பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையுதிரா மரங்கள்

133

இழுப்பு

M ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்கும். இவற்றின் இலை கள் மற்ற மரஞ்செடிகளின் இலைகளைவிட உரப்பாக வும் தோல்போலவும் இருக்கும். குளிர்காலத்து உறை பனியையும், குளிரையும், ஈரமில்லாத காற்றையும் அவை எதிர்த்துத் தாங்கக்கூடும். கூம்புகனி மரங்கள் (Conifers) போன்ற சில இலையுதிரா மரங்களிலே இலைகள் ஊசி வடிவமாக இருக்கும். ஊசி இலைகளின் பரப்பு, அகன்று தட்டையாக இருக்கும் சாதாரண இலைகளின் பரப்பைவிடக் குறைந்தது. அதனால் வெப்பநிலை மாறுபாடுகளை அந்த இலை மிக எளிதாகப் பொறுக்கக்கூடும். பைன், ஸ்புரூஸ், பர் (Fir), ஹெம்லக், சீடர் (Cedar) சைப்பிரஸ், யூ என்பவை மிகவும் பிரசித்தி பெற்ற இலையுதிரா மரங்கள், மா, நாவல் புன்னை சண்பகம் போன்ற வெப்பநாட்டு மரங்களில் பெரும் பாலானவையும் அத்தகையனவே. சில இலையுதிராத் தாவரங்கள் சிறந்த வேலைக்கு உதவும் மரங்களாகும். மரம் வெட்டுவோர் இலையுதிரா மரங்களை மென்மரங் கள் (Soft woods) என்பதுண்டு. இலையுதிர் மரங் களை வன்மரம் என்றும், இவற்றை மென்மரம் என் றும் அழைத்தாலும், இரண்டு வகைகளிலும் மரத்தின் உறுதி இனத்துக்கு இனம் பெரிதும் வேறுபடும். sor தென்னிந்திய இலையுதிரா மரங்கள்: தென்னிந்தி யாவில் கொங்கணம் முதல் கன்னியாகுமரிவரையுள்ள இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, தென்மேற் குப் பருவக்காற்றும் வடகிழக்குப் பருவக்காற்றும் வீசு வதன் காரணமாக 70-300 அங்குல மழை பெறுவதாக வும் ஈரப்பதமுடைய தாகவுமிருப்பதால், இலையுதிராக் காட்டு மரங்கள் செழித்து வளர்வதற்கு மிகவும் ஏற்ற தாகும். இந்தியாவில் பலவிதமான மரஞ்செடிகள் இந் தப்பகுதியில் காணப்படுவதுபோல வேறு எந்தப் பகுதி யிலும் காணப்படுவதில்லை. இங்கே பயன்படக்கூடிய செடிகளும் மருந்துச்செடிகளும் பல காணப்படுவதோடு வெட்டுமரங்கள் சுமரர் அறுபது இனங்கள் காணப்படு கின்றன. இந்தக் காடுகளே பண்டை நாள் முதல் நமக்கு வெட்டுமரமும் பலவிதமான காடுபடு திரவியங் களும் கொடுத்துவருகின் றன. இலையுதிராக் காடுகளிலுள்ள வெட்டுமரங்கள் வன் மரம் என்றும் மென் மரம் என்றும் இருவகைப்படும். வன்மரத்துக்கு ஆயினி, சோலைவேங்கை, வெள்ளகில், கோங்கு, நாங்கு, வழலை, மயிலை ஆகியவற்றையும், மென்மரத்திற்கு மட்டிப்பால், வெள்ளைக் குங்கிலியம், கணிலை, கொல்லமா, வெண்கொட்டை, பாலை ஆகியவற் றையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 1935-36 வரை மென்மரங்கள் பயன்படக் கூடியனவாகக் கருதப் படவில்லை ; வன்மரங்களுள்கூட ஐந்தாறுதான் உயர் தனவாகக் கருதப்பட்டன. அவையும் கட்டடவேலைக் கும், இருப்புப்பாதை தாங்கு கட்டைக்கும் (Sleeper), நாற்காலி முதலியவற்றிற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தன. ஆனால் ஒட்டுப்பலகையும் தீக்குச்சியும் தென் னிந்தியாவில் பல பகுதிகளில் செய்யத் தொடங்கிய பின் இதுவரை பயனற்றவை என்று கருதப்பெற்ற மென் மரங்கள் மதிப்புப் பெறலாயின. இருக்கும் நிலை மையைப் பார்த்தால் அவையே தேக்கையும் நூக்கை யும் வீடச் சிறப்புப்பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இரண்டாவது உலக யுத்தத்தால் வெட்டுமரப் பஞ்சம் ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகட்குமுன் கேள்விப் படாத பல வன்மரங்கள் இப்போது நாளுக்குநாள் மிகுதியாக விரும்பப்பட்டுவருகின்றன. ' இலையுதிராக் காடுகளிலுள்ள அறுபது வெட்டு மர இனங்களுள் வன்மரத்தில் சிறந்த அயினி,வெள்

