பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

168

இனப்பெருக்கம்

மட்டும் இருப்பினும், பிற ஒற்றையணுப் பிராணிகளின் உயிர்வாழ்க்கையிலும் உட்கருக்கள் சிக்கலின்றி நேர் வழியாகப் பிணைந்துகொள்ளும் இணைவுச் செய்கை நிகழ்கின்றது ஒருதலை. எனவே இணைவுச் செய்கையின் தலைசிறந்த பண்பு இரண்டு ஒண்டிகளின் உட்கருக்கள் ஒன்றோடொன்று கலந்து, ஒருமைப்பாடு எய்துவதே யாம். பாரமீசியத்தில் ஆண் உறுப்பும் இல்லை; பெண் உறுப்பும் இல்லை. அதன் மெய் ஒரேயணுவால் அமை யப் பெற்றுள்ளது. எனினும் ஓரணுவிலிருந்து மற்ற அணுவுக்குள் புகும் உட்கருவின் அரியவினை ஆண்மைக் குரியது. அவ்வாறே இரு அணுக்களிலும் அசைவின்றி வாளாக்கிடக்கும் உட்கருப் பகுதியின் நடக்கை பெண் மைக்குரியது. எனவே இருபாலால் உறும் இனப்பெருக் கச் செய்கையின் மிகவும் எளிதான முதல் நிலை இந்த மிதியடிச் சிற்றுயிரினிடம் உள்ளது என்னலாம். மூன்று முதன்மையான உண்மைகள் ஒற்றையணுப் பிராணிகளின் இச்செயலில் தெளிவாக விளங்குகின்றன. 1. இப்பிராணிகளின் இனப்பெருக்கச் செயலுக்குப் பொதுவாகப் பால் இன்றியமையாததொன் றன்று. உடலையொட்டிய இருபாலீன் வேறுபாட்டுக் கூறுகள் இணைவுச் செயலுக்குத் தேவையில்லை. இரண்டறக் கலக்கும் முழு வணுக்கள் ஒரே உருவமும் சமமான பரி மாணமும் உடையவை. 2. பாலின்றியும் இணைவு இருந்தோ, இல்லா மலோ பிளவுக்குட்பட்டு இதன் தொடர்பின் பயனாக ஒற்றையணுப் பிராணிகளின் தலைமுறைகளைப் பெருக்கி வரும் இனப்பெருக்கமே பழமையானதும், துவக்கத்தை யடுத்ததும், எளிதானதுமான அடிகோலும் செயல். 3. ஒற்றையணுப் பிராணிகளுக்கு உடல் என்று ஒன்று இல்லையென்னலாம். ஒரே அணுவே உடலாக வும் இனத்தைப் பிறப்பிக்கும் முழு அணுவாகவும் இருக்கின்றது. தாயணுவின் உடல் பிளவுக்குட்பட்டு A 2 பெண் அணு, ஆண் அணு A பெண் அணு 1. சைட்டோபிளாசம். 2. உட்கரு 3. நியூக்ளியோலஸ். 4. நிறக்கோல். B ஆண அணு. இருமகவணுக்களாக மறைந்து போவது வியப்பைத் தருவதொன்றாகும். பலவணுப் பிராணிகளிடமும் இருபாலும் நிலவுகின்ற தாகலின், பாலணுக்கள் ஆண் அணுக்களாகவும் பெண் அணுக்களாகவும் பிரிநிலை அடைந்தவை. இம் மண் டலத்தில் நிலவும் இவ்விருவகையணுக்களுக்கும் மிகுந்த வேற்றுமையுண்டு. ஆண் அணுக்கள் அல்லது விந்

