பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 53 "நாம் இருவர் நாம் பெறுவதும் இருவர்' இது தனித்தனி குடும்பங்களுக்கான அறிவுரை மட்டு மல்ல; நாளைய நாட்டின் ஒளிமிகுந்த வருங்காலத்திற்கு வழி காட்டும் தத்துவம் மட்டுமல்ல; நாடு வாழ்ந்திட நலிவு தீர்ந்திட அனைவரும் கடைப்பிடிக்கவேண் திட்டமாகும். நாடு டிய இந்தத் திட்டத்தின் வெற்றியே நாட்டின் வெற்றி யாகும். ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையின் வெற்றியுமாகும். வெற்றிமேல் வெற்றி குவித்திட இந்த வெற்றியே அடிப்படையு மாகும். அதனைத் தெளிந்து செயலாற்ற அனைவரையும் வேண்டுகிறேன். அன்புள்ள, மு.க. 30-12-76