பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் | 133 | இப்போதும் அதே புரளியைத்தான் 'நவசக்தி' ஏடு கிளப்புகிறது. ஜெயராஜ் பற்றிய புரளி தென் சென்னைத் தேர்த லுக்கு- இப்போது கிளப்பியுள்ள புரளி நாகர்கோவில் தேர்தலுக்கு. நண்பா! தென் சென்னைத் தேர்தல் முடிவு என்ன வாயிற்று- வெண்மணிக் கிராமச் சம்பவத்திற்காக அவர்கள் இரக்கப்படவில்லை. கொடுமையிலும் அரசியல் லாபம் தேடப் பார்க்கிறார்கள். கொடுமைக்கு ஆளான வெண்மணிக் கிராம மக்க ளுக்கு நமது கண்ணீரைக் காணிக்கையாக்கும் போது- தமிழக காங்கிரசாருக்கு நமது அனுதாபத்தையும் உரித் தாக்குவோம். அன்புள்ள, மறவன் 28.12.68