பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 65 மன வான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயல்பைத் தி. மு. கழகம், என்றைக்கும் பெற்றிருந்த தில்லை. இன்றைக்கும் அப்படித்தான்! இராஜேஸ்வரராவ் அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க மக்கள் தாகை கட்டுப்பாடு அவசியம் என்பதைத் தனது கம்யூனிஸ்டுக் கட்சி ஒத்துக் காள்ள முடியாது என்று கூறுவது எந்த வகையிலும் பாருத்தமுடையதாகத் தோன்றவில்லை. திட்டங்களின் மூலம்தான் வேலை வாய்ப்புக்களை அளிக்க முடியும். திட்டங்கள்; நமது நாட்டின் பொருளா தார வாய்ப்புக்கு ஏற்றவகையில்தான் தீட்ட முடியும். வேலை வாய்ப்புக்களை வழங்குகிற திட்டங்களைத் தீட்டும் போது, இன்னொரு புறத்தில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போனால்-உருவாக்கப்பட்ட திட்டங்களின் பயனையும் மக்கள் அளவாகப் பகிர்ந்து கொள்ள முடியா மல் அதே நேரத்தில் வேலை வாய்ப்பு கேட்கிற பெரிய தோர் மக்கள் கூட்டம் அணிவகுத்து நிற்கிற நிலையும் ஏற்படும். இந்தக் கேட்டினைக் களையத்தான் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை விரிவாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டுமென்று கூறப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தோழர் · இராஜேஸ்வர · ராவ் ஒரு புதுமையான வழியையும் கூறியிருக்கிறார். 'நிலமற்ற விவசாயத் தொழிலாளி ஒருவனுக்கு மூன்று ஏக்கர் நிலம் கொடுத்து, அதில் பபிரிட உதவியும் அளித் தால் அவனுடைய வாழ்வு உயரும். அவன் சிந்திக்கத் தொடங்குவான். அதிகக் குழந்தைப் பெற்றால் அனைவ ருக்கும் கல்வி அளிக்க முடியாது; அவர்களை செழிப்பாக வளர்க்க முடியாது என்று கருதி அவனாகவே குடும்பத்தை அளவோடு வைத்துக் கொள்வான்” என்பதுதான் அவரது யோசனையாகும் 5-10-5 எ