பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசீரணம்

33

அசுகுணி

நோய்க்குறி நாவில் மாவு படிந்திருக்கும், வாய் நாறும், பசி யிராது, வாந்தியும் வாந்தியுணர்சியும் தோன்றும், நெஞ்சு நோகும், வயிறு பொருமும், புளித்த ஏப்பம் வரும், மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ காணும், வயிற்றுப் போக்குக் காணுவதைவிட மலச்சிக்கல் உண்டாவதே சாதாரணமாகும்.

அசீரணம் தீவிரமாக (Acute) ஏற்பட்டதாயிருந்தால், எடுத்துக் காட்டாக வயிறு நிறைய உண்டு சிறிது நேரத்துக்குள் தோன்றுமாயின், நோவும் வாந்தியும் உண்டாகும். வாந்தி எடுத்தபின் இதமாக இருக்கும். அசீரணம் நாட்பட்டதாக (Chronic) இருப்பின் உணவு உண்டதும் இரைப்பையில் கனமாகத் தோன்றும். நோவு தோன்றலாம் தோன்றாமலும் இருக்கலாம். இந்த அசௌக்கரியம் உணவு உண்ணும் ஒவ்வோரு வேளையிலும் உண்டாகலாம், அல்லது சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உண்டாகலாம். அல்லது சில குறிப்பிட்ட உணவுப்பொருள்களை உண்டவேளையில் மட்டும் உண்டாகலாம். இரைப்பை நெகிழ்ந்து உணவு நொதித்துக் காற்று உண்டாகி வயிறு பொருமுமாறு செய்யும். புளித்த ஏப்பம் வரும். சில வேளைகளில் சூடான புளித்த நீரோ அல்லது சுவையில்லாத நீரோ வாய்க்கு வரும். அல்லது சீரணமாகாத உணவுப் பொருட்களும் வாய்க்கு வரலாம். அந்தச் சமயங்களில் உணவு உணவு உண்டால் நோவு தற்காலிகமாக நீற்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும் அசௌக்கரியம் முன்போல் உண்டாகும். அசீரணமுண்டாகும்போது உணவில் பிரியமில்லாமல் இருக்கலாம், ஆல்லது மிகுந்த பிரியம் உண்டாகலாம். தீவிரமான அசீரணமானால் மலச்சிக்கலும் ஏற்படுவது வழக்கம்.

அசீரணத்தால் இரைப்பையிலுண்டாகும் அசௌக்கரியத்தைவிட மற்ற உறுப்புக்களில் உண்டாகும் அசௌகரியமே அதிகமாகும். நெஞ்ச்சுநோகும், மூச்சுத்திணறும், இருதயம் படபடவென்று அடிக்கும், தலைநோகும், கிறுகிறுப்பு வரும், கைவிரல்களும் பாதங்களும் குளிரும், உடம்பில் சோர்வு தோன்றும்; தூக்கமின்மை, எளிதில் கோபமைடைதல், மனச்சோர்வு ஆகியவைகளும் உண்டாகும்.

சிகிச்சை : மருத்துவர் நோயின் சின்னங்களை மட்டும் நீக்குவதற்காக சிகிச்சை செய்யாமல் அதன் காரணத்தை நீக்குவதற்காகவே சிகிச்சை செய்ய வேண்டும். நோயின் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர் நோயின் வரலாறைக் கேட்கவும், நோயாளியை பரிசோதிக்கவும், உணவுகொடுத்துச் சீரணமாவதைச் சோதிக்கவும், மலத்தை பரிசோதிக்கவும், பேரியம் கலந்த உணவைக் கொடுத்து உணவுப்பாதையை எக்ஸ் கதிர் படம் எடுத்துப் பார்க்கவும் வேண்டும்.

உணவு; ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்பதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்ணாதிருப்பதும் போதாது. மசாலை அதிகமாகச் சேர்காமல் உணவை நன்றாக வேகவைத்து உண்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், புதிதான ரொட்டி, பலகாரங்கள் ஆகியவை அசீரணப் பொருள்களாதலால் அறவே நீக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகூட ஏற்றுக்கொள்ளாதிருத்தல், சிலநாட்கள் பால்மட்டுமே மித அளவேக்க் குடித்துவருதல் நல்லது.

மருந்து; நோயாளி மருத்துவரைக் கலக்காமல் தானாகவே மருந்து உண்ணலாகாது. அசீரணம் உடலுறுப்புக்கோளாறுகளினால் உண்டாகும்போது மருத்துவர் அவற்றிற்கு ஏற்ற மருந்துகளையும், உள்ளக் கிளர்ச்சியானால் உண்டாகும்போது நரம்பு மண்டலக் கிளர்ச்சியை ஆற்றக்கூடிய மருந்துகளையும் பயன்படுத்துவரார். கி. சீ. ச.

அசிகுணி (செடிப் பேன்) (Aphid, Plant louse): மிகச்சிறிய பூச்சி. இலைமேலும் இளங்கிளை மேலும் சில சமயங்களில் வேரின்மேலும் இருந்து கொண்டு ஊசிபோன்ற தன் வாயுறுப்புகளாகிய தாடைகளால் செடியின் மெள்ளியதோலைக் குத்தி உள்ளிருக்கும் சாற்றை மூட்டுப் பூச்சி, பேன் முதலியவை மனிதனுடைய இரத்தத்தை இழுப்பதுபோல, உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதலியவை விளையும் மோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை , கருமை, வெண்மை முதளிய பல நிறங்கள் உள்ள வகைகளும் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள்

அசிகுணி
1. பெண் சிறகுள்ளது
2. பெண் சிறகில்லாதது
3. கட்டெறும்பு கேழ்வரகு வேரில் அசுகுணிகளை இட்டு வளர்த்தல்
a எறும்பு
b அசுகுணி

இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை மிகச்சில நரம்புகளுள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதளியவை விளையும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை, கருமை, வெண்மை முதலிய பல நிறங்கள் உள்ள வகைகளுண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை. மிகச் சில நரம்புள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சிக் கொண்டே யிருக்கும்போது அதன் பின் முனையில் குதத்திலிருந்து சிறிய துளித்துளியாய்த் தேன்பனி வந்துகொண்டேயிருக்கும். இதை எறும்பு தனது உணர் கொம்புகளால் மாறி மாறி அசுகுணியின் பின்பாகத்தைத் தடவுவதுண்டு. அது அசுவிணிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குக் கொண்டுபோய் குடியேற்றுவதுமுண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுகுணியைப் பத்திரமாகச் சேமித்து காப்பதும் உண்டு. இக்காரணங்களினால் அசுகுணியை எறும்புப்பசு என்றழைப்பார்கள். எறும்புகளின் உதவியாலே ஒரு தோட்டம் முழுவதும் மிகவிரைவில் அசுகுணி பிடித்து பிடித்துபோகும். தேன் பனி இலைமீது சிந்தி மெழுகுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

அசுகுணியின் இனப்பெருக்கமும் வாழ்க்கை வட்டமும் அதிசயிக்கத் தக்கவை. குளிர்காலம் வருவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகின்றது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். முட்டை நிலையில் குளிர்காலம் கழிகிறது. வசந்தம் வந்ததும் முட்டைகள் பொரிந்து, அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்கள் வெளிவருகின்றன. இவை ஆணோடு சேராமலே கன்னிகளாகவே