பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

161

இனப்பெருக்கம்

எதிர்ப்படும் எத்தனையோவகையான கட்டும், வேறு வேறான மாதிரியும், இந்தவிதமாகவே முதன்மையாகக் கலவியினப்பெருக்கத்தின் வழியாகவே உண்டாயிருக்க வேண்டுமென்று காண்கிறது. கள்: கலவி யினப்பெருக்கத்தினால் உண்டாகும் நலன் கள் பலவணுத் தாவரங்களிலும் பிராணிகளிலும் பெரும்பாலானவற்றுள் கலவியினப்பெருக்கம் மட் டுமே நடக்கிறது. அவற்றுள் கலவியிலா இனப்பெருக்க மும் சிலவேளை நடக்கலாமாயினும் சாதாரணமாகக் கலவி யினப்பெருக்கமே நடக்கும். இதனால் கலவியினப் பெருக்க முறையினால் நன்மைகள். எவையேனும் இருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. கலவியினப் பெருக்கம் சிக்கனமான முறையாக இருக்கிறது. உறுப்பு வேறுபாடுகளும் (Differentiation), அ த் த கைய உறுப்புக்களின் ஒற்றுமைப்பாடும் (Integration) உயர்தரமாக அமைந்துள்ள கணுக்காலி, முதுகெலும்பி போன்ற உயிர்வகைகளில் கலவியிலா இனப்பெருக்கம் நிகழ்வது முடியாத காரியம், நட்சத்திரமீனில் ஒரு கை முரிந்து விழுந்துவிட்டால் அதிலிருந்தே முழு நட்சத்திர மீன் ஒன்று வளர்ந்து விடலாம். (பார்க்க: மறு வளர்ச்சி, (Regeneration). பூச்சியிலோ பறவையிலோ இது ஆகாதன்றோ? பாலணுக்கள் உண்டாவதற்கு ஆதாரமான கருத்திசுவானது (Germ) கருவணுப் பிளவின் தொடக்கத்திலேயே வேறு பிரிக்கப்பட்டு, மற் றப் பாகங்களாகிய உடம்பைக் (Soma) கட்டுந் தொழிலில் கலவாமல் இருக்கிறது; மேலும் எந்தக் கருவுற்ற அண்டவணுவிலிருந்து உண்டாயிற்றோ, அதனோடு தொடர்ச்சியான பரம்பரைப் பண்புகள் பொருந்திய அமைப்பை ஆசழியாமல் வைத்திருக்கிறது. இப்படி இத்திசு இத்திசு உடலுக்குள்ளிருந்தும் வேறாகித் தோய்ந்தும் தோய்வில்லாமல் இருப்பதனாலே உடம் புக்கு ஏற்படக்கூடிய இடர்களினாலே எளிதில் பழு துறாமல் இருக்கலாம். தாயுடம்பிற்கு ஏற்படும் தீங்கு அதிலிருந்து உண்டாகும் கிளைக்குருத்திற்கு ஏற்படும் அளவிற்குப் பாலணுக்களுக்கு உண்டாவதில்லை. உரு ளைக் கிழங்குபோன்ற சில பயிர்களை விதையிலா முறையில் துண்டுகளை நறுக்கிவைத்தே பல தலை முறைகள் பயிர் செய்துகொண்டு போவதால் நாளடை வில் பயிரின் நல்ல பண்புகளில் குறைவு ஏற்படுவதுண்டு. கலவியிலா இனப்பெருக்கத்தினால் நாளடைவில் ஏற் படக்கூடிய பண்புக் குறைவு, மூப்புத் தன்மை போன்ற சோர்வு முதலியவை கலவி யினப்பெருக்கத்தால் நீங்கி. வீறும் இளமையும் பொருந்திய சந்ததி உண்டாகும் (பார்க்க: இளமையாக்கம் உயிரியல்). பாலணு முதிர்ச்சி (Maturation) முறையிலும், கருவுறல் (Fertili- sation த.க.) முறையிலும் பரம்பரைப் பண்புகள் கலத்தலுக்கும் மாறுபடுதலுக்கும் வாய்ப்பு உண்டா கின்றது. இதுவே கலவி யினப்பெருக்கத்தின் நலன் களிலெல்லாம் தலையான நலன். இதனாலே கலவியிலா இனப்பெருக்கத்தைக் காட்டிலும் பேரளவிற்குப் புதிய வேறுபாடுகள் உயிர்களில் தோன்றுகின்றன. பிராணி களிலே ஆண், பெண் என்னும் இருவேறு உருவங்கள் உண்டாவதற்குக் கலவி யினப்பெருக்கம் வழியாக இருக் கிறது. இதனால் ஆண் பெண்கள் ஒன்றையொன்று நாடலும், காதல் வழிபாடு செய்தலும் உண்டாயிருக் கின்றன. வாழ்க்கைத்துணையிடத்து அன்புவைத்தல் எழுந்துள்ளது. பாலினப்பெருக்கமானது உணர்ச்சி மெய்ப்பாடுகளும், குடும்ப வாழ்க்கையும், பேச்சும் பரிணமிப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது. முதல் முதல் எழுந்த குரலொலி ஓருயிர் தன் துணையை அழைக்கக் கூவும் ஒலியாக இருந்திருக்கலாம்.

