பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரைப்பைப் புற்று

99

இல்தூத்மிஷ்

சோடியம் சிட்ரேட்டைப் பாலில் கலந்து கொடுக்கலாம். இந்தச் சிட்ரேட்டைக் கலப்பதனால் பால், கட்டித் தயிர் போன்ற பெரிய பெரிய கட்டிகளாகாமல் சிறிய திரிபோல் ஆகிறது. இவ்வாறு கொடுக்கும் பால் மற்ற உணவுகளை விட அமிலத்தை அதிகமாகப் போக்கடித்து விடுகிறது. அப்படிப் பால் கொடுத்தும். மிஞ்சி யிருக்கும் அமிலத்தின் குணத்தை மாற்றக்காரப்பொடி (Alkaline) கொடுக்கப்படுகின்றது. இப்படிச் சில நாட்கள் அமிலம் அதிகமாய் இல்லாமல் செய்துவந்தால், புண்ணிற்கு அமைதி ஏற்பட்டுப் புண் ஆறிவிடும்.

புரோட்டீன்கள் சம்பந்தப்பட்ட பொருள்களைக் கொடுப்பதாலும் புண் ஆறக்கூடும். கூடியவரை மனக்கவலைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும். சீ வைட்டமின் சத்து என்ற சத்தும், புண்களை ஆற்றக்கூடிய சக்தி உடையது. அதனால் அதையும் உபயோகப்படுத்தலாம்.

இப்படிப் பல நாட்கள் மருந்தைக் கொடுத்தும் பலன் ஏற்படாவிடின் ஆப்பரேஷன் செய்வது உசிதம். ரெ. சு.

இரைப்பைப் புற்று: ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மக்களைப் பீடிக்கும் புற்றுநோய்களில்

1. இரைப்பைப் புற்று

இரைப்பைப் புற்று: பாவலானதும் உட்புகுந்து செல்வதுமான வகை. இதில் சதை வளர்ச்சி காண்பதில்லை. இரைப்பையின் சுவர் மட்டும் ஏறக்குறைய ஒரே அளவாகத் தடித்துக்காணும்.

2. இரைப்பைப் புற்று

இரைப்பைப் புற்று - மிக முற்றியது. அணுக்கள் கூழ்போலச் சிதைவுற்றுக் காணும்.

பெரும்பான்மையானது இரைப்பைப் புற்று. தென் இந்தியாவிலோ ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுள் மிகவும் சாதாரணமானது ஆண்குறியில் ஏற்படுவதேயன்றி, இரைப்பைப் புற்று 3-5% மட்டுமே காணப்படுகின்றது. ஐரோப்பாவிலும் நாட்டுக்கு நாடு விகிதம் வேறுபடும். இந்த வேறுபாட்டிற்குரிய காரணம் நன்கு விளங்கவில்லை. உணவு உண்பது, மது குடிப்பது, புகையிலை போடுவதுபோன்ற வழக்கத்தில் காணப்படும் வேறுபாடுகள் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம்.

இரைப்பையில் காணப்படும் சில நாட்பட்ட புண்கள் கொடியனவாக மாறிப் புற்றுக்களாகின்றன. இரைப்பைப் புற்றுக்கள் பொதுவாக ஏறக்குறைய அறுபது வயதில் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் அதற்குமுன் ஏற்படுவதுமுண்டு. பெண்களைவிட ஆண்களுக்கு இந்நோய் இருமடங்கு ஏற்படுவதாகப் பல நாட்டுப் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவருகிறது.

இரைப்பையின் உட்பரப்பாக அமைந்துள்ள சவ்வுப் படலச் சுரப்பி உயிரணுக்களில் இரைப்பைப் புற்று வளர்கிறது. இரைப்பையிலும் முக்கியமாகக் குடல் வாய்ப்பகுதியிலேயே (Pylorus) உண்டாகும். இரைப்பைப் புற்றுக்களில் 60% இவ்விடத்திலேயே உண்டாகின்றன. சில சமயங்களில் இது மிருதுவான தசையாக வளர்ந்து இரைப்பையின் உட்புறமாகத் தள்ளிக்கொண்டு இருக்கும். பெரும்பாலும் இது இரைப்பையின் உட்சுவரில் ஓரிடம் தடித்து, நடுவே ஒருபுரையுடன் காணப்படும். சில வேளைகளில் கழலை ஒன்றும் உருப்படியாகத் தெரியாது. ஆனால் இரைப்பையின் உட்சுவர் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத் தடித்திருப்பது மட்டும் புலப்படும். படம் 1. பல தடவைகளில் புற்றணுக்கள் அழுகிக் கூழ்போல் ஆகிவிடும். படம் 2. தோன்றிய இடத்திலிருந்து புற்றணுக்கள் விரைவாக இரைப்பைச் சுவர்த்திசுக்களிடையிலும் நிணநீர்க் குழல்கள் வழியாக அருகிலுள்ள நிணநீர் முடிச்சுக்களிலும், இரத்தத்தின் வழியாகக் கல்லீரல், நுரையீரல், எலும்புகள் போன்ற உள்ளுறுப்புக்களிலும் பரவுகின்றன.

நோய் குணமாகும் விகிதத்தைப் பொறுத்தமட்டில் இரைப்பைப்புற்று மிகவும் கடுமையான புற்றுநோய்களில் ஒன்று. அறிகுறிகள் யாதொன்றும் வெளிப்படாமல் தொடங்குவதே இதற்குக் காரணமாகும். பெரும்பான்மையாகப் பசியின்மை தவிரப் புற்றுநோய்க்குரிய வேறு யாதொரு முன்னறிவிப்பும் இருப்பதில்லை. நாற்பது வயதிற்கு மேற்பட்டவருக்கு அசீரணம் கண்டால் உடனே ஐயுற்று நன்றாக ஆராயவேண்டும். இரைப்பையில் ஹைடிரோகுளோரிக அமிலம் இல்லாதிருத்தல். இரைப்பையிலேனும் மலத்திலேனும் இரத்தம் காணுதல், சோகை வளர்தல் ஆகியவை சில முக்கியமான குறிகளாகும். தற்காலத்தில் எக்ஸ்-ரே சாதனத்தைக் கொண்டு இந்நோயை ஆரம்ப தசையிலேயே கண்டு பிடித்துவிடலாம். கழலையை அடியுடன் அறுத்து நீக்குவதுதான் பயனுடைய சிகிச்சையாகும். ஆனால் நோயின் ஆரம்பகாலத்திலேயே, அதாவது புற்றணுக்கள் மற்ற உறுப்புக்களுக்குப் பரவு முன்பே இந்த இரண சிகிச்சை நடந்தால்தான் அது வெற்றி அடையும். ஜீ. டீ. வே.

இரையும் மணல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஹவையீ தீவிலும் கொலராடோ வனாந்தரத்திலுமுள்ள மணல் பெருங்காற்று வீசும்போது பறவை கத்தும் ஒலியும், கையிலள்ளிக் கசக்கினால் ஆந்தை அகவும் ஒலியும், கோணியில் நிரப்பிக் குலுக்கினால் நாய் குரைக்கும் ஒலியும் உண்டாகும் என்பர்.

இல்தூத்மிஷ் (ஆ.கா. 1211-1236): இவன் முழுப்பெயர் சாம்சுதீன் இல்தூத்மிஷ் என்பது.