பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவமரம்

118

இலாகா அமைப்பு

எண்ணெய் எடுக்கிறார்கள்; அது சோப்புச் செய்வதற்குப் பயன்படுகிறது. இலவு வெண்டைக் குடும்பத்தையடுத்த பாம்பகேசி குடும்பத்தைச் சேர்ந்தது. சைபா பெண்டாண்ட்ரா எனப்படும். எரியொடெண்ட்ரான் என்பதும் இதன் சாதிப் பெயராக வழங்கி வந்தது. டி. வெ.

முள்ளிலவு (கண்டகம், கோங்கு, சால்மலி, பூரணி, பொங்கர்) மிகப் பெரிதாக வளரும் இலையுதிர் மரம். கிளைகள் மரத்தைச் சுற்றிலும் சற்று வட்டமாகவும் அடுக்காகவும், ஏறக்குறைய கிடைமட்டத்தில் வளரும்.

முள்ளிலவு
1. இலை. 2. பூக்கொத்து. 3. காய்

அடி மரத்தைச் சுற்றிலும் முட்டுச்சுவர் போன்ற பாகங்கள், நேராக மேல்நோக்கி வளரும் மரத்தைத் தாங்கி நிற்கும். பட்டை சாம்பல் நிறமானது. இளமரத்தில் கூம்புவடிவமான முட்கள் இருக்கும். முள்ளின் அடிப்பாகம் தக்கையால் ஆனது. முதிர்ந்தபோது பட்டை நீளத்தில் வெடித்திருக்கும். மரம் புதிதாக வெட்டினபோது வெண்மையாகக் காணும். பிறகு சற்றுக் கருமையாகும். அது மிக மென்மையானது. விரைவில் மட்கிப்போகும். இலைகள் பெரியவை. கைவடிவக் கூட்டிலைகள், 3-7 சிற்றிலைகள் உண்டு. சிற்றிலைகள் 3-7 அங்குல நீளமிருக்கும். பூக்கள் மிகப் பல : கிளைகளின் நுனிகளில் உண்டாகும். இலைகள் உதிர்ந்து தளிர்கள் தோன்றுவதற்கு முன்பே பூக்கள் உண்டாகும். மாசி, பங்குனி மாதங்களில் குங்குமம்போன்ற செந்நிறப் பூக்கள் நிறைந்திருக்கும். புறவிதழ்க் கிண்ணம் தடிப்பாகவும் 3 பிரிவுள்ள தாகவும் இருக்கும். அகவிதழ் 5. கேசரம் 60க்கு மேலிருக்கும். அவை வெளியே 9-12 சேர்ந்த 5 முடிச்சுகளாகவும், உள்ளே 15 ஒன்றாகச் சேர்ந்த ஒரு முடிச்சாகவும், ஆக ஆறு முடிச்சுக்களாக இருக்கும். சூலகம் 5 அறைகளுள்ளது. கனி இணை சூலக வெடிகனி. 4-5 அங்குல நீளமிருக்கும். விதைகள் பல. வெண்மையான பட்டுப்போன்ற பஞ்சில் வரிசையாக அமைந்திருக்கும்.

இந்த மரம் இந்தியா முழுவதும், பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும், கடல் மட்ட முதல் 3,000 அடி உயரமுள்ள பகுதிகள் வரையிலும் வளர்கிறது. புல் நிலங்களிலும் குன்றுகளின் பக்கங்களிலும் இது ஓங்கிக் கம்பீரமாக நிற்பதைக் காணலாம். 135 அடி உயரமும், அடியில் உதைசுவர் போன்ற புடைப்புக்கள் உட்பட 115 அடிச் சுற்றளவும் இருந்தது. இது மிக விரைவாக வளரும். தமிழ் இலக்கியத்தில் இலவு என்பது இம்மரத்தைக் குறிக்கும்.

ஒரு மரம் இலவ மரத்தின் பஞ்சைப் பயன்படுத்துவது போலவே முள்ளிலவ மரத்தின் பஞ்சையும் பயன் படுத்துவதுண்டு. மரம் தேயிலை முதலிய சாமான்களை அனுப்புவதற்குப் பெட்டி செய்யவும், பொம்மைகள், மீன் வலையிலுள்ள மிதவைக் கட்டைகள் முதலியவற்றிற்கும் பயனாகும்.

முள்ளிலவ வேர், பட்டை, இலை, காய் முதலியவை மருந்துக்கு உதவும். உள்ளழலையை மாற்றுவது, சிறுநீரைப் பெருக்குவது, உரந்தருவது, இரத்தத்தைச் சுத்தி செய்வது முதலிய பண்புகள் இவற்றில் உண்டென்பர். காய் பெருவியாதிக்கும் உதவும் எனப்படுகிறது. இம்மரம் இலவ மரத்துக்கு மிகவும் நெருங்கியது. சால்மலியா மலபாரிக்கா எனப்படும். இதைப் பாம்பாக்ஸ் மலபாரிக்கம் என்றும் அழைத்து வந்தனர். இது வெண்டைக் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய பாம்பகேசீ குடும்பத்தைச் சேர்ந்தது.

இலாகா அமைப்பு : இராச்சியங்கள் தாம் மேற்கொள்ளவேண்டிய அலுவல்கள் பலவகையாகப் பெருகிவிட்ட காலத்தில் பல இலாகாக்களை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றால் அவ்வலுவல்களைச் செய்துகொள்ள முற்படுகின்றன. பண்டைய இராச்சியங்களில் கூட இவ்வகையான இலாகாக்கள் இருந்து வந்தன. மௌரியப் பேரரசில் சந்திரகுப்தனது ஆட்சி, இலாகா முறையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது மெகஸ்தனிஸ் எழுதி வைத்துள்ள குறிப்புக்களினின்றும் தெரிகிறது. இது கிரேக்க, பாரசீக அரசாங்க முறையைப் பின்பற்றி ஏற்பட்டது என்று கூறுவர். ஷெர்ஷா, அக்பர் முதலிய அரசர்கள் தங்கள் ஆட்சிமுறையை இலாகா அடிப்படையில் அமைத்திருந்தனர் என்பதையறிவோம். ரோமானியர்களுடைய ஆட்சிமுறையும் இலாகா அடிப்படையில்தான் அமைந்திருந்தது.

ஆனால் இராச்சியங்களின் அதிகார எல்லை பண்டைக் காலத்தில் இருந்ததைவிட இப்போது மிகவும் விரிந்து விட்டது. ஆகையால் தற்காலத்தில் இராச்சியங்களிலுள்ள இலாகா அமைப்பு இதற்கு முன்பு எக்காலத்திலும் இருந்ததில்லை எனலாம். தனிப்பட்ட கம்பெனிகளின் நிருவாகம்கூட மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து விட்டமையால், அவையும் தங்கள் நிருவாகத்தை இலாகாக்களிடம் ஒப்படைத்துள்ளன. இவ்வகை இலாகாக்களை அமெரிக்காவிலுள்ள பெரிய கம்பெனிகளில் காணலாம். இம்முறையைப் பின்பற்றி மற்றும் சில நாடுகளிலுள்ள கம்பெனிகளும் இலாகாக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

இலாகா அமைப்பு வேலைப் பகிர்வை முன்னிட்டு ஏற்படுவதாம். அரசியல் தலைவர்களுக்கும் கீழ்ப்படியிலிருப்பவர்களுக்கும் (Rank and File) நேரடியான