பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறால்

149

இறால்

மட்டுமே உண்டு. மெதுவாக அசையும் குடல், இரத்த நாளம் முதலியவற்றில் வரியில்லாத தசைகளே உண்டு. இறால் பெரும்பாலும் செத்துக் கிடக்கும் பொருள் களைத் தின்று அசுத்தத்தைப் போக்கும் பிராணி. எனினும் உயிருள்ள சிறு பிராணிகளையும் பிடித்துத் தின்னும். தலையிலும் மார்பின் முன்பாகத்திலும் உள்ள துருவு தாடைகள் உணவைச் சிறு துணுக்குக் களாக நறுக்கி, முன்னுக்கு வாய்க்கு அனுப்பும். அங்குள்ள கடினமான பற்களுள்ள அரை தாடை அதை இன்னும் நசுக்கி மெல்லும். பிறகு உணவுப்பாதை வழியாகப் போகும்போது இறாலின் வயிற்றிலும் அங் குள்ள கொம்புப் பொருளாலான பல் போன்ற கடின மான உறுப்புக்களால் அரைபடும். வயிற்றில் மிக நுண்மையாக அரைக்கப்பட்ட உணவு வயிற்றைச் சார்ந்துள்ள செரிமானச் சுரப்பிக்குள்போகும். சற்றுப் பெரிய பகுதிகள் மெல்ல மெல்ல குடலுக்குள் போகும். இன்னும் பெரிய நொய்யாக இருப்பது திரும்பவும் வயிற்றில் அரைக்கும் பகுதிக்கே வரும். இறாலின் செரி மானச் சுரப்பி கல்லீரலாகவும் கணையமாகவும் இருப்ப தன்றி இரைப்பை போலவும் இருக்கிறது. கிளைக் கொஜென் இதில் செய்யப்படுகிறது. இது பெப்ட்டோன் களையும் சர்க்கரையையும் உட்கவர்கின்றது. 1 இறால் செவுள்களின் வழியாக மூச்சு விடும். இவை நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை உட்கொண்டு, உடம்பில் உண்டாகும் கார்பன் டையாக்சைடை வெளிவிடும். செவுள்கள் இறகுபோன்ற அமைப்புள்ளவை. அவை மார்பின் இருபக்கங்களிலும், அங்குள்ள தாடைக் கால்கள். நடைக்கால்கள் ஆகியவை உடம்போடு பொருந்தும் இடத்திலும், இந்த உறுப்புக்களின் மேலு மாக வளரும். இவை முறையே பக்கச் செவுள்கள், (Pleurobranchs) கணுச் செவுள்கள் (Arthro branchs), காற்செவுள்கள் (Podobranchs) எனப் படும். கடலிலுள்ள சாதாரண இறாலில் பக்கத்துக்கு 24 செவுள்கள் இருக்கின்றன. தலை-மார்பு மேலோட் டின் இருபுறமும் இறக்கைபோல நீண்டுள்ள பாகங்கள் இந்தச் செவுள்களை மூடிக்கொண்டிருக்கும். அவை இந்த இறக்கைகளாலான் செவுளறைக்குள் இருக்கும். தலையின் கடைசி உறுப்பாகிய தாடையின் அடியில் வளர்ந்திருக்கும் தட்டையானதும் சற்றுக் குழிந்துள் ளதுமான படகுபோன்ற தாடைமடல் (Scapho- gnathite) என்னும் பாகம் அசைவதால் நீர் செவு ளறைக்குள் பின்புறத்திலிருந்து நுழைந்து, முன்னுக்குச் செவுள்கள்மேல் ஓடி முன்புறமாக வெளியே வரும். இந்த மூச்சு நீரோட்டம் (Respiratory current) எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். இறாலின் முதுகு புறத்தில் இதயம் இருக்கிறது. அதைச் சுற்றிலும் இரத்தம் நிறைந்த பெரிய இடை வெளி உண்டு. இதயத்திலிருந்து சில இரத்தக் குழாய்கள் ஓடுகின்றன. அவற்றிலிருந்து. இரத்தம் உடம்பிலுள்ள இரத்தவுடலறைகளாகிய இடை வெளிகள் வழியாகச் செல்லும், அங்கிருந்து வேறு குழாய்கள் வழியாக இரத்தம் செவுள்களுக்குச்சென்று, சுத்தமாகித் திரும்ப இதயத்தைச் சுற்றியிருக்கும் இடை வெளிக்கு வரும். அங்கிருந்து இதயத்துக்கு வந்து சேரும். இறாலின் இரத்தம் செந்நிறமாக இராது. அதில் ஹீமொகுளோபின் என்னும் நிறமி இருப்ப தில்லை. ஹீமொசயனின் என்னும் பொருள் இருக்கிறது. இது ஆக்சிஜனுடன் கூடியபோது நீலச்சாயையாகக் காணும். ஆக்சிஜன் இல்லாதபோது நீர்பேரல நிறமின்றி யிருக்கும். கழிவு உறுப்புக்கள் பக்கத் திற்கு ஒன்றாக இரண்டு உண்டு. அவை பச்சை நிற

