பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலிச்சாமி 57 பெட்டியின்மேல் 'வாசனைப் பொருள் ' என்ற எழுத்துக்கள் தீட்டப்பட்டிருந்தன. முதலியார் ஏங்கிக் இரவு எப்பொழுது வரும் என்று முதலியார் கிடந்தார். சில மணி நேரங்களில் இரவும் வந்து விட்டது. வேலைக்காரர்கள் எல்லாம் அன்று அனுப்பப்பட்டார்கள். சீக்கிரம் வீட்டுக்கு வாசனை வந்து பார்சலில் இருந்து கமகம் வென் று கொண்டிருந்தது. திடீரென்று சம்பந்தமும் வந்து சேர்ந்தான். 66 சம்பந்தம்! எல்லாம் வெள்ளிக்கட்டி தானே !!" என்றார் ஆவலாக முதலியார். சம்பந்தம் தலையாட்டிக் கொண்டே “ ஆமாம் தூக்குங்கள் என்று கூறினான் ஆணையிடும் தோரணையில். று . " இருவரும் பார்சலைத் தூக்கினார்கள். உழைப்பு என்பது என்னவென்று தெரியாத முதலியார்...பெட்டியின் கனத்திலிருந்து ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார். வியர்வைத் துளிகள் சொட்டச் சொட்ட... மேல் மூச்சு வாங்க... 'அப்பாடா' என்று பார்சலை மாடியில் இறக்கினார். "வேலையின் கஷ்டம் தெரிகிறது என்றான் சம்பந்தம் கிண்டலாக. " "வெள்ளியின் கஷ்டமப்பா !" என்று முதலியார் முணு முணுத்துக் கொண்டார். சம்பந்தம் பார்சலை உடைக்க ஆரம்பித்தான். அவசரந் தாங்காத "முதலியார், அப்பா சம்பந்தம்! அது வெள்ளிதானே?" என்று துடித்தார். 66 ஆமாம் - சம்பந்தம் பெட்டியை உடைத்து விட்டான். முதலியார் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டார். பிறகு எழுந்தார். அவர் அலறிவிடாமல் வாயைப் பொத்தி விட்டான் சம்பந்தம். பெட்டிக்குள் புழுப்போலச் சுருண்டு கிடந்தது ஒரு மனித உருவம்.