பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண்

97

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண்

கீழே பருத்துள்ள பகுதியாகும். இது வால்பேரிக்காய் போன்ற வடிவமுடையது; வயிற்றின் மேற்பகுதியில் இடப்புறமுள்ளது. இரைப்பைக்குக் கீழே உள்ளது சிறுகுடல். இரைப்பையிலிருந்து சிறு குடலுக்குச் செல்லும் வழி குடல்வாய் (Pylorus) எனப்படும். இரைப்பையின் உட்பாகம் கோழைப்படலத்தால் மூடப்பட்டிருக்கிறது. இரைப்பை உணவு இல்லாதபோது குழாய்போலச் சுருங்கியும், உணவு பெற்றபோது விரிந்து பருத்துமிருக்கும். இரைப்பைக்கு உணவு வந்ததும் கோழைப்படலத்திலுள்ள சுரப்பிகள் இரைப்பைநீரைச் சுரக்கும். அந்நீரிலுள்ள ஹைடிரோகுளோரிக அமிலமும் பெப்சின் என்னும் என்சைமும் உணவிலுள்ள புரோட்டீனைப் பெப்டோனாகச் செரிக்கச் செய்யும். அமிலம் இரைப்பைக்குள் வரும் கிருமிகளைக் கொல்லும். சீரணநீர் உணவுடன் நன்றாகக் கலக்குமாறும், உணவு கஞ்சிபோல அரைபட்டுக் கூழாகுமாறும் இரைப்பைத் தசைகள் சுருங்கிச் சுருங்கிப் பிசைவது போலக் கடைகின்றன. நன்றாய்க் கலந்து கூழாகிய உணவு குடல்வாயின் அருகே செல்லும். குடல்வாய் அவ்வப்போது சிறிதுசிறிதாகத் திறந்து, உணவைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குடலுக்குள் செல்லவிடும். பார்க்க: உணவுப் பாதை.

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் (Gastric and Duodenal ulcers) தென்னிந்தியாவில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. வட இந்தியாவில் பெரும்பாலும் இல்லை. இதற்குக் காரணம் இன்னதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும் தென்னிந்தியாவில் உணவில் காரம் மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். வட இந்தியாவில் இனிப்பும், நெய்யும், இறைச்சியும் அதிகமாக உட்கொள்ளுகிறார்கள். மிகுதியாக நெய் உட்கொள்ளுவதால் அதில் வைட்டமின் ஏ இருப்பதால் வயிற்றிலும் குடலிலும் புண் வராமல் தடுக்கின்றது. இந்தப் புண் வருவதற்கு முதன்மையான காரணம் வயிற்றில் இயற்கையாக ஏற்படும்ஹைடிரோகுளோரிக் அமிலம் அதிகமாய் இருப்பதே. இந்த அமிலம் மிகுதியாக இருக்கும்போது, எக்காரணத்தினாலாவது இரைப்பையில் புண் ஏற்பட்டால், அது ஆறாமல் இருக்கும். வாயிலுள்ளபுண்ணிலிருந்தும், தொண்டையிலுள்ள புண்ணிலிருந்தும் சிறு பூச்சிகள் இரத்தத்தின் வழியாகச் சென்று, இரைப்பையில் தங்க ஏற்பட்டால் அதனாலேயும் புண் உண்டாகலாம். பீடி, சிகரெட்டுப் புகை இரைப்பைக்குள் சென்று அங்கிருக்கும் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்யும். அதனால் இரத்தக் குறைவு உண்டாகி, இரைப்பையின் உட்பாகம் சிலவிடங்களில் சிதையும். அப்போது அமிலம் அதிகமாக இருந்தால் புண் ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. அதனால் புண் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள் 1. உணவில் வைட்டமின் ஏ சத்தும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதும், 2. பீடி, சிகரெட்டு, சுருட்டுப் பிடிப்பதும், 3. வாயிலும் தொண்டையிலும் புண் இருப்பதுமாகும்.

இரைப்பை புண்

படத்தில் அம்புக்குறி புண் இரும் இடத்தைக் காட்டுகின்றது.

இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு உட்கொண்ட உடனேயே வலி வயிற்றின் மேற்பகுதியில் காணும். உணவு இரைப்பையில் இருக்கும்வரையில் வலி இருந்துகொண்டிருக்கும், இரைப்பையை விட்டுப் போன பிறகு நீங்கும். மறுபடியும் உணவு உட்கொண்டால் வலி மறுபடியும் ஏற்படும். இப்படி உணவு உட்கொண்டவுடனே வலி ஏற்படுவதால் இந்த நோயால் வருந்துவோர் சாப்பிடுவதற்கு அஞ்சி, எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் நாளடைவில் உடம்பு இளைத்துப் பலவீனப்படுகிறார்கள். சிறு குடலில் புண்ணிருந்தால் வலி சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அடங்கி. மறுபடி 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் பொறுத்து ஏற்படும். அப்படி வலி ஏற்படும்பொழுது மறுபடியும் உணவு உட்கொண்டால் வலி அடங்கி விடும். இம்மாதிரியாக ஒவ்வொரு முறை வலி ஏற்படும்போதும் உணவு உட்கொள்ளுவதனால் வலி அடங்குவதால் மறுபடியும் மறுபடியும் சாப்பிட அவா ஏற்படுகிறது. இப்படி ஒரு நாளில் பலமுறை சாப்பிடுவதால் நாளடைவில் உடம்பு பருக்கக் காரணமாகிறது. அதனாலேயே இரைப்பையில் புண்ணிருப்பவர்கள் இளைத்தும், சிறு குடலில் புண்ணிருப்பவர்கள் பருத்தும் இருப்பார்கள்.

இரைப்பையில் புண்ணிருந்தால், அதிலிருக்கும் அமிலம் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போலவே இருக்கும். சில சமயங்களில் சற்றுக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் குடலில் புண்ணிருந்தால் அமிலம் எப்பொழுதுமே அதிகமாகத்தானிருக்கும்.

இரைப்பைப் புண் புற்றுப் புண்ணாக (Cancer) மாறலாம் நாளடைவில் அப்படி மாறுவதே வழக்கம். குடலிலுள்ள புண் அப்படி மாறுவது வெகு அருமை

இரைப்பையிலும் முன் சிறு குடலிலும் புண்ணிருந்தால், வலி வயிற்றின் வலப்பக்கத்திலும், வயிற்றின் மேல் பக்கத்திலும் காணப்படலாம். குடற்புண் வயிற்றின் பின்பக்கம் இருக்கும் அவயவங்களோடு தொடர் புறுமாயின் வலி எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். வயிற்றுவலி எப்பொழுதும் இருந்தால் இரைப்பைப் புண் புற்றுப் புண்ணாக மாறியிருக்கவேண்டும். சாதாணமாக இந்த வலி சிகிச்சை செய்துகொண்டாலும், செய்துகொள்ளாவிட்டாலும் சிறிது காலம் இருந்து அடங்கிவிடும். மறுபடியும் எக்காரணத்தினாலாவது மனக்கவலை ஏற்படுமாயின் அப்போது திரும்ப

13