பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை! என்ற கவிதையை ற முழங்கியவாறு தமிழர் பட்டாளம் கிளம்பிற்று. சிங்கங்கள் சிறைபுகுந்தன. சிசுக்களுடன் பல தமிழ்த்தாய்களை அடக்குமுறையின் கோரவாய் விழுங்கியது. மொழிகாக்கப் போன இருவர் -தாளமுத்து, நடராசன் எனும் மாவீரர்கள்-தம் மூச்சைக்காக்க முடியாமல் ஆக்கப்பட்டனர் இந்தி வெறியர்களால். தமிழகமெங்கும் கொதிப்பு-குமுறல்- புயல்! கமலா பலகணி வழியாக வீதிப்புறத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறாள். அவளுடைய கையிலே அந்தச் சந்தனக் கிண்ணமிருக்கிறது. சந்தனக் கிண்ணத்தோடு பேசி முடித்தாகி விட்டது ; இப்போது அவள் எதிர்பார்ப்பது அலுவலகத்திலிருந்து திரும்பும் கந்தனை. 66 கண்களும் வலிக்கத் துவங்கிவிட்டன ; கந்தனைக் காணோம்; ஒரு பெருமூச்சோடு பலகணியைவிட்டு அகல முயன்றாள். அமைதியாயிருந்த தெருவிலே ஓர் அலைமுழக்கம் புறப்பட்டது. பரபரப்போடு கமலா பலகணி வழியாகப் பார்வையைச் செலுத்தி னாள். ' தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! தாளமுத்து-நடராசன் புகழ் வாழ்க! என் று பரணி பாடியபடி ஒரு தமிழர் பட்டாளம் பவனி வந்துகொண்டிருந்தது. ஒளவைக்கிழவி போன்ற ஒரு மூதாட்டி கம்பீர நடைபோட்டுக் கையிலே கொடி ஏந்திப் பிறை போல வளைந்த கூனல் எப்படி நிமிர்ந்தது என, பார்ப்போர் ஆச்சரியப்படும்படி அந்த அணிவகுப்புக்குத் தலைமை வகித்துச் சென்றாள். நெடிது உயர்ந்த சேரன்- செங்குட்டுவனோ வந்து விட்டான் என அதிசயிக்கத்தக்க அளவுக்கு வாட்ட சாட்டமான ஒரு மனிதர்-அஞ்சா நெஞ்சர்—படையின் தளபதியாக வீரநடை போட்டார். அந்தப் புலிநிகர் மாந்தர்களின் ஒலிமுழக்கம் கமலாவை வீறுகொள்ளச் செய்தது. திருமணத்தன்று, "காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு ! கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு!" என்று தலைவர் சொன்ன கவிதை நினைவுக்கு வந்தது. நினைவு அலைகளிலே சுழன்றுகொண்டிருந்த அந்த ஏந்திழையை ஒரு குரல் திடுக்கிட வைத்தது. தமிழ் வாழ்க! -தென்றல் நடையிலே! ஒழிக!'-புயல் நடையிலே! இரண்டு நடையிலும் கிளம்பிய ஒலி கந்தனுடையது தான் ! கமலா வெளியே ஓடிவந்தாள். கந்தன், 66 99 6 6 இந்தி ந் தி