பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

163

இனப்பெருக்கம்

தாவரங்களில் இனப்பெருக்கமானது கலவியினப் பெருக்கம் (Sexual reproduction), கலவியிலாவினப் பெருக்கம் (Asexual r.). விதையிலாவினப்பெருக்கம் (Vegetativer.) என மூன்று வகையாக நடக்கின்றது. இரண்டு பெற்றோர்களிடத்திலும் சிறப்பாக அமைந் துள்ள இனப்பெருக்கத்திசு (கருத்திசு, Germinal tis- sue) விலிருந்து உண்டாகும் இரண்டு அணுக்கள் (பா லணுக்கள், Gametes) ஒன்றாகக் கலத்தலால் குழந்தை தோன்றுவது கலவியினப்பெருக்கம் எனப்படும். இந்த முறையல்லாத மற்ற இனப்பெருக்க முறைக் ளெல்லாம் கலவியிலாவினப்பெருக்க முறைகளே. ஆயி னும் தாவரவியலில், ஸ்போர்கள் என்னும் விதைத் தூள் களால் உண்டாகும் இனப்பெருக்கத்தை மட்டும் கல்வி யிலாவினப்பெருக்கம் என்பது வழக்கம். ஒவ்வொரு விதைத்தூளும் ஒரே அணுவாலானது. இத்தூள்கள் உண்டாவதற்கு உட்கருக்கள் கலப்பதில்லை. இவை தாவரங்களின் உடலில் தோன்றும் ஸ்போராஞ்சியா என்னும் விதைத்தூள் பெட்டிகளுள் உண்டாகும். இனி, பல தாவரங்களிலே தண்டு. வேர், இலை முத லிய உறுப்புக்களிலிருந்தும் புதிய செடிகள் உண்டா கும். இவை தனித் தாவரத்தின் ஊட்டத்திற்கு உதவும் உறுப்புக்கள். இவ்வூட்ட வுறுப்புக்களால் நிகழும் இனப்பெருக்கம் ஊட்ட இனப்பெருக்கம் அல்லது விதையிலாவினப் பெருக்கம் என்று சொல்லப்படும். தாவரங்களில் விதையிலாவினப் பெருக்கம் பல மாதிரிகளில் நிகழ்கிறது. பிராணிகளிலும் இம்முறை நிகழ்வதாயினும் அத்துணை வகைகள் காணப்படு வதில்லை. இனப்பெருக்க முறைகள் எல்லாவற்றிலும் மிக எளியது பிளவு அல்லது பிரிவு முறை (Fragmenta tion). அதாவது தாய் உயிரின் உடலின் ஒரு பகுதி பிளவுப்பட்டுப் பிரிந்து வேறொரு தனி உயிராக வளர்வது படம் 1. ஈஸ்ட்டு சாக்கரோமைசிஸ் செரெவீசீம் : ஓாணுவிலிருந்து அணுமுகிழ்கள் சங்கிலித்தொடர்போலத் தோன்றுவது. உதவி : மக்கிரா-ஹில் புக் கம்பெனி, நியூயார்க். இந்தப் பிளவானது உயிரின் உடலுக்குப் புறம்பாக உள்ள சூழலிலிருந்து உயிருக்கு நேரும் அடி. காயம் முதலியவற்றால் ஏற்படலாம். அல்லது உயிரின் உள் ளிருந்தே தானாகவே எழும் ஆற்றல் காரணமாகவும் உண்டாகலாம். இதைவிட உயர்நிலையடைந்த விதையிலா இனப் பெருக்கத்திலே புதிய உயிராக வரப்போகும் பிரிவுபட்ட பாகமானது தன் சாதாரண நிலையினின்று மாறுபாடு அடைந்தும், தான் செய்யப்போகும் வேலைக்குத் தக்க படி அமைந்தும் இருக்கும். ஈஸ்ட்டு என்னும் புளிப்பு அணுவுயிரில், ஒரு கிளையிலிருந்து குருத்துக்கள் தோன்று வதுபோல சில அணுக்களிலிருந்து அணு முகிழ்கள் தோன்றும் (படம். 1) இந்தக் குருத்தணுக்கள் சங்கிலித் தொடர்போலத் தாயணுவிலிருந்து உண்டாகும். ஈரற் செடிகள் என்னும் ஒருவகைப் பாசங்களில் சில அணுக்

