பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

702

இந்தியா

II. தோட்டங்கள்
13. தேயிலை, காபி, ரப்பர் 11.9 0.37
14. சுவைப்பொருள்களும் வாசனைப் பொருள்களும் 24.6 0.78


36.5 1.15


15. தட்டைப் பயிர்கள் 111.7 3.52
16. பிற பயிர்கள் 22.7 0.72


134.4 4.24


ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு 317.0 100.00


சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது.

பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன.

நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம்.

முக்கியச் சாகுபடிப் பயிர்கள் : நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர்.

3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது.

6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர்.

வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு