பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்றி நிலை

32

இயற்றி நிலை

உண்டான இச்சைச் செயல்களாக இருந்து, பல முறை செய்யப்படுவதால் வழக்கச் செயல்களாக ஆகிவிடுகின்றன. அப்பொழுது அவை முயற்சி எதுவுமின்றியே செய்யப்பெறும். உதாரணமாக, சைக்கிள் விடக் கற்பவன் விழுந்து விடாதிருப்பதற்காகக் கவனம் செலுத்துவான். ஆனால், நன்கு பழகியபின் அவ்வாறு கவனிப்பதேயில்லை. அதைப் பற்றிய உணர்வுகூட இருப்பதில்லை.

இரண்டு விதமாக ஒரு வேலையை நடத்தலாம் என்றிருக்கும்பொழுது, எந்த விதமாக நடத்துவது என்று தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு தீர்மானித்து, ஒரு விதத்தைத் தேர்ந்து நடத்துவதே தெளிவான இச்சைச் செயலாகும். ஒருவன் முன்பு இரண்டு விதங்கள் தோன்றும்பொழுது, எதைச் செய்யலாம் என்று தயங்குகிறான். ஒன்று நல்லது போல் தோன்றுகிறது. அதைத் தேர்ந்துகொள்ள எண்ணும்பொழுது, மற்றது அவன் உள்ளத்தைக் கவர்கிறது. இறுதியில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்து அவ்வாறு நடக்கிறான். ஆயினும் எதை வேண்டாம் என்று தள்ளினானோ, அது முற்றிலும் நினைவிலிருந்து மறைந்து விடுவதில்லை. அது உள்ளத்தின் அடித்தட்டில் தங்குவதாகவும், தக்க வாய்ப்பு ஏற்படும்பொழுது அதே உருவத்திலோ அல்லது வேறு உருவத்திவோ அது எழுந்து நனவு நிலையை எட்டுவதாகவும் சில உளவியலார் கருதுகிறார்கள். ஒருவன் தான் மருத்துவனாவதா, பொறிப்புலவனாவதா என்ற கேள்வி எழும்பொழுது, பொறிப்புலவன் ஆவது என்று தீர்மானித்தாலும் மருத்துவனாகும் ஆசை மறைந்து போவதில்லை. அது நோயாளிகளைப் பேணும் ஆசையாக வெளிப்படக் கூடும்.

நோக்கம் நிறைவேறுவதற்கு ஏற்படும் இடையூறுகளின் அளவே இயற்றிநிலை ஆற்றலின் அளவாகும். இடையூறு மிகுந்தால் மிகுதியாக ஆள்வினை செய்வோம். இடையூறு நம்மை வாதுக்கு அழைக்கிறது. நாம் அதனிடம் தோல்வி பெற விரும்புவதில்லை.

மக்களைத் தம் மனத்திண்மையைப் (Will power) பயனுற உபயோகிக்குமாறு செய்ய விரும்புகிறவர்களில் முக்கியமானவர்கள் பெற்றோர், ஆசிரியர், அரசியலார் ஆவர். மனத்திண்மை பயனுறக் கையாள்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது தெளிவான குறிக்கோளேயாகும். அது உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகவுமிருக்கவேண்டும். மிக விரைவில் அடையக்கூடியதாகவுமிருக்க வேண்டும். அதனுடன் நோக்கம் சிறிது சிறிதாக நிறைவேறி வருவது கண்ணுக்குப் புலப்படவும் வேண்டும். ஒரே காரியத்தை இரண்டு மூன்று பேர் செய்யும்பொழுது போட்டி மனப்பான்மை உண்டாகி உற்சாகப்படுத்துவதுண்டு. சில சமயங்களில் பணலாபமும் பொறுப்புணர்வும்கூட ஊக்கமளிக்கும். எதுவாயினும் எடுத்த காரியத்தில் உண்மையான விருப்பம் உண்டாவதே அதைச் செய்து முடிப்பதற்கான ஆள்வினையைத் தூண்டுவதாகும்.

ஒருவன் தன்னுடைய மனத்திண்மை முழுவதையும் மற்றொருவனிடம் ஒப்படைத்து விடும் நிலையை மனோவசிய நிலை {Hypnotism) என்பர். அந்த நிலையிலுள்ளபொழுது வசியம் செய்பவனுடைய சொற்படியே நடப்பான். காரணம் கேட்கமாட்டான். உறக்கம் போன்ற நிலையிலிருந்த போதிலும் வசியம் செய்பவன் கூறுவதி லேயே கவனமாக இருப்பான். மற்ற விஷயங்கள் அவனுடை மனத்தை எட்டுவதில்லை. ஆயினும் வசியம் செய்பவன் அவனுடைய கொள்கைக்கு மாறான காரியத்தைச் செய்யுமாறு கூறுவானானால், உதாரணமாக, கொலை செய்யுமாறு தூண்டினால், உடனே வசியநிலை கலைந்துபோகும். அவனிடம் ஒப்படைத்த மனத்திண்மையைத் தான் திரும்பப் பெற்றுவிடுகிறான்.

