உன்னையும் உன் உழைப்பையும் நம்பித்தான்! உடன்பிறப்பே, ':The D. M. K. has already collected and deposited Rs. 59 Lakhs in the Bank as election fund" என்பதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில் ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. அதாவது; தி. மு. கழகம் ஏற்கனவே ஐம்பத்தி ஒன்பது லட்ச ரூபாய் சேர்த்து தேர்தல் நிதியாக வங்கியில் போட்டு வைத்துள்ளது' என் று அந்த ஏடு எழுதியுள்ளது. இந்தத் தவறான தகவலை எடுத்து வைத்துக்கொண்டு சில மாலை ஏடுகள் பெட்டிச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதுபற்றிய சில விளக்கங்களைப் பொதுவாக உனக்கு அளித்திட நான் கடமைப்பட்டிருக்கிறேன். தாக தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் நிதி திரட்டுவதாக இருந்தாலும், வழக்குநிதி திரட்டுவ இருந்தாலும், பாதிக்கப்பட்ட கழகத் தோழர் களின் குடும்ப நிதி திரட்டுவதாக இருந்தாலும் எந்த நிதியாயினும் அதன் விபரங்களைப் பத்திரிகைகளில் வெளி யிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. பத்துகாசு, ஒரு ரூபாய் என்ற அளவிலும் சரி; சிறப்புக் கூட்டங்களில் நுழைவுக் கட்டண வாயிலாக வழங்கப்படும் பெருந்தொகைகளாயினும் சரி; அப்படி
பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை