பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்க்கட்சிகளின் நிலை-- ஒரு எடுத்துக்காட்டு! உடன்பிறப்பே, ஃ நட்ட நடுநிசி! ஃ பாழடைந்த பங்களா! ஃ 00 சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்தார் கருணாநிதி. காரை மாற்றிக் கொண்டு வந்தார் பி. ராமச்சந்திரன். ஃ இரண்டு மணி நேரம் ரகசிய சந்திப்பு. ஃ காமராஜர் கண்ணீர் வடிக்கிறார். - -இப்படித் தலைப்புச் செய்தீகளுடன் மாலை ஏடுகள், தங்கள் விற்பனையை ஒருநாள் பெருக்கிக் கொண்டிருக் கின்றன. அதுவரையில் எனக்கு மகிழ்ச்சிதான். சஞ்சீவ ரெட்டி அவர்களையோ, பி. ராமச்சந்திரன் அவர்களையோ நானும் நண்பர் ராஜாராமும் சந்திப்பது என்பது காம கண்ணீர்! ராஜர் வடிக்கத்தக்க காரியம் என்று கூறுகிறார்களே; அது தான் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நடைபெறுவதைக் கேட்டு இவர்கள் கண்ணீர் வடித்து அழுது புலம்பு கிறார்கள் போலும்! ராஜாஜி நினைவாலயத்தின் மண்டபத்திற்கு மேலே அமைந்துள்ள சிறிய கோபுரத்தை "இராமர் கிரீடம்”, போல உருவாக்கியது போலவே காமராஜர் நினை விட த் -