இளந்தத்தன்
140
உறுதுனை தேடுமின்" என்று முடிக்கும் செய்யுள் அருள் நிறைந்த அவருள்ளத்தைப் புலப்படுத்துவ தாகும். நல்வினை செய்தவர் நன்மை அடைதலும், தீவினை செய்தவர் தீமையுறுதலும் ஒருதலை யாதலால் கல்லறமே செய்து உய்யுமாறு மன்பதை உலகத்தை வேண்டுகின்றார் இளங்கோவடிகள். தமிழ் நாட்டிலுள்ள சமயங்களையும் தெய்வங்களையும் குறித்துப் பாடும் பொழுதும் அவருடைய செந்நெறி நன்கு புலனாகின்றது. $ சிவ பிறவா யாக்கைப் பெரியோன் " என்று பெருமானைக் குறிக்கின்றார். நாராயணா என்னா நா என்ன நாவே" என்று திருமாலைப் பாடுகின்றார்.சிவ கதிநாயகன் என்று அருகதேவளைப் போற்று கின்றார். 1 இவருடைய காலத்தைக் குறித்தும், சமயத்தைக் குறித்தும் கருத்து வேறுபாடு உண்டு. அவற்றைச் சிலப்பதிகாரம் என்னும் தலைப்பின்கீழ் ஆராய்தலே பொருத்த முடையதாகும். சேரநாட்டு இளங்கோவாய் விளங்கிய இக்கவிஞர் செந்தமிழ்க்கலைஞராய், நற்றவ முனிவராய்த் திகழ்ந்து, அருங் கலைக்களஞ்சியமாகிய சிலப்பதிகாரத்தை ஆக்கித் தந்து அழியாத பெருமை பெற்றார். பார்க்க: சிலப் பதிகாரம். ரா. பி. சே. இளந்தத்தன் ஒரு புலவன். இவன் சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூருக்கு வந்தான். அப் போது உறையூரில் அரசு புரிந்த நெடுங்கிள்ளி இவனை ஒற்றனென்று கருதிக் கொல்லத் துணிந்தான். அப் பேரது கோவூர் கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளிக்கு இவன் ஒற்றனல்லன் என்று விளக்கி, இவனைத் தப்பு வித்தார் (புறம்.47). இளந்திரையம் சங்க நூல்களில் ஒன்று (இறையனார் களவியல் முதற் சூத்திர உரை). இளந்திரையன்: இவன் தொண்டைமான் இளந்திரையன் எனவும் திரையன் எனவும் திரையல் எனவும் வழங்கப்படுகிறான். இவன் இளந்திரையம் என் னும் நூலொன்று இயற்றுவித்திருப்பதாகத் தெரி கிறது. இவன் பெயரால் திரையனூரென ஓருரிருந்ததாக நன்னூல் மயிலைநாதர் உரை அறிவிக்கிறது. இவன் ஆதொண்டைச் சக்கரவர்த்தி எனத் திருமுல்லை வாயிற் புராணத்திலே குறிக்கப்படுகிறான். பார்க்க: ஆதொண் டைச் சக்கரவர்த்தி. இளந்தேவனார்: இவரை மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்பர். பண்டவாணிகன் என்பதனால் இவர் வணிகர் என்று அறியலாம் (நற். 41; அகம்.58,298). இளநாகனார் சங்ககாலப் புலவருள் ஒருவர். நாகன் என்னும் பெயருடைய பலரினின்றும் பிரித்தறிய இளநாகனார் எனப்பட்டார் (நற்.205,231) இளம்பல் கோசர்: கோசர் ஒருவகை வீரர் இவர்களைப்பற்றி எட்டுத்தொகை நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. 'கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்' (மதுரைக் 509,773) எனவும், 'கொங்கிளங் கோசர்" (சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை) எனவும் வரு கின்றன. பார்க்க: கோசர். இளம்பிள்ளை வாதம் (Infantile Paralysis or Acute Anterior Poliomyelitis) குழந்தை களுக்கு வரும் தொற்று நோய்களுள் மிகவும் பயங்கர மானது. இது முடமாக்கும் நோய். இது உலக முழு வதும் காணப்படினும் மிகுதியாகக் காணப்படுவது வட அமெரிக்காவில்தான். இங்குக் காணப்படுவது
