பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! உடன்பிறப்பே, திராவிடர் இயக்க மணி விழாவினை பல நகரங்க ளிலும், பட்டிதொட்டிகளிலும்கூட நாம் நடாத்தி இயக்கத்தின் அறுபதாண்டுகால வரலாற்றினை மக்க ளுக்கு உணர்த்திடும் கடமையை நிறைவேற்றி வருக றோம். இந்த இயக்கம் தோன்றுவதற்கே காரணமாக இருந்த பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டு, இந்த இயக் கத்தின் இலட்சியத்தையே - முதுகெலும்பை முறித்துப் போடும் வேலையில் நடிகர் கட்சியினர் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். அண்மையில் நீதிக்கட்சியின் தலைவர் களில் ருவரான டாக்டர் ஏ. இராமசாமி அவர்களின் இரங்கற் கூட்டமொன்றில் பேசிய நண்புர் எம். ஜி. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தன்னையும் தன் கட்சியை யும் “நீதிக் கட்சியின் வாரிசு' என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த ஏடுகளின் பிரதிகள் எதுவும் காணாமற் போய்விடவில்லை. அதற்கிடையே மதுரையில் அவரது கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கூடி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். "மாணவர்களுக்கு அரசினரால் வழங்கப் படும் கல்வி உதவித் தொகை சாதி அடிப்படை இல்லாது, கல்வித் தகுதி, பொருளாதா ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க, யில் ரம் ஒரு