பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனக்கிண்ணம் - 39 “திராவிட உட்கல வங்க ” என்ற தாகூரின் பாட்டிலே- "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும் என்ற மனோன் மணீயம் ஆசிரியர் ஏட்டிலே "திராவிடர் வரலாறு என்ற சரித்திரப் புத்தகத்திலே -"மாமல்லன் காலத்தில் திராவிட பாணியில் செதுக்கப்பட்டது" என்ற மகாபலிபுரத்துச் சிற்பக் கல்வெட்டிலே--“ திராவிட வித்யாபூஷணம் என்று சாமிநாத அய்யரவர்களுக்குத் தரப்பட்ட பட்டத்திலே திராவிட என்கின்ற தேன்மலர் மணம் வீசுவதைத் தென்றல் நடையில் எடுத்துச் சொன்னார். ' 66 "2 அத்தகைய திராவிடத்தைக் காப்பாற்ற மணமக்கள் முன் வர வேண்டுமென்பதை, 'காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு-கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!' என்ற கவிதை வரிகளால் குறிப்பிட்டார். பின்னர் வாழ்வுப் பாதையில் குறுக்கிடும் வளைவுகளை எடுத்துச் சொல்லி எதையும் தாங்கிடும் துணிவு வேண்டும் என்று தைரியமூட்டினார். குடும்பம் என்பது மணல் வீடு கட்டி மரப் பொம்மை வைத்து மழலை விளையாட்டு விளையாடிய கொழுந்துப் பருவ நிகழ்ச்சியல்ல எனக் காட்டி, காட்டி, 'வாழ்க்கை வானில் பறக்கச் சிறகடிக்கும் வெண் புறாக்காள் ! வாழ்க நீவிர் வளமெல்லாம் பெற்று! !’ என வாழ்த்தினார், பலமுறை. புறநானூற்றில் உலவிடும் தாய்மார்கள் பலர் தேவை என்று முழங்கினார். சுருக்கமாகவும் சுவையாகவும் புறநானூறு கூறுகிற ஓர் அழகான கவிதைக்கு மெருகேற்றி எளிய நடையிலே கீதமிசைத்துத் தந்தார். அந்தக் கீதமே ஒரு கதையாக இருந்தது. குடிசைதான் ஒரு புறத்தில் கூரிய வேல், வாள் வரிசையாய் அமைந்திருக்கும், வையத்தைப் பிடிப்பதற்கும், வெம்பகை முடிப்பதற்கும், வடித்து வைத்த படைக்கலம்போல் மின்னும், மிளிரும். புலியின் குகையினிலே அழகில்லை ; புதுமையல்ல ! கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலை காட்டா மானத்தின் உறைவிடம், மறவன் மாளிகை!