பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனக்கிண்ணம் 66 43 வெள்ளைக்காரன் மீனைப் பார்த்து சப்மரீன் செய்தான் ; நாம் மச்சாவதாரம் செய்தோம்!" என்று முடிப்பாள் கமலா. இப்படி வளர்ந்தது அவர்களின் இன்ப வாழ்வு. இந்தப் புதியஜோடி கண்டு கந்தனின் தாய் களிப்படைந்தாள் என்றாலும், கமலாவும் இப்படியெல்லாம் கடவுளைத் திட்டுகிறாளே ! அடுப்பங் கரையில் கிடக்க வேண்டியதுகளுக்கு இந்த வம்புகள் எல்லாம் ஏன்?” என்ற ஆத்திரம் மெல்லத் தலைநீட்ட ஆரம்பித்தது. வெளிப் படையாகக் கண்டித்தால் மகனுக்கு வருத்தம் வருமே 86 68

யென்று ஜாடைமாடையாகக் கண்டிக்கத் தொடங்கினாள். அப்படிக் கண்டனங்கள் கிளம்பும்போது கா தலனின் இன் முகத்தை நினைத்துக் கமலா ஆறுதல் பெறுவாள். அது மட்டு மல்ல ; அவள் தோழி விஜயா அடிக்கடி சொல்லியிருக்கிறாள் : வீட்டிலேயிருக்கிற பெரியவர்களின் மனதை நோகவிடும்படி நடக்காதே! அனுசரித்து அனுசரித்து நட ! என்ற பொன்மொழிகளை அவற்றை நினைத்துக் கொள்வாள் கமலா. உடனே ஓடிப் போய் அவள் கொடுத்த அன்புப் பரிசை-அந்தச் சந்தனக் கிண்ணத்தை எடுத்து து முகத்திலே அணைத்துக்கொள்வாள். சந்தனக் கிண்ணத்தின் விளிம்புகளிலே அவள் தன் ஆருயிர்த் தோழியின் உயிர்த்துடிப்புள்ள இதழைக் காணுவாள் ; அந்தக் கிண்ணத்தின் பளப்பளப்பிலே தோழியின் சிரிப்பைக்கண்டு துள்ளியெழுவாள். காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்குப் பேச்சுத்துணை சந்தனக் கிண்ணந்தான்! மாமியாருக்கு மருமகள் மீது ஏற்பட்ட கோபம் அவள் வலுவில் பேசவந்தாலும் அதிகமாகப் பேசுவது கிடையாது. பால்யத்தோழி - பள்ளித் துணை விஜயா அத்தக் கிண்ணத்திலே தன் கன்னத்தைக் காட்டிக் கமலாவைவிட்டுக் கிள்ளச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். கிண்ணத்திலே மின்னும் விஜயா என்ற எழுத்துக்கள் கமலாவிடம் எத்தனையோ பழங்கதைகளைச் சொல்லும்; கமலாவும் கண்ணை மூடிக்கொண்டு மூடிக்கொண்டு அந்த அந்த இன்பக்கதைகளைக் கேட்பாள். 66 99 - திடீரென்று நாட்டிலே தீப்பொறி கிளம்பிற்று. தமிழை ஒழிக்கத் தருக்கர்கள் படை திரட்டினர். அதற்குத் தடைபோடத் தரணியாண்ட இனத்தவர் புறப்பட்டனர். வடநாட்டு இந்தி மொழி ஏகாதிபத்தியம் திராவிடத்திலே திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து மொழிப்போர் வீராவேசமாக மூண்டது.