பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் நான் தயங்கமாட்டேன். அபூர்வமான ஆலோசனை அதைப் போலவே இளவரசன் இன்பசாகரனை ன்பசாகரனை வாழ்க்கைப் புதரிலிருந்து பறித்துப் போடச் சரியான வழி கண்டு பிடிக்கிறேன். இன்பசாகரன் இளம் அரும்பு! அந்த அரும்பை விரலால்கூட நசுக்கி எறிந்துவிட முடியும்-நான் நினைத்தால்! ஆனால், அந்த அரும்பு இருக்குமிடமோ அரண்மனைத் தோட்டம். வேலியற்ற கொல்லையல்ல, வேந்தன் வீட்டு முல்லை மொக்கு இருக்குமிடம்! சர்வஜாக்கிரதையாகச் சதியை நிறைவேற்றவேண்டும். இளவரசன் சாக வேண்டும். ஆனால் நாம் கொன்றதாகத் தெரியக்கூடாது- கொலை செய்யப்பட்டதாகவே செய்தி வருதல் கூடாது. இயற்கை யாக இறந்தான் என்று நாடும், நாடாளும் மன்னனும் நம்ப வேண்டும். அதற்கு வழிசொல்லுகிறேன் !' அரசரின் இளைய ராணியாவதற்கு வழங்கினேனே-அதை மறந்தாயா! 06 66 66 சொல்லும் மைத்துனரே சீக்கிரம் ! ” இன்னொன்று கொடு, சொல்லுகிறேன் ! இதோ ! ஒன்றென்ன ; ஒன்பது! ஆகாகா! சுழல்! சொக்கி விட்டேன்-சொக்கிவிட்டேன்! முத்தப்போதையிலே மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. நாளை விடியற்காலை திட்டத்தோடு வந்து உன்னைச் சந்திக் கிறேன். 66 86 86 "" வேந்தர் பள்ளியறையை விட்டுப் போன பிறகு வாரும்." அவர் இருக்கும்போது வர எனக்குப் பைத்தியமா? “ சரி ! திட்டம் நேர்த்தியாக இருக்க வேண்டும்! ” 6 6 66 66 உன்னைப் போல? இல்லை ; நம் உண்மைக் காதலைப் போல ! கைகாரியடி சுழற்கண்ணி நீ ! கட்டிலறையிலே அரசனிடம் கூட இப்படித்தானே கதையளப்பாய்? 66 எனக்கு இரண்டு இருக்கிறது அத்தான் இருதயம் ! ஒன்றில் உமது ஆசை ; மற்றொன்றில் சுந்தரபுரியின் சிம்மாசனத் தைப்பற்றிய கனவு ! இரண்டாவது ருதயத்தால்தான் அரசனைப் புகழ்கிறேன்-ஆராதிக்கிறேன்-ஆனந்தம் பொழிகிறேன் ! 66 99 சுழல்! நேரமாகி றது வருகிறேன் ! அதோ அரசர் வருவது போல் தெரிகிறது! 99