பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கலைஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் முற்பகுதியையும் தி.மு.க. வரலாறு" எனும் நூலில் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை அப்படியே இங்கு உன் முன்னால் வைக்கிறேன். பொருளாளர் கருணாநிதி உரை 6 "திறப்பாளன் - என்ற முறையில் முதல் நாள் மாநாட்டில் உங்களிடையே உரையாற்றிய நான் கடைசி நாளாகிய இன்று உங்களிடையே மீண்டும் - - கையில் ஒரு மகிழ்ச்சியுடன் தோன்றியுள்ளேன் பையுடன்- மாநாட்டுப் பொருளாளன் என்ற முறையில்! பதினோரு லட்சம் ரூபாய்களை நான் அறிஞர் அண்ணா அவர்களிடம் ஒப்படைக்கிறேன். அத்துடன், அதைச் சேர்க்கக் காரணமாக இருந்த பல இலட்சம் இதயங் களையும் அண்ணா அவர்களிடம் ஒப்படைக்கிறேன். தேர்தலை நடத்துவதற்கு நியாயமான செலவினங் களுக்காக ஒரு பத்து இலட்சம் ரூபாய் தேர்தல் நிதி சேர்க்க வேண்டுமென்று முதலில் ஆசைப்பட்டு - மிகுந்த சிரமத்துடன் அறிஞர் அண்ணா அவர்களிடம் அனுமதி மாவட்ட கழக நிர்வாகி கிளைக் கழக நண்பர் கள்-சார்பு மன்றத்தார்கள் ஆகிய, அத்தனைப் பேர்களின் ஒத்துழைப்பால் நான் இதில் ஈடுபட்டு, வெற்றியும் காண முடிந்தது. பெற்று கள் - - - கழகத் தோழர்கள் வட்டக் கழகத் தோழர்கள் - - மாற்றார்கள் மலைக்கத்தக்க வகையிலும், நாமெல்லாம் பூரிக்கத் தக்க அளவிலும், கழகத்தின், வெற்றிக்கு இது வழி செய்கிறது என்று தெரிவித்துக் கொண்டு - அறிஞர் அண்ணா அவர்களின் ஆணைக்குத் தலை வணங்கத் தயாராக இருக்கும் நேரத்தில் -நாளை நடக்க இருக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் யார் யார் என்ன என்ன வகையில்