பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவரைத் தந்த தாய்! உடன்பிறப்பே, நமக்கோர் அண்ணனை, நாட்டுக்கோர் தலைவனைப் பெற்றெடுத்துத் தந்த பெருமாட்டியார் மறைந்துவிட் டார். எத்திக்கும் புகழும் ஏந்தலை ஈன்றருளிய மணி வயிறு படைத்த அன்னையைப் பத்து நாட்களுக்கு முன்புதான் நானும், நாவலரும், பேராசிரியரும், காஞ்சி சென்றபோது சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பி னோம். இரண்டொரு நாட்களுக்கு முன்புகூடத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது; அம்மா நலமாக இருப்பதாகத்தான் இளங்கோவின் துணைவி விஜயா சொன்னது! அதற்குள் இப்படியொரு செய்தி வருமென யாரும் எதிர்பார்த்திடவே இல்லை. முதிர்ந்தவர்கள்தான் எனி னும் அண்ணனை இழந்து தவிக்கும் நமக்கு அந்த அன்னை யின் முகம் காண்பது ஓரளவு ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்ததே; அதையுமல்லவா இப்போது இழந்து தவிக்கிறோம். என்றைக்குக் காஞ்சி இல்லத்துக்குச் சென் றாலும் கூடத்து மூலையில் தூண்களுக்கிடையில் நிரந்த ரப் படுக்கையொன்றை அமைத்துக்கொண்டு, தன்னைக் காண வருகின்ற அன்புப் பிள்ளைகளை பாச உணர் வோடு நலம் விசாரிக்கும் அந்தக் காட்சி நெஞ்சைவிட்டு அகலாத ஒன்றாகும். க-8-12