பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பிவிட்டார்கள் ம ஊரில் ஒரே ரகளை-மூலைக்கு மூலை போலீஸ் லாரிகள் பறந்து கொண்டிருந்தன ! இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சிவப்புத் தொப்பிக்காரர்களின் கூச்சல், ஊரெங்கும்- தெருவெங் கும்--வீடெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது. எந்த வீட்டிலும் கதவு மூடியிருக்க வில்லை. குறட்டைச் சப்தம் கேட்கவுமில்லை. தகப்பன்மார்களின் பேச்சு வார்த்தைகளையும்-பரபரப்பையும் கண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் கூட வேடிக்கை பார்த்துக் தாய் கொண்டிருந்தன. ஒரு வீட்டின் வாயிற்படியில் அமர்ந்து ஒரு கிழவி பாக்கு இடித்துக் கொண்டிருப்பவள் ... தன்னையறியாது தூங்கிவிட்டாள்...பாவம் பழுத்துப்போன இமைகள்! 'பூம் பூம் ' என்ற ற காரின் சப்தம் அவளைத் திடுக்கிட வைக்கவே, பாக்கு உலக்கையைத் தடதடவென்று தரையில் இடிக்க ஆரம்பித்தாள். இதைக் கட கட' வென்று கைகொட்டி ரசித்தான் அவள் பேரன். 6 உ காரிலிருந்து இறங்கிய போலீஸ் வீரர்கள் வீட்டில் புகுந்து கிழவியை ஏதும் கேட்காமலேயே சோதனை போட ஆரம்பித்தனர். பரணியைப் பார்த்தனர். அடுக்களையை ஆராய்ந்தனர். கதவிடுக் கைக் கவனித்தனர். கடைசியில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்தனர். ஐயோ பூச்சாண்டி' என்று கிழவியின் பேரன் கீழே விழுந்ததுதான் மிச்சம். இப்படி எல்லா வீடுகளிலும் சோதனை. அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டது ! காரணம், லீலா மில் சொந்தக்காரர் ராமதுரை அன்று இரவு ஏழு மணிக்கு 6