பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஸ்மவேல்

177

இஸ்லாம்

கோழைப்படலத்தில் உண்டாயிருக்கும் புண்ணின் மேலோ விதை ஊறினதால் உண்டான கோழை படி கிறது. செரிமானச் சுரப்புக்களிலுள்ள என்சைம்கள் இந்தக் கோழைப் பொருளைச் செரிக்கச் செய்வதில்லை. ஆகவே கோழையானது புண்ணின்மேல் படிந்து அதை முடிக்கொள்வதால் வலி உண்டாகாமல் இருக்கிறது. இந்தச் செடி இந்தியாவின் வடமேற்குப் பகுதி முதல் பாரசீகம் முதலிய நாடுகள் வழியாக ஸ்பெயின் வரை யிலும் அகப்படுகிறது. பிளான்டாகோ மேஜர் என்னும் மற்றோர் இனம் சமதட்ப வெப்ப இமயம், உயர்ந்த ஆல்பைன் இமயம், அஸ்ஸாம், பர்மா, பலூச்சிஸ்தானம் கொங்கணம், மேற்குத் தொடர்ச்சி மலைகள், நீலகிரி பழநி மலைகள், இலங்கை, மலேயா முதலிய பல இடங்களில் விளைகிறது. இதன் விதையும் மருந்துக்கு உதவும். செடியை வாத நோய்க்கும் உபயோகிப்பர். பச்சையிலையைப் பூச்சி கடித்த இடத்தில் தேய்க்கலாம். காஞ்சொரி முதலிய வற்றால் உண்டான கடுப்பையும் போக்கும். காயத்தி லிருந்து இரத்தம் வடிவதை நிறுத்தும். இஸ்பகோல் செடி பிளான்டாஜினேசி என்னும் இரட்டைவிதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இஸ்மவேல் (இஸ்மாயீல் Ishmael) கிறிஸ்தவ வேதநூலில் கூறப்படும் ஆபிரகாமிற்கு ஆகார் என்ற மனைவியிடம் பிறந்தவர். இவர் மாற்றாந்தாய் மகனாகிய ஈசாக்கை இகழ்ந்ததால், பாலைவனத்துக்குத் தாயுடன் துரத்தப்பட்டார். இருவரும் நீர்வேட்கையால் வருந்திய போது, தாய் கடவுளை வேண்டினாள். கடவுள் ஒரு தேவ தூதனை அனுப்பிச் சுனையில் நீர் அருந்துமாறு செய்து காப்பாற்றினார். இஸ்மவேல் எகிப்தியப் பெண்ணை மணந்து 12 குமாரர்களைப் பெற்றார். இவர் கள் வமிசம் இஸ்மவேல் வமிசம் எனப்படும். முகம்மது நபி இவ்வமிசத்தைச் சேர்ந்தவரென்பர். இஸ்ரவேல் (இஸ்ராயீல்) என்னும் எபிரேயச் சொல் கடவுளுக்காகப் போர் புரிபவர் என்று பொருள் படும். இப்பெயரைக் கடவுள் யாக்கோபுக்கு அளித்தார். அதனால் அவருடைய மக்கள் இஸ்ரவேலர் எனப்படுவர். இவர் சந்ததியார் 12 குழுவினராக இருந்தார்கள். இவர் களுள் 10 குழுவினர் வட பாலஸ்தீனத்திலும், இரண்டு குழுவினர் தென் பாலஸ்தீனத்திலும் வாழ்ந்தனர். அத னால் வடபகுதி இஸ்ரவேல் என்றும், தென்பகுதி யுதேயா என்றும் பெயர்பெற்றன. இதன் வரலாறு கிறிஸ்தவ வேதநூல் பழைய ஏற்பாட்டில் காணப்படும். இப்போது இஸ்ரவேல் என்பது பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்ட யூதக் குடியரசின் பெயராக இருந்து வருகிறது. அராபியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற் றியபின் 11ஆம் நூற்றாண்டிலிருந்து யூதமக்கள் அந் நாட்டைவிட்டு மேற்கு நாடுகளில் சிதறுண்டனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தியோடோர் ஹெர் சல் (Theodor Hersl) என்பவர் யூத சமூகத்துக்குப் பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் ஏற்படுத்தவேண்டு மென்ற நோக்கத்தையுடைய ஐயன் (Zion) இயக்கத் தைத் தொடங்கினார். முதல் உலகப்போரின்போது வெளிநாட்டுக் காரியதரிசியாக இருந்த பால்பர் (Bal four) என்பவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய் கத்தை நிறுவப் பிரிட்டிஷ் அரசாங்கம் உதவிபுரியும் என்ற அறிக்கையை விடுத்தார். இது பால்பர் அறிக்கை எனப்படும். முதல் உலகப் போர் முடிந்தபின் 1923-ல் சர்வதேச சங்கம் இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாலஸ்தீனத்தைப் பிரிட்டனது மாண்டேட்டு நாடாக்கியது.இதன்பின் யூதர்கள் பெருவாரியாகப்


