பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கலைஞர் இரண்டும் வெவ்வேறு பொருள் பற்றிய கூட்டங் கள் என்று எச். எம். படேல் கூறியதைச் சில ஏடுகள் திசை திருப்பிவிட முயன்றிருக்கின்றன. களுக்கும் 16-12-76 அன்று வெளிடப் பட்டு, பிரதமர் அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கருத்துரையில், "எதிர்க்கட்சிகள் ஜனநாயக செயல்முறைகளில் ஈடுபாடு உள்ளவை. தேசீயப் பிரச்சினைகளைப்பற்றி அரசாங்கத் துடன் பேசவும், குறிப்பாக நாட்டில் அரசியல் வாழ்வை சகஜப்படுத்துவது மிக அவசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்ற இந்தக் கட்டத்தில் அரசுடன் பேச்சு நடத்த எதிர்க் கட்சிகள் தயாராக இருக்கின்றன” என்று தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடன்பிறப்பே, சில ஏடுகள் நம் முயற்சிக்கு களங்கம் கற்பிக்க முயலுகின்றன. நாம் நமது வழி - நமது அண்ணன் வகுத்தவழி அமைதிவழி - பொறுமை வழி கொண்டேயிருப்போம். - அந்த வழியில் நடந்து அன்புள்ள, மு.க. 19-12-76