பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 / கலைஞர் கடிதம் இரட்டைக் குழலார் ஐயாயிரம் அளித்துள்ளாராமே! எப்படியோ ஒரு லட்சத்துக்கு மேல் சென்னை மாநக ராட்சித் தேர்தலுக்காக நிதி திரட்டி வைத்துக் கொண்டு; "தி.மு.கழகம், பணத்தை வைத்து வெற்றி பெற முடியுமா; என்று திட்டமிடுகிறது" என்று தாங்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளது; காங்கிரசின் கடந்த கால வரலாறு தெரிந்தவர்களை விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் பேச்சாகும். காங்கிரஸ், தேர்தலுக்காக எத்தனை கம்பெனிகளிடம் எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளது என்ற கணக்கு முன்பு பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதே! அதனை மறந்து விட்டீர்களா? அய்யா, தமிழ் நாடு காங்கிரசு தலைவர் அவர்களே! முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம் அதிலே சிக்கிக்கொண்டு தவித்த தவிப்பு- இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை. இந்த அழகில், 'ஊழலை எதிர்ப்பவர்கள் நாம் ஒருவர் தான்; மற்றவர்கள் எல்லோரும் ஊழலுடன் கூட்டு!" என்று தாங்கள் பேசியிருக்கிறீர்கள். இந்த ஒன்றரை ஆண்டு தி. மு. க. ஆட்சியில் காங் கிரசார் நடத்திய கூட்டுறவு ஊழல்கள் எத்தனை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன; எத்தனை வழக்கில் இருக்கின் றன என்ற பட்டியலைத் தாங்கள் ரகசியமாகக் கூடக் கேட் டறிந்தது கிடையாதா? "முதலில் உன் கண்ணில் கிடக்கும் தூணை எடு! பிறகு எதிரியின் கண்ணில் இருக்கும் தூசியை எடுக்கலாம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/24&oldid=1691839" இலிருந்து மீள்விக்கப்பட்டது