. பாலஸ்தீனத்தில் குடியேறி வந்தனர். 1929லிருந்து அராபியருக்கும் யூதருக்கும் பாலஸ்தீனத்தில் இடை யறாத போராட்டம் நிகழ்ந்தது. ஹிட்லரது யூத எதிர்ப் புக்கொள்கையின் விளைவாகப் பாலஸ்தீனத்தில் யூதரது குடியேற்றம் அதிகமாகியது. 1936-ல் அராபியர் கிளர்ச்சி செய்தனர். இரண்டாவது உலக யுத்த முடிவில் 1947-ல் ஐ. நா. ஸ்தாபனம் பாலஸ்தீனத்தை இஸ்ரவேல் இராச்சியம் அரபு இராச்சியம் என இரண் டாகப்பிரித்தது. இஸ்ரவேல் குடியரசு இராச்சியம் 1948 மே 16-ல் யூத தேசிய கவுன்சிலின் தீர்மானப்படி அமைந் தது. பிரிட்டிஷ் பாதுகாப்பு அன்றோடு முடிவடைந் தது.1950-ல் எருசலேம் இதன் தலைநகராக்கப்பட்டது. குடியரசின் பரப்பு 8,048 ச.மைல். மக்: சு. 15,35,000(1951). இதில் யூதர் 13 இலட்சத்துக்குமேல் உள்ளனர். ஜாபா-டெல் அவீவ், எருசலேம், ஹைபா முக்கிய பட்டணங்கள். அரசாங்க மொழி எபிரேயம் (Hebrew). அரபு மக்களுடன் அரசாங்கம் அரபு மொழியைப் பயன்படுத்துகிறது. யூதர் எங்கிருந்தாலும் வந்து குடியேறலாம் என்று சட்டம் இயற்றப்பட் டிருக்கிறது. சமய சமத்துவம் சட்ட மூலமாக ஏற் படுத்தப்பட்டுள்ளது. 1925-ல் எபிரேயப் பல்கலைக் கழகம் எருசலேத்தில் நிறுவப்பட்டது. கட்டாய இல வச ஆரம்பக் கல்வி அளிக்கப்படுகிறது. 18-29 வய துள்ள ஆண்களுக்கும், 18-26 வயதுள்ள கன்னி களுக்கும், குழைந்தையில்லாத பெண்களுக்கும் கட்டாய இராணுவ சேவையும் விவசாயப் பயிற்சியும் இரண்டு ஆண்டு தரப்படும். ஒலிவம், திராட்சை முக்கியப் பயிர் கள். கைத்தொழில்கள் பெருகிவருகின்றன. இரும்பும் நிலக்கரியும் கிடைப்பதில்லை. ஹைபாவில் மண்ணெண் ணெய் கிடைக்கிறது. டெல் அவீவ், ஹைபா துறை முகங்கள்.லிடா (Lydda) விமான நிலையம். இஸ்லாம் என்பது உலகத்தில் உள்ள பெரிய மதங்களுள் ஒன்று. இஸ்லாம், இப்புவியில் வாழும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்தும் இறைவனால் தன் தூதுவர்கள் வாயிலாக அவ்வப்போது அறிவிக்கப் பட்டே வந்திருக்கிறது. அப்படி இறைவன் இதுவரை யனுப்பிய ஓரிலட்சத்து இருபத்து நாலாயிரம் நபி மார்க்கு முகம்மது நபி இறுதி நபியாய் விளங்கி வரு கிறார். இஸ்லாம் சமயத்தை எல்லா நபிமார்களும் போதித்துச் சென்றிருந்தும், காலம் செல்லச்செல்ல அது உருக்குலைந்துகொண்டே போய்விட்டது. இறுதி யாக, சுமார் 1,400 ஆண்டுகட்குமுன் வந்த முகம்மது நபி (த.க.) அதை மீண்டும் நிலைநிறுத்திச் சென்றார். மதபோதகர்கள் தோன்றிப் போதித்துச் சென்ற மதங்கள் அப்போதகரின் பெயராலேயே அழைக்கப் படுகின்றன. அதுபோல். முகம்மது நபி போதித்துச் சென்ற மதத்தைச் சிலர் முகம்மதிய மதம் என்று தவரு கக் கூறுவர். ஆனால், முகம்மது நபி போதித்துச் சென்ற சமயத்துக்கு இஸ்லாம் என்றுதான் பெயர் என்ப குர்ஆன் வேதம் பற்பல இடங்களில் மிகத் திட்டமாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் என்னும் அரபு வார்த்தைக்குச் சாந்தி பெறுவதற்குரிய மார்க்கம் என்பது ஒரு பொருள். சாந்தி என்று பொருள்படும் ஸலாமத் என்னும் சொல்லின் சார்பாய் இஸ்லாம் என்னும் சொல் தோன்றியிருக் கிறது. அந்தச் சாந்தி என்னும் சமாதானத்தை இவ் வுலகிலும் மறுவுலகிலும் ஒருவன் பெற்றுக்கொள்ள விழைவானாயின், அவன் தன்னைப் படைத்த இறைவன் ஏவியுள்ளவற்றுக்கு முற்றுங் கட்டுப்பட்டும், விலக்கி யுள்ளவற்றை அடியுடன் தவிர்த்துக் கொண்டும்,மன்

23