ளகில், கோங்கு ஆகியவையும், மென் மரத்தில் வெள்ளைக் குங்கிலியம், கணிலை ஆகியவையும் வாணிகத் துறையில் பெருமதிப்புடையன. இம்மரங்களைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு. கே.என்.ரா. இவனாவா (Ivanovo) மத்திய ரஷ்யக் குடியரசின் ஒரு பகுதிக்கும் அதன் தலைமைப் பட்டணத்துக்கும் பெயர். வால்கா நதி பாயும் பகுதி. ரை, ஓட்ஸ் விளைகின் றன. கால்நடை வளர்ப்பு நடைபெறுகிறது. இங்குக் கிடைக்கும் முற்ற நிலக்கரியிலிருந்து மின்சாரம் ஆக்கப் படுகிறது. தலைமைப் பட்டணத்தில் பருத்தி நூற்ற லும் நெய்தலும் மிகுதி; ரசாயனத் தொழிற்சாலையும் உள்ளது; மக் : 2,85,000 (1939). இவாயா சாசனாமி பத்தொன்பதாம் நூற் றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய எழுத்தாளர். இவருடைய நிப்பான் முகாஷி பனாஷி என்னும் தேவதைக்கதைகள் பேர்பெற்றவை; அழகான நடையில் எழுதப் பெற் றவை. இழுப்பு (இசிவு, Convulsions) : இது சாதா ரணமாகச் சிறு பிள்ளைகளிடம் காணப்படுகிறது. இது பல காரணங்களினால் ஏற்படலாம். வயது முதிர்ந்தவர் களுக்கு எந்த எந்தக் காரணங்களினால் குளிர் கண்டு உடம்பில் நடுக்கம் ஏற்படுமோ, அந்த அந்தக் காரணங் களினாலெல்லாம் சிறு பிள்ளைகளுக்கு இது ஏற்படும். அன்றியும் சிறு பிள்ளைகளுக்கு மூளையிலோ அல்லது மூளையைச் சுற்றி இருக்கும் உறைகளிலோ நோய் இருக்குமாயின் அதனாலேயும்கூட இழுப்பு ஏற்படலாம். ஆதலால் இதன் காரணத்தை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகப் பிறந்த மூன்று மாதத்திற் குள்ளாகக் குழந்தைகளுக்கு இது உண்டாகுமானால் பிரசவ காலத்தில் அதன் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களினாலே உண்டாகியிருக்கும் என்று அறிய வேண்டும். பிரசவ காலத்தில் மூளையைச் சுற்றியிருக்கும் உறைகளில் ஒன்று கிழிந்து விடுமாயின் அதனாவே இரத்தம் வெளிப்பட்டு இது ஏற்படும். சிசு தாயின் கருப்பத்தில் இருக்கும்போதே மூளை சரியானபடி வளரா மல் போய் விடுமாயின் அதனாலேயும் உண்டாகலாம். இந்த நோய் பெருமூளை டிப்லீஜியா (Cerebral Dip- legia) என்று சொல்லப்படும். மேலும் குழந்தைக்கு மூளையில் நீர் அதிகமாக இருக்கலாம். இது தலை நீர்க் கோவை (Hydro-cephalus) எனப்படும். இந்த நோயில் மூளையைச் சுற்றிலு மிருக்கும் நீர் அதிகப்பட்டு, மூளையையே மெல்லியதாகத் தட்டையாக்கி விடுகிறது. அதனால் இந்தக் குழந்தைகளுக்கு மண்டை பெருத் திருக்கும். மண்டை மட்டும் பெருத்திருக்குமே தவிர, முகம், கண், வாய் எல்லாம் சாதாரண அளவிலேயே இருக்கும். இப்படிப் பெருத்திருப்பதால் குழந்தை தலையைத் தூக்க முடியாது. இந்த நோயாலும் இழுப்பு ஏற்படலாம். அல்லது பெற்றோர்களுக்குக் கிரந்திநோய் (Syphilis) இருந்தாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகலாம். குழந்தை பிறந்து சில மாதங்கள் கழிந்தபிறகு இழுப் புண்டாகுமானால் அது மேற்சொன்ன காரணங்களினால் ஏற்படாது. சாதாரணமாக ஆறு மாதத்திலிருந்து ஒன் பது மாதத்திற்குள்ளிருக்கும் குழந்தைகளுக்கு இது ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உணவில் போது மான அளவு வைட்டமின் டீ இல்லாமல் இருப்பது. அந்த உணவிலிருந்து உடம்புக்கு வேண்டிய அளவு கால்சியம் சத்துச் சேராமல் போய்விடுகிறது. அதனால் இரத்தத்திலும் கால்சியம் குறைவாக இருக்குமாயின் அதனாலேயே இது ஏற்படலாம். வைட்டமின் டீ குறை