பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது எழுத்துக்களில் தென்றல் தவழும் அதே நேரத்தில் தீ நாக்குகளை வான்முகடுவரை நீட்டும் எரிமலைக் குமுறலும் கிளம்பும் ! அவர் எழுத்துக்களில் சமுதாயத்தின் அடித்தட்டி லிருந்து மேல்தட்டுவரை உள்ளவர்களைப் பற்றிய அழுத்தந்திருத்தமான கருத்துக்களைக் காண முடியும். அத்தகைய கருத்துக்கள் அடங்கிய சிறுகதைக் கருவூலமே இந்த நூல். 37 சிறுகதைகள் அடங்கிய இந்த நூலை வெளியிடு வதற்கு எங்களுக்கு உரிமை அளித்த கலைஞருக்கு நன்றி கூறுகிறோம். தமிழ்ப்பெருங்குடிமக்கள் என்றும்போல் தங்களின் பேராதரவை நல்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. சென்னை-28 25-9-77 --தமிழ்க்கனி பதிப்பகத்தார்.