பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

171

இனப்பெருக்கம்

பிறப்புறுப்புக்கள் : முதுகெலும்பிகளிலே எங்கோ சில இணைப்பாவிகளைத் தவிர்த்து, மற்றெல்லாவற்றிலும் ஆண் வேறு, பெண் வேறு. ஒவ்வொருபாலிலும் அதற் குரிய உறுப்பே சாதாரணமாக இருக்கும். மற்றப் பாலின் உறுப்பும் அதில் காணப்படுமானால் அது வள ராது, அல்லது தொடக்கத்திலேயே சீர்கேடு அல்லது இழிநிலை யடைந்தொழியும். பாலூட்டி யொழிந்தமற்ற எல்லா முதுகெலும்பிகளிலும் ஆணிலும் பெண்ணிலும் இவ்வுறுப்புக்கள் வயிற்றறையினுள்ளே முதுகுபக்க மாக இருக்கும். இவற்றிலிருந்து குழாய்கள் வழியாகப் பாலணுக்களும் அவற்றோடு கலந்துள்ள மற்றச்சுரப்புக் களும் ஒரே வாயில் வழியாக வெளியேவரும். பாலூட்டி களிலுள்ள அமைப்பு மனித உறுப்புக்களின் அமைப் பையே பெரிதும் ஒத்திருக்கும். அது இனப்பெருக்க வுறுப்பு மண்டலம் (த.க.) என்னும் கட்டுரையில் விவரித்திருக்கிறது. பிறப்புறுப்புக்களில் பாலணுக்களேயன்றி ஹார் மோன்கள் (த.க.) என்னும் சில பொருள்களும் உண் டாகின்றன.அவை இச்சுரப்பிகளிலிருந்து நேரே இரத் தத்திலே கலந்து செல்கின்றன. நாளங்கள் வழியாக வராமல் நேராக இரத்தத்திலேயே உள்ளே கலந்துவிடும் இப்பொருள்களை உட்சுரப்புக்கள் என்பதும் உண்டு. இவை ஆணில் ஆண் உயிர்களுக்கே சிறப்பான பண்பு களும் இயல்பூக்கங்களும் வளரவும் முதிரவும் தூண்டும் ஆற்றலுள்ளவை. அவ்வாறே பெண்ணுறுப்பிலிருந்து உண்டாகும் உட்சுரப்பானது பெண் தன்மைகள் வளரச் செய்கின்றது. பாலூட்டிகளிலே குழந்தைக்கு வேண் டிய பாலைச்சுரக்கும் பாற்சுரப்பிகள் இனப்பெருக்கச் செயலோடு நேரே சம்பந்தப்பட்டவையல்ல. ஆயினும், அவற்றின் வளர்ச்சி பெண் பிறப்புச்சுரப்பியைப் பொறுத்திருக்கிறது. இனப்பெருக்க வட்டம்: இனம் பெருகு பருவம் நெருங்கும்போது பிறப்புச் சுரப்பிகள் பெரு வளர்ச்சி யடைகின்றன. மீன்களில் சினையானது உடம்பே பருத் துத் தோன்றும் அளவு பெரிதாகிறது. சிறு குருவி யில் கடுகு போன்றிருப்பது சிறு சுண்டக்காயளவு ஆய்விடுகிறது. ஆணுக்கு இனம் பெருக்கும் பருவம் உண்டானால், அந்தப் பருவம் மதம் அல்லது கூட்டக் காலம் எனப்படும். எலி, அணில், மூஞ்சூறு,வௌ வால் முதலியவற்றுள் இக்காலத்தில் மட்டுமே ஆணின் விதைகள் வெளியே தோன்றும். மற்றக்காலத்தில் உள்ளே இழுத்துவைத்துக் கொள்ளப்படும். பெண் ணிலும் சினைப்படுவதற்கு உரிய காலம் உண்டு. இது பலவிதமாக வேறுபடும். இந்தக் கூட்டக் (Oestrum) காலத்தில்தான் விலங்குகள் கூடும். இக்காலத்தில் தான் உள்ளே அண்டவணு முதிர்ந்து, அதைச் சூழ்ந் துள்ள திசுவினின்றும் வெடித்துக்கொண்டு வெளி வரும். அப்போதுதான் அந்த அணு கருவுறுதலுக்கு ஏற்றதாக இருக்கும். மனிதனில் சாதாரணமாகக் கூட்டமில்லாத காலம் (Anoestrum) இல்லை. எஸ்கிமோ சாதியாரில் குளிர் காலத்தில் கூட்டம் இருப்பதில்லையாம். மாதவிடாய் வட்டம் சாதாரணமாக ஒரு சந்திரமாத காலமுள்ளது. விடாய் தோன்றிய 14ஆம் நாள் வாக்கில் அண்டவணு முதிர்ந்து வெளிவருவது வழக்கம். சில விலங்குகளில் (முயல்) கலவி நேர்ந்த பிறகு அண்டம் முதிர்ந்து வெளியாகின்றது. மனிதனிலும் அண்ட வெளிப்பாட்டுக்குக் (Ovulation) கலவியால் உண்டாகும் தூண்டல் சில சமயங்களில் வேண்டியிருக் கிறது. நாய், பன்றி, ஆடு, பசு, குதிரையாகிய வீட்டு விலங்குகளில் கூட்டச் சமயத்தில் அது நிகழ்கிறது.