இணைப்பான்மை (Hermaphroditism): ஹைட்ரா, தட்டைப்புழு, மண்புழு, அட்டை, நத்தை முதலிய பல சாதாரணப் பிராணிகளில் அண்டச் சுரப்பியும் விந்துச் சுரப்பியும் ஆகிய இரண்டு பாலுறுப்புக்களும் ஒவ் வொரு தனி உயிரிலும் உண்டு. இவ்வாறு இரண்டு பாலுறுப்புக்களும் ஒரே உடலில் இருக்கும் நிலை இணைப் பான்மையாகும். இந்த உயிர் இணைப்பாலி எனப்படும். இவ்வுயிர் இருபாலினதேயானாலும் ஆண்ணுக்களும் பெண்ணணுக்களும் வெவ்வேறு காலங்களில் முதிர்வன. ஆதலால், அயற்கரு வுறலே (Cross fertilisation) சாதாரணமாக நடைபெறும். மண் புழு போன் சில வற்றிலே இரண்டு உயிர்கள் இணையும்போது ஒன்றி லிருந்து வரும் ஆணணுக்கள் மற்றொன்றின் உடலி லுள்ள விந்துவாங்கி (Spermatheca) களுக்குள்ளே போய்ச் சேமித்து வைக்கப்படும். ஒரு பிராணியின் முட்டைகள் வெளி வரும்போது அவை மற்றொரு பிராணியிலிருந்து பெற்றிருந்த ஆண்ணுக்களால் கரு வுறும், வேறு உயிர்களின் உடலுக்குள்ளே ஒட்டுண்ணிக ளாக இருக்கும் ஈரல் புழு, நாடாப்புழு போன்றவற் றுள் தன் கருவுறலே (Autogamy) நடக்கும். கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis, த.க.) சில உயிர்களில் பெண் இடும் முட்டை ஆணணுவால் கருவுறப் பெறாமலே புதிய உயிராக வளர்ந்துவிடும். இச்செயல் கன்னியினப்பெருக்கம் எனப்படும். ரோட்டி. பெரா (த.க.) என்னும் சிறிய உயிர்வகைகளில் இது நன்கு காணப்படுகிறது. இவற்றில் சில சாதிகளில் ஆண்களே இல்லை. சில சிறிய ஓட்டுமீன் (த.க.) வகை களில் ஆண்கள் சில பருவங்களில் காணப்படுவதில்லை யாயினும் இனம் பெருகிக்கொண்டே போகும். அசு குணியில் (த.க.) வேனிலில் பல தலமுறைகள் ஆண் இல் லாமலே உண்டாகும். ஆண் தேனீ (சோம்பேறித் தேனீ) கருவுறாத முட்டையிலிருந்தே வளர்வது. ரங்களிலும் கன்னி யினப்பெருக்கம் உண்டு. (உதா: பிஞ்சாரி). தாவ பலகருப்பேறு (Polyembryony) கருவுற்ற ஓரணுவிலிருந்து ஒரு கருவே வளர்ந்து முதிர்ந்து ஒரு புதிய உயிராக வெளியே வரும். அப்படிக்கின்றிச் சில உயிர்களில் கருவணுப்பிளவு நேரும்போது பல கருக்க ளாகப் பிரிந்து பல உயிர்கள் தோன்றும். ஆர்மடில்லோ என்னும் பிராணியில் இது நிகழ்கிறது. பைன் மரங்களி லும், நாரத்தைச் சாதியிலும் இதைக் காணலாம். தலைமுறைமாற்றம் (Metagenesis) : உயர்தரப் பலவணுப் பிராணிகளைத் தவிர்த்து, மற்ற எல்லாப் பிராணிகளிலும், பலவணுத் தாவரங்களில் பெரும் பாலானவற்றுள்ளும் கலவியிலா இனப்பெருக்கம் நடக்கின்றது என்றாலும், இவற்றுள் கலவி யினப் பெருக்கமும் பேரளவிற்குச் சாதாரணமாக நடை பெறுகின்றது. உடலின் கட்டு எவ்வளவுக்குச் சிக்க லாக அமைந்துகொண்டு போகிறதோ, அவ்வளவுக்குக் கலவி யினப்பெருக்கமும் முதன்மை பெற்றுக் கொண்டே போகிறது. உயர்தரப் பிராணிகளிலே முதிர்ச்சியடைந்த நிலையில் கலவியிலா இனப்பெருக்கம் நடப்பது ட்யூனிக்கேட்டா என்னும் கடற் பிராணி களில் உண்டு. இவற்றைச் சேர்ந்த சால்ப்பா என்னும் சங்கிலிச் சொறியில் குருத்துக்கள் உண்டாகி, ஒவ் வொன்றும் ஒரு சால்ப்பாவாக வளர்ந்து, பல சால்ப் யாக்கள் சங்கிலிபோல ஒட்டிக்கொண்டிருக்கும். பிறகு தனித்தனியாகி விடும். இப்படி உண்டான ஒவ்வொன் றும் பாலணு உள்ளவை. குழியுடலிகளில் (த.க.) கல்வி யிலா இனப்பெருக்கஞ் செய்யும் பாலிப்புக்களிலிருந்து பால் வேற்றுமையுள்ள மெடுசாக்கள் உண்டாவது