போல் இதர நாடுகளில் பெருவாரி (Epidemic) நோயாக இல்லை. இந்நோயை உண்டாக்கும் வைரஸை மைக்ராஸ் கோப்பால் பார்க்க முடியாது. இவ்வைரஸில் பல்வகை கள் உள்ளன. சில மூளைக்கு மிகத் தொலைவிலுள்ள நரம்புகளைத் தாக்கும். சில மூளைக்கருகில் தாக்கிச் சாவை உண்டாக்கிவிடும். இந்நோய்காணுந்தொடக்கத்தில் குழந்தைக்குத் திடீ ரென்று ஜவதோஷம் வந்து மூக்கு வடியும். தலைநோயும் வரலாம். மந்தமும் பசியின்மையும் உண்டாகும். குழந்தை எளிதில் சினந்து அழும், தசைகள் இழுக்கும். கைகள் நடுங்கும். தொண்டையில் அழற்சி காணும். காய்ச்சலும் உண்டாகும். வாதநிலை தோன்றும்போது வாந்தி உண்டாகும். மலமும் மூத்திரமும் ஒழுங்காகப் போகா. கழுத்தை அசைக்க முடியாமலோ அல்லது முதுகு தண்டில் தொடமுடியாமலோ இருந்தால் உடனேவைத்தியர் பரிசோதிப்பது இன்றியமையாதது சிவர்க்கு இழுப்பும் சன்னியும் தோன்றலாம்.அப்போது தசைகள் பலமில்லாமலும் தொட்டாலே வலி கொடுப்ப தாகவும் இருக்கும். இந்நிலையிலுள்ள குழந்தைகளை எடுத் தால் அழும். இந்தநிலை மிகுந்த அபாயமானது. உடனே அவயவச்சீரியல் (Orthopaedics த.க.) மருத்துவர் உதவியை நாட வேண்டும். . நோயாளியின் சளி, மலம் ஆகியவற்றின் வாயிலாகப் பிறர்க்கும் இந்நோய் பரவும். எல்லோரையும் இந்நோய் தாக்கலாம். சில குழந்தைகளுக்கு மட்டும் இந்நோய் வருவதும், மற்றக் குழந்தைகளுக்குத் தொற்றாததும் ஏன் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொது வாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே வருவதுண்டு. இந்நோயின் வைரஸின் அவயக்காலம் 7-14 நாட்கள் எனக் கருதப்படுகிறது. குழந்தையின் எலும்புகள் வளைந்துபோகாமல் பாது காப்பதற்காகப் பலவகைச் சாதனங்கள் செய்யப்பட் டிருக்கின்றன. குழந்தையைக் கெட்டியான படுக்கையின் மீது படுக்கவைக்க வேண்டும். கால் கைகள் எப்போதும் சூடாயிருக்குமாறு செய்யவேண்டும். தொற்றுநோய் நீங்கிக் குழந்தை தொட்டு எடுத்தால் அழாமல் இருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளித்தல், நீரினடியே உடற்பயிற்சி, தசைப் பயிற்சி முதலியன கையாளப் பட வேண்டும். தீவிரமான இளம்பிள்ளைவாதம் தானே குணமாகி விடும். ஆனால் நரம்பு மண்டலம் நிலையாகக் கேடுறலாம். அவயவச்சீரியல் மருத்துவர் கை கால்களைச் சரியான நிலை யில் வைப்பார். பழுதான நரம்பணுக்கள் சீர்பெற 6-8 வாரங்கள் செல்லும். நோவு இருக்கும்போது உருவி வீடலாகாது.நோவு போன பிறகும் சோர்வு உண்டா காத அளவு தசைகளையும் மூட்டுக்களையும் அசைக்க இடந்தரலாம். மூச்சுச் சம்பந்தமான மூளை அல்லது முதுகுதண்டுப் பகுதிகளில் நோய் கண்டால் குழந்தை மூச்சுவிடக் கஷ்டப்படும். இதற்காக 'இரும்பு நுரையீரல்கள்’ (Iron lungs த.க.) என்னும் கருவிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. சில மின்சாரக் கருவிகளைக்கொண்டு தசைகளின் வாதத்தைக் கண்டுபிடித்துக் குணமாக்க முடிகிறது. பயிற்சி பெற்ற தாதிகளின் உதவியால் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, அவை மீண்டும் தமது இயக்கத்தைப் பெறுமாறு செய்கிறார்கள். இளம்புல்லூர்க்காவிதி சங்ககாலப் புலவர். காவிதி' என்னும் பட்டம் உடைமையால் இவர் இப்