பிறப்புச்சுரப்பிகளும் உட்சுரப்புக்களும்: விதையி லிருந்தும் அண்டகோசத்திலிருந்தும் உட்சுரப்புக்கள் உண்டாகின்றன என்று மேலே சொல்லப்பட்டது. இதற்குச் சான்று இச்சுரப்பிகளை எடுத்துவிடுவதால் (விதையடித்தல், அறுத்தெடுத்தல்) உண்டாகும் விளைவு கள், முதலில் இவ்வாறு எடுக்கப்பட்ட பிராணிகளில் வேறு பிராணிகளிலிருந்து எடுத்ததை வைத்து ஒட்டுதலி னால் உண்டாகும் விளைவுகள். இவ்வுறுப்புக்களிலிருந்து தயார் செய்த திசுச்சாரங்களை ஊசி குத்தலால் உண் டாகும் விளைவுகள் ஆகியவற்றால் காணலாம். பொது வாகவிதையடித்த பிராணிகளில் பால் துணைப்பண்புகள் (Secondary characters of sex) வளர்வது தடைப் படுகின்றது. துணைப்பண்புகள் என்பவை இனப்பெருக் கச் செயலில் நேரே தொழிற்படும் உறுப்புக்களல்ல. ஆயினும் ஆணிலோ பெண்ணிலோ சிறப்பாகத் தோன்றுபவை. பிறப்புச் சுரப்பியை ஒருயிரிலிருந்து எடுத்து விட்டால், அது முற்றிலும் மலடாகி விடுவதே யன்றிப் பாலை (ஆண் பெண் தன்மைகளை) வெளிக்காட் டும் துணைப்பண்புகள் அதில் எழுவதில்லை. பிறப் புறுப்புக்களுக்குச் சம்பந்தப்பட்ட பிராஸ்டேட்டுச் சுரப்பி போன்ற துணைப் பிறப்புறுப்புக்களும் (Acces sory reproductive organs) வளர்வதில்லை. ஆனால் இந்தச் சுரப்பிநீக்கம் இளமையிலேயே செய்யப்பட வேண்டும். உதாரணமாக மனிதனில் முகம் முதலிய டங்களில் வளரும் மீசை, தாடி முதலியவை வளர்வ தில்லை. குரல் வளை வளர்வதில்லை. அதனால் வயது வரும்போது குரலில் ஏற்படும் தடிப்பு, அழுத்தம் ஆகிய மாறுபாடு உண்டாவதில்லை. மானில் கொம்பு வளர் வது தடைப்படும். ஆணில் மட்டும் கொம்புள்ள ஆட்டுவகைகளில் கொம்பு வளர்வதில்லை. கோழியில் சேவலுக்குக் கொண்டை, அலைதாடி முதலியவை உண் டாவதில்லை. விதையடித்தல் பழங்காலந்தொட்டு நடந்து வருகிறது. இதனால் உணவுக்காகும் பிராணி யிலே உடம்பு கொழுக்கும்; இறைச்சியும் நன்றாகும். உழவு, வண்டியிழுத்தல் ஆகியவற்றைச் செய்பவை. ஆசை அவற்றை அலைக்கழிக்காமையால் உழைத்து வேலைசெய்யும். திரும்பப் பிறப்புச் சுரப்பியைக் கோழி யில் ஒட்டுவிப்பதால் துணைப்பண்புகள் தோன்றும். துணையுறுப்புக்களும் வளரும். அது கூவவும், சண்டை போடவும் தொடங்கும். அண்டாசயத்தை அறுத் தெடுத்துவிட்ட பெட்டைக் கோழியின் உடலில் சேவ லின் ஆண் சுரப்பியை ஓட்டினால், பெட்டையாக இருந் ததில் கொண்டை முதலியவை தோன்றும். பிறப்புச் சுரப்பித் துண்டு துண்டாக்கப்பட்டு, இந்தத் துண்டுகள் வயிற்றில் குடலுக்கும் வேறு உடலின் உட்சுவருக்கும் ஒட்டிக்கொண்டு வளர்ந்தபோதும் இந்நிகழ்ச்சிகள் நேர்ந்தன. உயர்தர விலங்குகளிலே சுரப்பிகள் ஒரே இனவுயிர்களின் உறுப்புக்களாக இருக்கவேண்டும். தவளைச் சாதிகளில் வேறு இனத்தினவாயினும் பொருந்திக் கொள்ளும். பாலூட்டிகளிலே ஆண் சுரப் பியை ஒட்டுதல் எங்கானாலும் உட்சுரப்பு விளைவு உண் டாகும். எனினும் விதைப்பையிலேயே ஓட்டினால்தான் விந்தணு வுண்டாகும். ஏனெனில் அங்கேதான் உடற் சூடு உடம்பின் மற்ற இடங்களில் இருப்பதைவிடச் சற்றுக் குறைந்திருக்கிறது. சற்றுக் குறைந்திருந்தால் தான் விந்தணு வளரும். அண்டகோசநீக்கம் (Ovariotomy) இளமையிற் செய்யப்படுமானால் கருப்பையும் மார்பும் வளர்வதில்லை. உடலானது விதையடித்த ஆணில் உண்டாவது போன்ற அலிநிலையை (Neutral) அடைகிறது. ருது வானபிறகு செய்தால் மாதவட்ட நிகழ்ச்சிகள் நின்று