கள் ஒன்று சேர்ந்து மேலே உறுதியான உறையால்பொதி யப்பெற்று, வெண்கடுகுபோன்று ஒருசிறு மணி ஆகும். அதுவும் குருத்துப்போன்றதே. இத்தகைய குருத்து மணிகள் (Gemmae) பல உண்டாகும். இவை ஒவ் வொன்றும் முன்னுக்குப் புதிய செடியாக வளரும். பூக்கும் தாவரங்களிலே உண்டாகும் குருத்துக்கள் புதுத்தண்டுக் கிளைகளாக வளரும் ஆற்றல் உள்ளவை. ஆதலால் அவற்றின் வழியாக இனப்பெருக்கம் நடை பெறுகிறது. உருளைக்கிழங்கிலுள்ள கண்கள் எல்லாம் வளர்ச்சிச்செயல் அடங்கிக் கிடக்கும் குருத்துக்களே. அவை புதுத்தண்டுகளாக வளர்ந்து,தாய்க்கிழங்கினின் றும் வேறாகித் தனிச் செடிகளாகக் கூடியவை. அவ் வாறே மற்றத் தரைக்கீழ்த் தண்டுகளிலும் குருத்துக் கள் உண்டு. வல்லாரை (சென்டெல்லா), ஆகாசத் தாமரை (பிஸ்ட்டியா). இராவணன் மீசைப் புல் (ஸ்பைனிபெக்ஸ்) முதலியவைகளில் உண்டாகும் ஓடுகொடிகள் உண்மையில் இலைக்கணுச் சந்திலுள்ள குருத்துக்கள் வளர்ந்து உண்டானவையே. அவற்றில் அங்கங்கே இசைவான இடங்களில் வேர்கள் முளைத் துப் புதுச் செடிகள் உண்டாகிவிடும். . காய்வள்ளிக் கிழங்கிலும்,நார்க்கற்றாழையிலும் கணுச்சந்துக்குருத் துக்களும் பூக்களும் சிற்றிலைக்கிழங்கு அல்லது கரணை (Bulbil) என்னும் இனப்பெருக்கக் குருத்துக்களாக மாறுகின்றன. உண்மையில் இயற்கையுருவவியலின் படி பூக்களும் மாறுபாடுற்ற குருத்துக்களே. புளியாரைக் கீரை (ஆக்சாலிஸ்), நந்தியாவட்டம் (டாபெர்னி மான்டானா! போன்றவற்றில் பக்க வேர்களில் குருத் துக்கள் உண்டாகி, அவை புதுச்செடிகளாக வளரும். பெரும்பாலும் இம்மாதிரி விதையிலா இனப்பெருக்கம் ஏதோ ஒரு தூண்டலால் ஏற்படுகின்றது. உதாரண மாக, ஒரு குருத்துக்கு அருகிலுள்ள ஒரு பகுதியை நறுக்கிவிட்டால், அது ஒரு தூண்டலாகி, அந்தக் குருத்து வளரத் தொடங்குகின்றது. சாதாரணமாகத் தண்டில் இருப்பதுபோல வேர்களிலே குருத்துக்கள் இருப்பதில்லை. ஆனால் ஒரு வேர் வெட்டுப்பட்டால், வெட்டுண்ட இடம் மரத்தோடு சேர்ந்திருப்பினும், சேராது பிரிந்திருப்பினும்கூட அந்த இடத்தில் குருத்து உண்டாவதைக் காணலாம். இதற்குக் கார ணம், வேரிலிருக்கும் சாறானது இயல்பாக வேறு புதிய பக்கவேர்களை யுண்டாக்குவதில் பயனாகும்; அந்த இயல்பான வழி, வேர் வெட்டுண்டதால் தடைப்படவே, சாறு வேறு வழியிற் பாய்ந்து, தண்டுக்கிளை குருத்துக் களைத் தோற்றுவிக்கிறது என்பதாம். உண்மையில் விதையிலா இனப்பெருக்க நிகழ்ச்சியெல்லாம் மறு வளர்ச்சி வகையே யாகும். கலயிலா இனப் பெருக்கத்தில் அதாவது ஸ்போர்கள் என்னும் விதைத்தூள்களால் நடைபெறும் இனப் பெருக்கத்தில் உட்கருக்கள் கலந்து ஒன்றாதவ் கிடை யாது. பலவேறு காரியங்களுக்கு ஏற்றவாறு பலவித மான விதைத்தூள்கள் காணப்படுகின்றன. எனினும் அவை ஒவ்வொன்றும் ஒரே அணுவாலானவை. அவை மைக்கிராஸ்கோப்பினால் மட்டுமே காணத்தக்க நுண்மையான அளவுள்ளவை, பல தாவரவகைகளிலே தனியுயிர்கள் மிகவும் அதிகமாகப் பெருகுவதற்கும், நெடுந்தூரம் பரவுவதற்கும் விதைத்தூள்கள் உண்டா வது நல்ல வாய்ப்பாக இருக்கிறது. விதைத்தூள்கள் தாமே அசைந்து இடம் பெயர்ந்து செல்லத்தக்கவையாக வும் இருக்கின்றன. அவற்றில் நுண்ணிய கசைகளோ, ரோமம் போன்ற இழைகளோ (சீலியும்) இருக்கும். அவற்றின் உதவியால் விதைத்தூள்கள் நீரில் நீந்திப் பரவும். இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும் ஆற்ற