பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

165

இனப்பெருக்கம்

எண்ணிக்கையுடையனவாக இருக்கும். உதாரணமாக மனிதனில் 48, வெண்காயத்தில் 16, லில்லியில் 24 உண்டு. சாதாரண உடலணுவிலுள்ள எண்ணிக்கை டிப்ளாய்டு அல்லது இரட்டை எண் எனப்படும். அதே உயிரின் பாலணுக்களில் உள்ள நிறக்கோல்கள் அதில் பாதி எண்ணிக்கையே இருக்கும். அது ஹாப்ளாய்டு அல்லது ஒற்றையெண் எனப்படும். கருத்திசுவிலுள்ள அணுக்கள் பிரிந்து பாலணுக்களாக மாறும்போது இயற்கையாக உள்ள நிறக்கோல்களின் பாதி எண்ணே பாலணுவுக்குள் வரும்வண்ணம் அப்பிரிவு நடைபெ ஏறு கிறது. அப்படி நிறக்கோல் எண்ணிக்கை குறையும்படி பிரியும் செயலுக்கு மையோசிஸ் (Meiosis) அல்லது குறைவுப் பிரிவு (Reduction division) என்பது பெயர். இரண்டு பாலணுக்கள் கலப்பது சிங்கமீ (Syngamy) என்னும் கருவுறு செயலாகும் (Fertili- sation). இங்கு விதைத்தூள் தலைமுறையில் இரட்டை யெண் நிறக்கோல்களும் பாலணுத் தலைமுறையில் ஒற்றையெண் நிறக்கோல்களும் இருக்கின்றன. முதல் தலைமுறையின் முடிவானது அணுக்களில் நடக்கும் குறைவுப் பிரிவு நிகழும்போதும், இரண்டாந் தலைமுறை யின் முடிவானது பாலணுக்கள் கலந்து கருவுறுஞ் செயல் நிகழும்போதும் ஆகும். எனினும் இந்த இரண்டு தலைமுறைகளும் ஒன்றில் மற்றொன்று செருகி (Teles- coped) அடங்கி விடுவதுண்டு. சிலவற்றில் விதைத் தூள் தலைமுறை சிறந்து காணப்படாமல் சிறுத்து ஒடுங்கிப் பாலணுத் தலைமுறையை ஆதாரமாகக் கொண்டிருக்கும். மற்றுஞ் சிலவற்றில் பாலணுத் தலை முறையான துவேறு பிரித்து அறிய முடியாததாக இருக் கிறது. இனப்பெருக்கத்துக்கு இயைபுடைய செயல்கள் பலவுண்டு. அவை ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகின் றன். அவற்றுள் பல சிக்கலான நிலைகள் உண்டு. அந்நிலைகளுள்ளே இந்தப் பாலணுத் தலைமுறை ஓர் அமைப்பாகப் பொருந்தியிருக்கின்றது. இந்த நிலை மிகச் சிறிய காலமே இருக்கும். ஆயினும் குறைவுப் பிரிவும் கருவுறலும் நிகழ்வதனாலே இருவிதத் தலை g படம் 6. செலாஜீனெல்லா மாக்ரோஸ்போராஞ்சியம் நெடுக்கு வெட்டு முறைகளும் இந்தத் தாவ ரங்களிலும் உண்டு ஏன் னும் கொள்கை நிலைநிற்ப தாகும். மேற்கண்டவற்றிலிருந்து விதைத்தூள் விதைத்தூள் லிருந்து பாலணுத் என்பது, தலைமுறையீ உண்டாவதும். தலைமுறையை ஒரு உண்டாக்குவதுமான பொருள் என்று வரையறுத் துக் கூறலாம். காலாந்தரத் திலே தாவரங்கள் பரிணாம மடைந்துகொண்டே வரும் போது. அவற்றின் வாழ்க்கை வட்டத்தில் மிக வும் வித்தியாசமான பல மாறுபாடுகள் தோன்றி வந்துள்ளனவாயினும், விதைத்தூள் உண்டாகும் செயலின் முக்கியக் கூறு கள் மாறாமலே இருந்து வந்திருக்கின்றன. நிறக் கோல்கள் பாதி எண்ணாகும் மையோசிஸ் என்னும் குறைவுப் பிரிவினாலேயே சாதாரணமாக மாறாது நிலைத்த பண்பான டெட்ரடு (படம் 6) என்னும் நான் கணுக் கூட்டங்களாக அமைந்துள்ள விதைத்தூள்கள் உண்டாகின்றன. அவை உண்மையில் பாலணுத் தலை

