பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 77 உடன்பிறப்பே, கோவை மாவட்டத்தில் இரண்டே இரண்டு வட்டாரங்கள் தான் தான் - ஐந்தாறு ஒன்றியங்கள் என்னுடைய ஒரு நாள் நிகழ்ச்சியில் நான் செல்ல முடிந்தவை என்றாலும் என் மனத்திற்கு மிக்க மகிழ்வூட்டும் வகையிலே அமைந்தன! நான் ஆங்காங்கு எடுத்துச் சொன்னவாறு அமைதியை அணிகலனாகக் கொண்டு, நமது உடன்பிறப்புக்கள் ஆக்கப் பணிகளை ஆற்றிடுமாறு மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன். பெங்களூர் நிகழ்ச்சி முடிந்து, சென்னை திரும்பியதும் கடிதம் எழுதுகிறேன். உனக்கு கடிதம் எழுதிட வேண்டும் என்பதற்காகவே உறுதி செய்யப்பட்ட ஓய்வு நாட்களைக் ஒத்திவைத்துவிட்டு உடனே சென்னை திரும்பிட கூட இருக்கிறேன். அன்புள்ள, மு க. 11-6-76 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/87&oldid=1695312" இலிருந்து மீள்விக்கப்பட்டது