பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 86 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் " கூடாதா? அப்படி ஒரு அதிர்ஷ்டம் வந்தால் அவளோடு நான் எவ்வளவு இன்பமாக இருப்பேன் ! புதிய புதிய காதல் மொழிகள் எல்லாம் பேசுவேன். • GOOT LD GOOD"! என்று அழைப்பதற்குப் பதில் அவளைக் குப்பைமணி என்று அழைத்து அணைத்துக் கொள்வேன். அவளோடு ஊர்க்கதையெல்லாம் பேசுவேன். பிறகு எங்களுக்குப் பொழுது போவதே தெரியாது. இப்படி யெல்லாம் காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை, என் நெஞ்சில் உருவாக்கியது. பாவம்; ஆண்டாள் யார்பெற்ற பெண்ணோ பெற்றவர்கள் தூக்கியெறிந்துவிட்டுப் போய் விட்டார்கள் ; யாரோ ஒரு ஆழ்வார் எடுத்து வளர்த்தாராம்! அந்த அம்மையார், கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன் தான் கலந் தாரோ ; தெரியவில்லை. ஒரு பாட்டுப் படித்து விட்டே இந்தப் பாடுபடுகிறேனே ; எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பைத்தியக்கார விடுதியின் ஓரத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டியதுதான். என் எப்போதுமா இப்படிப்பட்ட தாள்கள், நூல்கள் கிடைக் கின்றன ! பெரும்பாலும் எச்சில் இலை ; வாழைப்பழத் தோல்; ஆரஞ்சு, கமலா தோல் ; இப்படித்தான் ஏதாவது வந்து கொண் டிருக்கும். சில நேரங்களில் செத்துப்போன எலிகளை வயிற்றுக்குள் போடுவார்கள். முனிசிபாலிடி வண்டி எப்போது வரும் என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். தெருக்கோடியில் ஒரு வீட்டிலிருந்து இரவு 12 மணிக்கு மேல் வேலைக்காரப் பையன் என்னருகே வருவான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு விஸ்கி, பிராந்தி முதலிய மதுப் புட்டிகளின் மூடிகளை என்னிடம் வீசிவிட்டு விறுவிறு என்று போய்விடுவான். எனக்கு இரவெல்லாம் உடம்பு நடுங்கும்; எங்கே போலீசார் என்மீது சந்தேகப்பட்டு என்னைக் கொண்டு போய் மதுவிலக்குச் சட்டபடி உள்ளே போட்டு விடுவார்களோ என்று! பிறகு எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன் ; குப்பைத்தொட்டி எங்கேயிருந்தால் என்ன வென்று! ஒருநாள் மூன்றாவது வீட்டிலிருந்து என் பக்கமாகக் காரில் போன ஒருவர் சட்டைப் பையிலிருந்த ஓரு கடிதத்தைக் கிழித்து என்மீது போட்டு விட்டுப் போய்விட்டார். பரபரப்புடன் அதைப் படித்தேன். ஒழுங்கற்ற முறையில் அது கிழிந்து போயிருந்ததால் தொடர்பாகப் படிக்கமுடியவில்லை. யாருக்கோ வாத்தியாரம்மா வேலை வாங்கித்தருவதாக வாக்களித்து இதற்குக் கைமாறாக முன்