பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் நானிருக்குமிடத்திற்கு நாலைந்து வீடு தள்ளி ஒரு பஜனை மடம். அந்த மடத்தில் அடிக்கடி புராணப் பிரசங்கங்கள் நடை பெறும். ஒலிபெருக்கியின் மூலமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். பாகவதர்கள் பல விஷயங்களைப் பூசி மெழுகிப் பேசியிருக்கிறார்கள் என்பது அந்தப் பழைய புராணத்தைப் பார்த்தபிறகுதான் தெரிந்தது. கணவனில்லாத சமயம் வீடுபுகுந்து தன்னைக் கற்பழித்தவன் இந்திரன் என்று தெரிந்த பிறகும் ஆகா! இது வல்லவா இன்பம்! இதுநாள் வரையில் ஏங்கிக் கிடந்த சுவைமிகு விருந்தை இன்றல்லவா கண்டேன் என்ற மனநிறை வுடன் அவனைத் தழுவிக்கிடந்தாள் அகலிகை என்பதை நான் படித்தல்லவா தெரிந்துகொண்டேன். தாருகாவனத்துத் பட்டோர் ! 66 தபோதனர்கள் ஆயிரத்துக்கு மேற் அவர் தம் பத்தினிகளோ பத்தரை மாற்றுத் தங்கங்கள் மேனியின் பளபளப்பில்! பறிக்கப்படாத பாரிஜாத மலர்கள்! தழுவத்துடிக்கும் பருவக்கொடிகள் ! அவர் தம் இளமையின் பூரிப்பு இறைவனையே தூண்டில் போட்டு இழுத்தது. ஒன்றா இரண்டா? ஓராயிரம் பூஜை மலர்களைக் கசக்கி எறிந்தார்! வரம் கோரும் முனிவர்களின் பத்தினிகள் ! வரம் தரவேண்டிய பரமன்! கரம் சிவக்குமட்டும் கட்டித் தழுவினார்! கண் சிவக்குமட்டும் காமச்சேட்டை புரிந்தார்! இந்தக் கர்ணகடூரமான ரமான கதையைப் பஜனை மடத்துப் பாகவதர் எவ்வளவு நாசூக்காகச் சொன்னார் தெரியுமா? தாருகாவனத்து ரிஷிபத்தினிகளுக்குப் பரமசிவன் அருள் பாலித்து ஆட்கொண்டார் என்று அவர் கூறியதைக் கேட்டு, ஆகா! ஆகா !! என ரசனையை வெளியிட்டுவிட்டுப் பிரசாதங்களை அருந்தி, இலைகளை என் வயிற்றுக்குள்ளே வீசி எறிந்துவிட்டுப் போயினர் பஜனை கோஷ்டியினர். அப்படி வீசி எறிந்த பக்தர் களில் ஒருவர், பிரசாதம் சாப்பிட இலை கிடைக்காத காரணத்தால் ஒரு புத்தகத்தின் தாள் ஒன்றை உபயோகித்தார் போலும். கசங்கிப்போய்ச் சோற்றுக்கறை படிந்த அந்தத்தாளை உற்றுப் பார்த்தேன். எனக்கே வெட்கமாக இருந்தது. ஏதோ ஒரு உணர்ச்சி என்னை வளைத்துக்கொண்டது. குப்பைத்தொட்டி என்றால் உணர்ச்சிகள் இருக்காதா; என்ன? அப்படியென்ன அந்தத்தாளில் இருந்தது என்று அறிய உங்களுக்கும் ஆவல் இருக்கத்தான் செய்யும். அதையும் சொல்லி விடுகிறேனே! குத்து விளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து நேரம்