பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瓣 கலைச் செல்வி

டாட்டியின் பெயரைப் பணயமாக வைக்கிறவர்கள் என் தல்லவா அவர் சொல்லுகிருர் அதாவது, பெண்டாட்டி யின் பெயருக்கு மாசு தேடும் அயோக்கியர்கள் என்று தானே அர்த்தம்? ஆகவே, பெண்டாட்டியோடு வாழத் தகாதவன் என்ற குற்றமும் முன்னே சொன்னதனே

சேரவேண்டுமல்லவா? - - -

செட்டியார் சொல்வதில் தவறு உண்டா? இல்லவே இல்லை. செட்டியார் ஒருவர் மட்டுமா அவனைக் குறை கூறுகிரு? எங்கே போனலும் யாரைப் பார்த்தாலும், 'நீ குடிகாரன்; சொன்ன சொல்லேக் காப்பாற்ற மர்ட்டாய். உன்னேடு பேசுவது பாவம்' என்று சொல்லத் தயாராக இருக்கிரு.ர்கள். வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும், அவர் களுடைய உள்ளம் சொல்லுகிறது; முகம் சொல்லுகிறது.

உலகம் முழுவதும் அவனைக் குடிகான், ஆதலால் கம்பத் தகாதவன் என்று குற்றம் சாட்டத் தயாராய் இருக் கிறது போலும், அவன் நெற்றியிலே குடிகாரன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா, என்ன? உடம்பு வியர்த்தது; நெற்றியைத் துடைத்துக்கொண்டான். அப்படி ஏதா வது ஒட்டியிருந்தால் அதைத் துடைப்பவனைப்போல

எசமான், சாமி சத்தியமாய்ச் சொல்கிறேன். நான் இதுவரையில் குடித்தது என்னவோ மெய்தான். இனி மேல் குடிக்கமாட்டேன். இரண்டாங் தடவையாகச் சத்தி աւե செய்கிறேன்” என்ருன் பாவாடை,

அவர் லேசில் பணம் கொடுப்பாரா? எதிலும் "கமி. டின் கேட்கும் தொழிலல்லவா அவருக்கு நயமாகப்