்கும் போதாஸ், பிலொடெண்ட்ரான், அரிசீமா, ஆந்தூரியம், கலேடியம் முதலிய செடிகளும் அடங்கியது. இக்குடும்பத்தில் 107 சாதிகளும் 1900 இனங்களும் உண்டு. இவை பெரும்பாலும் அயனமண்டலத்திலும், சிறுபான்மை சம தட்பவெப்ப வலயத்திலும் வாழ்பவை. சில மிகச் சிறிய பூண்டுகள். சில பெரிய பூண்டுகள். சில சிறு மரங்கள். சில வேர்களால் பற்றியேறும் பெருங்கொடிகள். சில தொற்றுச்செடிகள். சில சதுப்புச் செடிகள். ஒன்று, ஆகாசத்தாமரை, நீரில் வாழ்வது. பலவற்றில் பால் உண்டு; சில வகைகளில் அது வெண்மையாக இருக்கும். இந்தப் பால் விஷமும் விறுவிறுப்பு முள்ளது. செடிகளின் பல பாகங்களில் அணுக்களுக்குள்ளே கால்சியம் ஆக்சலேட்டுப் படிகங்கள் சாதாரணமாக ஊசி வடிவத்தில் கற்றைக் கற்றையாக இருக்கும். இவையும் மிக்க விறுவிறுப்புள்ளவை. செடியின் உடலியல் செய்கைகளினால் உண்டாகும் கழி வுப்பொருள்கள் படிக வடிவில் அங்கங்கே சேர்த்து வைக்கப்பட்டுச் செடியின் தற்காப்புக்கு உதவுகின்றன. இந்தக் கரகரப்பினால், வாய்க்கால் ஓரமெல்லாம் வளர்ந் திருக்கும் சேம்பை ஆடுகூடத் தொடுவதில்லை.

இந்தச் செடிகளில் தண்டு, கிழங்காகவும் மட்டத்தண்டுக் கிழங்காகவும் தரைக்குள் இருக்கும். அதிலிருந்து ஒட்டுவேர்கள் உண்டாகும். அடித்தண்டிலைகள் வளரும். நிலத்தின்மேலே தண்டுகள் வளரும் போது அவற்றிலிருந்து விழுதுகள் உண்டாகும். இந்த