பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் முதலியார்.அருமையான யோசனை. இப்பொழுதே மேல் மாடிக் கதவை மூடிவிடுங்கள்' 66 "GJ GOT?" ஜனங்கள் வந்து... சாமியார் எங்கே? என்பார்கள். சாமி மேல் மாடியில் யோகானந்தம் புரிகிறது. கடவுளோடு கதவை திறக்க முடியாது என்று கூறிவிடுவோம்." இதைச் செய்தால் என் வெள்ளி வந்துவிடுமா?' பேசுகிறது. 66 "வெள்ளியாலேயே நீர் வீடு கட்ட நான் வழி செய்கிறேன். நான் சொல்வதை முதலில் கேட்கவேண்டும். 66 66 சரி... கேட்கிறேன்.' 99 சந்தோஷம்! நான் இப்பொழுதே புறப்படுகிறேன்.' "நீ எங்கே போகிறாய் சம்பந்தம்?" . "நான் போகுமிடம் எனக்கே தெரியாது. ஒருவாரத்தில் உமக்கு ஒரு பார்சல் வரும். அதை யாருக்கும் தெரியாமல் மேல் மாடியில் கொண்டுபோய் உடைத்துப் பாரும்.' 6 6 66 நான் இழந்த வெள்ளிக் கட்டிகளின் பார்சலா?" ஆமாம். நான் வருகிறேன். பார்சல் வரும் வரையில் மேல் மாடி திறக்கப்படக்கூடாது. சம்பந்தம் மறைந்து விடுகிறான். முதலியார் முகத்தில் சிந்தனைக் கீறல்கள் ! சங்கிலிச்சாமியார் நிஷ்டையில் இருப்பது ஊரெங்கும் பரவி விட்டது. "சாமி கடவுளோடு பேசுகிறது. 66 66 ஒரு வேளை சொர்க்கத்துக்குப் போனாலும் போய்விடும் !” சிவனோடு பேசுகிறாரோ ? விஷ்ணுவோடு பேசுகிறாரோ? யார் கண்டது?" 66 "சக்தி பூஜைக்காரரப்பா ! தேவியோடுதான் பேசுவார்." சின்னப்பண்ணை முதலியாருக்கு ஒரு நாள் ரயில்வே பார்சலில் ஒரு பெட்டி வந்துவிட்டது. முதலியார் ஆவலோடு பெட்டியை வீட்டில் இறக்கச் சொன்னார்.