முறையின, ஏனெனில் அவை மையோசிஸ் நிகழ்ந்தபின் இருப்பவை. விதைத்தூள் உண்டாகும்போதே பால் வேற்றுமை உண்டாகுமாயின், அப்போது மைக்ரோஸ் போர்கள் என்னும் சிறு விதைத்தூள்களும், மெகஸ் போர்கள் என்னும் பெருவிதைத்தூள்களும் உண்டா கும். சிறு விதைத்தூள்களிலிருந்து ஆண் பாலணுத் தலைமுறைச் செடியும், பெருவிதைத்தூளிலிருந்து பெண் பாலணுத் தலைமுறைச் செடியும் உண்டாகும். பாசங்களிலும் ஈரற் செடிகளிலும் பாலணுத்தலை முறைதான் எப்போதும் ஓங்கியுள்ள (Dominant) தலைமுறையாகும். விதைத்தூள் தலைமுறை அதிலிருந்து எழுந்து, அதற்குள்ள ஓர் ஒட்டுண்ணியோ என்னும்படி அடங்கிவாழ்க்கை நடத்துகிறது. (படம்7) இந்த விதைத் தூள் தலைமுறைதான் பாசங்களின் கனி எனப் படும். பாசச் செடியின் ஓர் உறுப்புப் போலத் தோன்றும் இந்தவிதைத் தூள் தலைமுறைக் குள்ளே விதைத்தூள் உண்டாகும் திசு இருக் கும். அத்திசுவின் அணு வுக்குள் குறைவுப் பிரிவு முறையில் பிளவுபட்டு விதைத்தூள்களை உண் டாக்குகின்றன. பெரணி களுள்ளே ஓங்கு தலை முறை மாறிவிடுகின்றது. விதைத்தூள் தலைமுறை ஓங்கி நாம் எளிதில் காணும் பெரணியாக இருக்கிறது. அதிலிருந்து விதைத்தூள்கள் உண் டாகின்றன. விதைத் தூள்களிலிருந்து உண் படம் 7. ஸ்பாக்னம் ஸ்போரொபைட்டையும்: அதைச் டாகும் பாலணுத் தலை சூழ்ந்துள்ள காமிட்டோபைட் முறை டையும் நெடுக்கு வெட்டில் காட்டி தனித்த ஒரு இருக்கிறது. பொருளாக மிகச் சிறிய தோர் இலைவடிவில் இருக்கும். அதற்குப் புரோ தாலஸ் (Prothallus) அல்லது முன்தகட்டுடல் என்று பெயர். பூக்கும் தாவரங்கள் என்னப்படுபவையும், நாம் எங் கும் சாதாரணமாகக் காண்பவையுமான மரஞ்செடி களிலே பாலணுத் தலைமுறையானது எளிதாகத் தெரியக்கூடியதன்று. விதைத்தூள்கள் ஆண் என்றும் பெண் என்றும் இரண்டுவகையாக இருக்கின்றன, ஆண் விதைத்தூள்கள் மகரந்தத்தூள்கள். பெண் விதைத்தூள் முளைக்கருப் பை (Embryo sac) என்பது. மையோசிஸ் என்னும் குறைவுப்பிரிவுக்கும் சிங்கமி என்னும் கருவுறலுக்கும் இடையே விதைத்தூள் தன்னில்தானே உண்மையில் பாலணுத் தலைமுறை யாக இருக்கிறது. இதிலிருந்து நியாயமாகத் தோன் றும் முடிவு என்னவென்றால் கலவி யினப்பெருக்கம் என்று பொதுவாகச் சொல்லி வருகின்றதான, ஒன்றன் பின் ஒன்றாக நெருங்கி நடந்துவரும் செயல்களின் தொடர்ச்சியிலே கலவா இனப்பெருக்கமும் ஒருவாறு நடைபெறுகிறது என்பதாம். அது ஆணில் மகரந்தத் தூள்கள் உண்டாவதும், பெண்ணில் முளைக்கருப்பை உண்டாவதும் ஆகும். கலவி யினப்பெருக்கத்தின் தத்துவமாவது பாலணுத் தலை முறையிலிருந்து உண்டாகும் ஒற்றையெண் (ஹாப் ளாய்டு) நிறக்கோல்களுள்ள இரண்டு பாலணுக்கள்