சிலர் தமது மனத்திண்மையைப் பிறரிடம் ஒப்படைப்பதில்லை. ஆனால் அதை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் செயலில் உற்சாகம் உடையவர்களாயுமிருப்புதில்லை, உழைப்பு மேற்கொள்வதுமில்லை. அப்படியானால் சோம்பேறித்தனமா என்றால் அதுவுமில்லை. அவர்களில் ஒரு சிலர் எதைச் செய்யவும் தயங்கிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் வேலை செய்யாமலிருப்பதில்லை. அவர்கள் செய்யும் வேலை அவர்களுடைய குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாக மட்டும் இராது. சிலர்க்குக் குறிக்கோளில் ஆசையிருக்கும்; அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யமட்டும் அவர்கள் ஊக்கம் கொள்வதில்லை. இத்தகைய மனநிலைக்குக் காரணம் வேலை விவரங்களில் உள்ள வெறுப்பும், அரைகுறையாகச் செய்துவிடுவோமோ என்ற அச்சமுமேயாகும் என்று வுட்வொர்த் கூறுகிறார். இன்னவேலையை இன்ன முறையில் செய்யவேண்டும் என்று கூறி, வேலையைத் துவக்கும்படி செய்துவிட்டால் போதும்; வேலை செய்வதற்கு வேண்டிய மனத்திண்மை பெற்று விடுவார்கள்.

மனத்திண்மை, ஞாபகம், உள்ளக் கிளர்ச்சி (Emot tion) முதலிய மனத்தின் பல்வேறு அமிசங்களில் குழப்பங்கள் உண்டாகுமானால், அந்த நிலையை மனநோய் என்று கூறுவர். மனநோய் உண்டாகுமானால் அப்பொழுது மனத்திண்மை சிதைந்துவிடுகிறது. அச்சமயங்களில் முயற்சியானது சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் காணப்படும்; சிலரிடம் முயற்சியே இராது; அதாவது இடைவிடாது வேலை செய்துகொண்டிருப்பர். ஆனால் குறிக்கோளை இடைவிடாது மாற்றிக் கொள்வதால் எந்தக் குறிக்கோளையும் அடையார். சிலர் வேலை துவக்க வெகுகாலம் தயங்குவர்; வேலை துவக்கிய பின்னரும் மிக மெதுவாகவே செய்வர். சிலர் செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பர். சிலர் செய்யச் சொல்வதைச் செய்யாமலும், செய்யவேண்டாம் என்று சொல்வதை செய்துகொண்டுமிருப்பர்.

இத்தகைய மனத்திண்மைச் சிதைவின் மற்றொரு வகை திடீரென்று ஒரு காரியத்தைச் செய்வதும், செய்ய முடியாமலிருந்தால் அமைதி குலைவதும், செய்தபின் காரணம் கேட்டால் காரணம் கூற முடியாமலிருப்பதுமான 'கட்டாயச் செயல்கள்' (Compulsive acts) என்பனவாகும். இத்தகைய செயல்கள் மனநோய் இல்லாதவர்களிடமும் காணப்படுமாயினும், மனநோய் உள்ளவர்களிடமே அதிகக் கொடிய உருவத்தில் காணப்படும். ஒரு குறிப்பிட்ட முறையில் உடம்பை வைத்துக்கொண்டால் சிலர்க்கு உறக்கம் வரும். அதற்குக் காரணம் அவர் அறியார். எதுவோ தம்முள்ளிருந்து கட்டாயப்படுத்துவதாக மட்டும் கூறுவர். இதுபோன்றவை சாதாரண மக்களிடம் காணப்படும் கட்டாயச் செயல்கள்.

மனநோய் உள்ளவர்களிடம் காணப்படுபவை பலதிறப்பட்டவை. சிலர் எப்பொழுதும் படிகளை எண்ணிக்கொண்டே படிக்கட்டில் ஏறுவர், சிலர் சாலைகளில் விளக்குத் தூண்களை எண்ணிக்கொண்டே நடப்பர். சிலர் தவறான செய்கை என்று அறிந்துகொண்டே ஒன்றைச் செய்வர். உதாரணமாக, நகைக் கடையில் புகுந்ததும் தமக்குத் தேவையில்லாதிருந்தாலும்,தாம் விலைகொடுத்து வாங்கும் நிலைமையிலிருந்தாலும், அங்-