. தணுக்கள் எப்போதும் மிகச் சிறியவை ; இயங்குதல் மிகுந்தவை. பெண் அணுக்கள் அல்லது அண்டங்கள் பெரிய அளவு உடையவை; அசைவின்றி வாளாக் கிடப் பவை. விந்தணுக்கள் ஆணின் இனப்பெருக்க அங்கமாகிய விதையினுள் அடங்கி நிற்கும். அண்ட அணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க வுறுப்பினுள் இருக்கின்றன. பலவணுப் பிராணிகளின் அண்டவணுவின் குறுக் களவு ஓர் அங்குலத்தின் சிறிய பின்னமாகத்தான் அமை கின்றது. சில கடற்கெளுத்தி இனங்களின் முட்டை கள் சற்றேறக்குறைய 2/5 அங்குலமிருக்கும். கடுகு பரிமாணமும், பட்டாணி விதையளவும் உள்ள முட்டை கள் உண்டு. கடல் ஆமையினங்களின் முட்டைகள் ஏறத்தாழ 11 அங்குலம் குறுக்களவு உடையவை. பாலூட்டி விலங்குகள் பெரும்பாலும் மிகச் சிறிய அண்டவணுக்களைத்தான் விளைவிக்கின்றன. ஊர்வனவும் பறவைகளும் இடும் அண்டங்கள் மிகப் பெரிய ஒற்றையணுக்களாகும். அவை அவற்றுள் பொருந்தித் திரண்டு நிற்கும் மஞ்சள் கருவின் பேரளவி னால் பருமனையடைந்து, வெறுங்கண்ணால் பார்க்கத் தக்கனவாக இருக்கின்றன. மேலும் வெண்கருவென் னும் உணவுப் பொருள் மஞ்சட்கருவைச் சுற்றி அமைந் துள்ளது. எனவே இவற்றின் முட்டையானது கருவணு வும் உணவுப் பொருளும்கூடிச் சுண்ணாம்பு ஓட்டால் மூடப்பட்டிருக்கிறது. மனித இனத்தில் முட்டை சூல் பையில் இறங்கிவந்து படியும் சமயத்தில் 1/125 அங்குலம் குறுக்களவு உள்ளது. இஃது ஆண்மகனிடமிருந்து வரும் ஒரு விந் தணுவுடன் இரண்டறக் கலந்து, கருவணுவான பின் அதிலிருந்த மிகச் சிறிதளவான உயிர்ப்பொருள் இளங் கருவின் துவக்க வளர்ச்சிக்குமட்டும் தந்து உதவுகின் றது. பின்னர்த் தாயின் சூல் பையின் திசுவிலிருக்கும் இரத்தத்தைக் கொண்டு உணவு பெற்று, மேலும் மேலும் வளர்ச்சி எய்திக் குழந்தையாகப் பிறக்கின்றது. முதுகெலும்பு படைத்த பிராணிகளின் மண்டலத் தில் ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் பிறவற்றிற்கு முரிய அண்டவணுக்களைத் தவிர, ஏனைய வகுப்புக் களிலே கருவணுக்கள் பொதுவாக வெற்றுக் கண்ணுக் குத் தோற்றா, மைக்ராஸ்கோப்பினால்தான் பார்க்க முடியும். விந்தணுவின் வடிவம் சிறிய தலையும் நீண்ட வாலும் உள்ள மிக நுண்ணிய இழை போன்றது; அளவில் மிகச் சிறியது. கருவணுவின் முதிர்ச்சியும் கருவுறுதலும்: விந் தணு தன்னுடைய கூர்மையான தலையைக் கொண்டு, கோளமான அண்டவணுவைத் தாக்கித் தொளைத்து உள்ளே செல்லும். வால் வெளியே நின்றுவிடும். இவ் விரு அணுக்களின் உட்கருக்கள் இரண்டறக் கலக்கும் வினைக்குக் 'கருவுறுதல்' என்று பெயர். ஒற்றையணுப் பிராணிகளிடம் நடைபெறும் இணைதலுக்குப் வணுப் பிராணிகளின் முதிர்ச்சியின் துவக்கத்தில் நிகழும் கருவுறுதல் நேராகும். 1 பல இவ்விரு வினைகளும் தம் இயல்பில் ஒருமைப்பாட் டைத் தோற்றுவித்தாலும், பாலணுக்கள் தம் வடிவத் திலும் அளவிலும் வேற்றுமைகள் உடையன. ஒற்றை 5யணுப் பிராணிகளின் இணைதலில் கூடும் அணுக்கள் ஒரே வடிவமும் சம அளவு முள்ளவை, பலவணுப் பிராணிகள் கருவுறுதலில் இரண்டறக் கலக்கும் அணுக் r களின் வடிவமும் வேறு, அளவும் வேறு. ஒற்றை யணுப் பிராணிகளிலே இரு பாலணுக்களின் உயிர்ப் பொருள்களும் உட்கருக்களும் சேர்ந்து ஒரேயொரு அணுவாகின்றதென்றும், இந்த இணைதலால் விளைந்த } T E