மாகத் தெரியும். அதனால் பச்சைச் சுரப்பிகள் என்றே பெயர்பெறும். அவை ஒவ்வொன்றும் தன் பக்கத்து இரண்டாவது உணர்கொம்பின் அடியிலுள்ள ஒரு தொளைவழியாக வெளியே திறக்கும். தலையில் கண்க ளுக்கு அருகில் ஒரு மூளையும், அதைச் சேர்ந்த நரம்பு களும், நரம்பு முடிச்சுக்களும் இருக்கின்றன. உணர் கொம்புகளும் கண்களும் உணர்ச்சி யுறுப்புக்களில் முதன்மையானவை, உணர் கொம்புகளில் அன்றிஉடம் பின் பல பாகங்களிலும் உள்ள சிலிம்பிகளும் உணர்ச் சித் தொழில் உள்ளவை. சில தொட்டுணர் கருவிகள். சில பொருள்களின் ரசாயனத் தன்மையை உணரும். ஒவ்வொரு முதல் உணர்கொம்பின் அடியிலும் ஒரு சிறு பை உண்டு. அதில் நீர் நிரம்பியிருக்கும். நுண்மை யான உணர்ச்சி மயிர்களும் அதில் உண்டு. இவற்றி னிடையே மிக நுண்ணிய மணலும் இருக்கும். இறால் அசையும்போது மணல்கள் புரளும். அதனால் மயிர் களில் தூண்டல் உண்டாகும். இந்தப் பை உடம்பின் சீரை அமைத்துக் கொள்ளும் சீர் உறுப்பாகப் Balancing organ) பயன்படுகிறது. இறாலே மணலை இந்தப் பைக்குள் போட்டு வைத்துக் கொள்கிறது. என்று சொல்லுகிறார்கள். இறால் தோலுரிக்கும். அப் போது இந்தச் சீர்ப்பையின் உள்தோலும் உரிந்து வந்துவிடும். அதனோடு மணலும் வெளிவந்துவிடும். சீர்ப்பையின் வேலையை அறிவதற்காக ஒரு பரிசோ தனை கடந்தது. ஒரு விஞ்ஞானி நன்றாக வடிகட்டின நீரில் அப்போது தானே தோலுரித்த ஒருவகை இறால் ஒன்றை விட்டார். அதில் இரும்பை அராவின துளை வைத்தார். அந்தப் பிராணி அந்த இரும்புத் தூள்க ளைப் பொறுக்கிச் சீர்ப்பைக்குள் வைத்துக்கொண்டது. அவர் ஒரு பலமான மின் காந்தத்தைப் பிராணியின் மேலே பிடித்தார். உடனே இறால் மல்லாக்கத் திரும் பிக்கொண்டது. இரும்புத்தூள் மேலே இழுக்கப்பட் டிருக்கும். எப்போதுமுள்ள புவியீர்ப்புச் சக்தியை விட இப்போது மின்காந்தத்தின் இழுப்பு வலிமை மிக்கதாக இருந்ததால் பிராணி அவ்வாறு இழுப்பு வலிமைமிக்க பக்கமாகத் திரும்பிக்கொண்டிருக்க வேண்டும். இருல் (பாலிமான் சாதி) முட்டையோடு கூடிய பெண். 1. மார்பைச் சார்ந்த இரண்டாவது நடைக்கால். இது ஆணில் மிகப் பெரிதாக வளரும். 2. கருவுற்ற முட்டைகள் துடுப்புக்களில் திராட்சைக் குலை போல ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ஆண் இறாலில் பால் உறுப்புக்கள் மார்பு பாகத் தின் முதுகுபக்கம் நடுக்கோட்டுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வரும் குழாய்களின் வாயில், மார்பிலுள்ள ஐந்தாவது நடைக்கால்கள்