பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டை விதையிலைத் தாவரம்

41

இரட்டை விதையிலைத் தாவரம்

இளந்தண்டிலே நடுவிலிருக்கும் உட்சோற்றைச் சுற்றி வட்டமாகத் தனித்தனியே அமைந்திருக்கும். பிறகு

இரட்டை விதையிலைத் தாவரத் தண்டு ஆமணக்கு இளந்தண்டின் குறுக்கு வெட்டு. வெளியிலிருந்து வரிசையாக:

1. புறத்தோல் அணுக்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன.
2. புறணி அணுக்கள் பல அடுக்குக்களாக அமைந்துள்ளன. உள் வரிசையில் தடித்த சுவர்கள் உள்ள அணுவலயம் நாரணுக்களாலானது.
3. சல்லடைக் குழாய்த்திசு பல அடுக்குக்களாக அமைந்தது.
4. வளர்படை சல்லடைக் குழாய்த் திசுவின் உட்புறத்தில் இரண்டு மூன்று வரிசைகளாகக் காண்பது.
5. உட்குழாய்த் திசு முடிச்சுக்கள். சோற்றணுக் கதிர்கள் இடையிடையே அவற்றைப் பிரித்துச் செல்கின்றன. முடிச்சின் உட்கோடியில் இருப்பவை முதன்முதல் உண்டான புரோட்டோசைலெம் குழாய்கள். மற்றப் பெரிய குழாய்கள் பிறகு உண்டான மெட்டாசைலெம் குழாய்கள்.

6. உட்சோறு.

இவை ஒன்றுசேர்ந்து ஒரு வளையமாக ஆகிவிடும். சூட்புறத்தில் நீரைக்கொண்டுபோகும் சைலம் என்னும் உட்குழாய்த் திசுவும், வெளிப்புறத்தில் உணவைக் கொண்டுபோகும் புளோயம் என்னும் சல்லடைக் குழாய்த் திசுவும், இரண்டுக்கும் இடையே காம்பியம் என்னும் வளர்படைத் திசுவும் இருக்கும். இவ்வகுப்பைச்சேர்ந்த பலபருவத் தாவரங்களிலே, தண்டானது ஆண்டுதோறும் ஒழுங்காகப் பருத்துக்கொண்டே

இரட்டை விதையிலைத் தாவரத்தின் தண்டு குறுக்கு வெட்டு, மூன்று ஆண்டு வளர்ச்சியை மூன்று உட்குழாய்த் திசு வளையங்கள் காட்டுகின்றன.

போகிறது. முதல் ஆண்டில் உண்டான உட்குழாய்த் திசு வளையத்திற்குப் புறத்தில் மற்றொரு வளையம் உண்டாகும். இவ்வாறு ஆண்டுக்கொரு வளையமாக வளர்ந்து கொண்டே போகும். தண்டின் விட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். ஒற்றை விதையிலைத் தாவரங்களாகிய தென்னை, பனை, மூங்கில் முதலியவற்றின் தண்டுகளில் குழாய்த் திசு முடிச்சுக்கள் வட்டமாக அமையாமல் உட்சோற்றில் சிதறியிருப்பதுபோலக் காணும். தண்டின் விட்டம் பெரிதாகாமல் சற்றேறக்குறைய

ஒற்றை விதையிலைத் தாவரத்தின் தண்டு

குழாய்த்திசு முடிச்சுக்கள் உட்சோற்றில் சிதறி அமைந்துள்ளன.

நெடுக ஒரே அளவாக இருக்கும். இரட்டை விதையிலைத் தாவரங்களில் தண்டு பருத்துக்கொண்டு போவதுபோல வேரும் பருத்துக்கொண்டு போகும். இப்படித் தண்டும் வேரும் பருப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு பருவத்திலும் புதிய கிளைகளும் இலைகளும் உண்டாகிக்கொண்டே போகும். அதனால் மொத்த இலைப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது. இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பிலும் இரட்டை விதையிலைத் தாவரங்களில் ஒரு சிறப்பைக் காணலாம். ஒற்றைவிதையிலைத் தாவரங்களின் இலைகளில் புல் அல்லது வாழையிற்போல முக் கிய நரம்புகள் ஒருபோகாக அமைந்திருக்கும். இரட்டை

இரட்டை விதையிலைத் தாவரத்தின் இலை
வலைபோல அமைந்த நரம்புகள்

ஒற்றை விதையிலைத் தாவரத்தின் இலை
ஒரு போகாக அமைந்த நரம்புகள்

விதையிலைத் தாவர இலைகளில் நரம்புகள் வலைபோல அமைந்திருக்கும். இந்த வலையமைப்பை அரசிலை முதலியவை நீரில் விழுந்து மட்கிப் போயிருப்பவற்றில் மிக நன்றாகக் காணலாம். இரட்டை விதையிலைத் தாவரங்களின் பூவின் அமைப்பிலும் வேறுபாடு காணலாம். பூவின் உறுப்புக்கள் பொதுவாக வட்டத்திற்கு ஐந்தாக அமைந்திருக்கின்றன; அல்லது 10, 15 என்று ஐந்தின் மடங்குகளாக இருக்கின்றன. சாதாரணமாக 5 புறவிதழ்கள், 5 அகவிதழ்கள், 5 அல்லது இரண்டு வட்டங்களாக அமைந்த 10 கேசரங்கள், 5 அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுள்ள சூலிலைகள் இருக்கும். வட்டத்திற்கு நான்கு உறுப்புக்களாக அமைந்திருப்ப-

6