பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் அழுதான் கந்தன். மகனை விட மருமகள்மீது அதிக ஆத்திரம் அந்த மாதாவுக்கு. வேலையற்ற நிலை-வேலை கிடைக்காத நிலை. வேதனை வாழ்வு. வேலையில்லாத கந்தன் இயக்க வேலையிலேயே முழு நேரமும் ஈடு பட்டான். அந்த ஊர் செயலாளர் அவன்தான். கந்தனைத் தெரியாதார் யாருமில்லை. அவன் புகழ் வளர்ந்தது. ஊரிலே இயக்கச் சார்பிலே ஒரு பொதுக் கூட்டம். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டான். சொற்பொழிவாளருக்கு வழிச் செலவுக்கு இருபது ரூபாய் அனுப்பியாக வேண்டும். 6 6 . பணம் வசூல் ஆகவில்லை. கூட்டம் நின்றுவிடக் கூடாதே யென்று துடித்தான். வீட்டிலே நிம்மதியின்றி அலைந்தான். சிறைச்சாலையிலே கமலாவுக்குச் சரியான உணவும் பாதுகாப்பு மின்றி உடல் நலம் கெட்டது. அது ஏழ்மையின் காரணமாகத் தொடர்ந்தது. டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கித் தரப் பணமில்லை. வீட்டிலிருந்த வெள்ளிச் சாமான்களையும் விற்றுச் சாப்பிட்டாகி விட்டது. சந்தனக் கிண்ணம் ஒன்றுதான் பாக்கி வெள்ளியிலே ! அதை விற்றாவது மருந்து வாங்கிக் கொடேன்!" என்றாள் தாயார். அவனுக்கு அதை விற்க மனம் வரவில்லை. மனைவியின் தோழி யளித்தது அந்தச் சந்தனக் கிண்ணம். ஆகவே மறுத்துவிட்டான். இப்போது சொற்பொழி வாளருக்கு அனுப்பப் பணம் இல்லையென்றதும் அவன் விழிகள் அந்தக் கிண்ணத்தைத் தேடின. நோயுற்றிருந்த கமலா தூங்கிக் கொண்டிருந்தாள். கைகள் நடுங்கக் கந்தன் சந்தனக் கிண்ணத்தை எடுத்தான். அடகு வைத்துப் பெற்ற பணத்தைச் சொற்பொழி வாளருக்கு அனுப்பினான். . புகைவண்டி கூட்டம் குறிப்பிட்டபடி ஏற்பாடாகியது. நிலையத்துக்குக் கந்தன் புறப்பட்டான் சொற்பொழிவாளரை வரவேற்க! அப்போது அவன் தாய் கமலாவைத் திட்டிக்கொண் டிருந்தாள். கூர்ந்து கவனித்தான். சந்தனக் கிண்ணத்தைக் கமலா தொலைத்துவிட்டாள் என்பதுதான் தாயின் குற்றச்சாட்டு. காய்ச்சலோடு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் கமலா, எதுவும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். தன் அருமை விஜயா காணாமற் போய்விட்டதை நினைத்துக் கண்ணீர்விட்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கந்தன் புகைவண்டி நிலையத் திற்கு ஓடினான். புகைவண்டி வந்தது. ஆனால் கூட்டத்திற்கு வரவேண்டிய சொற்பொழிவாளர் வரவில்லை. அசையாமல் .